Thursday, April 11, 2024

பாடல் எழுதுவதில் இந்த மூன்று விதிகள்!:  கவிஞர் தாமரை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடல் எழுத மூன்று நிபந்தனைகள் வைத்திருக்கிறேன் என்று பாடலாசிரியர் தாமரை வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் தாமரை, “பாடல்களில் தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளில் சேர்க்க மாட்டேன். ஆபாச வார்த்தைகளை சேர்க்க மாட்டேன். இரட்டை அர்த்தம் வரும் அர்த்தம் வரும் வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். இதுவே என்னுடைய மூன்று நிபந்தனைகள். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் பல பாடல்களின் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால், காலப்போக்கில் என்னை புரிந்துகொண்டவர்கள் பாடல் சூழ்நிலைகளோடு என்னை தேடி வந்தார்கள். இந்த சமூகத்தை திருத்துகிறேனோ  இல்லையோ கெடுக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், போதைப் பொருள்களை தூக்கி பிடிக்கும் பாடல்களுக்கு என்னிடம் இடம் இல்லை” என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News