Thursday, April 11, 2024

மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.பி. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஒன்று 1989ல்  வெளியான புதுப்புது அர்த்தங்கள். இப்படத்துக்காக றந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இப்படத்தில் ரகுமான், கீதா, சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் ரகுமான் பாடகர். இவரது  மனைவியாக கீதா நடித்திருப்பார்.  நடித்திருப்பார்.   பாடகனாய் விளங்கும் ரகுமான் மீது அதிக அன்பு செலுத்தும் ரசிகைகளின் செயலை விரும்பாது சந்தேக கண்ணோட்டத்தில் சிறப்புற நடித்திருப்பார் கீதா.

இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஆத்திரத்தில் ரகுமானுடன் சண்டை போடும் காட்சி. உணர்ச்சிவசப்பட்டு டேபிளில் இருந்த சாசை தூக்கி எறிந்து விட்டேன். அது ரகுமான் முகத்தில் தெளித்துவிட்டது.

உடனே இயக்குனர், ரகுமானுக்கு முத்தம் கொடுத்து விட்டு மீண்டும் முகத்தில் இருக்கும் சாசை நக்கி விடு என்றார். இதன் மூலம், என்னுடைய கோபம் மட்டுமின்றி, அது தணிந்ததும் தத்துரூபமாக தெரியும் என்றார். அதே போல் நடித்தேன். அந்தக் காட்சி வரவேற்பைப் பெற்றது. ஸ்பாட்டில் உடனே யோசித்து சிறந்த காட்சியை உருவாக்கும் கேபியின் திறமையைக் கண்டு அதிசயத்துப்போனேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News