மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் ஜோடியாக நடித்து 2018-ல் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி தயாரிப்பாளரும் டைரக்டருமான கரண் ஜோகர் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாதிய பாகுபாடுகளை பேசும் படமாக பரியேறும் பெருமாள் தயாராகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.