Friday, April 12, 2024

பா.ரஞ்சித்தின் ‘குதிரை வால்’ திரைப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரை வால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித்.

அப்படம் அவ்வருடத்தின் சிறந்த படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரை வால்’ திரைப்படம். இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் – அஞ்சலி பாட்டில் இருவரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின், டீசர்  கடந்த அக்டோபர் 22-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக் கதையில், அரசியல் வசனங்களும் இடம் பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதியிலிருந்து 19-ம் தேதிவரை  திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News