Wednesday, April 10, 2024

ஜெய்சங்கர் முன்யோசனை! நெகிழ்ந்த உதவியாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெய்சங்கர், பிஸியாக இருந்த நேரம். அவரிடம்  உதவியாளராக ராஜாராமன் என்பவர் பணியாற்றினார்.

அவரிடம் ஜெய்சங்கர், “ஆயுள் காப்பீடு அதிகாரி ஒருரிடம் உன்னைப் பற்றி சொல்லி இருக்கிறேன். அவரிடம் சென்று  எல்.ஐ.சி. ஏஜெண்ட் அப்ளிகேசன் வாங்கிட்டு வா” என்றார்.

உதவியாளருக்கு வருத்தமாக போய்விட்டது. “நான் சிறப்பாகத்தானே பணிபுரிகிறேன். என்னை வேலையை விட்டு ஏன் நீக்க நினைக்கிறீர்கள்” என்று சோகத்துடன் கேட்டார்.

அதற்கு ஜெய்சங்கர், “எனக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் நான் வாழ்ந்துவிடுவேன். உனக்கு சேமிப்பு இருக்காது. திடீரென எனக்கு வாய்ப்பு குறைந்தால் உன்னையும் பாதிக்கும். ஆகவே எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக இருந்துகொண்டே என்னிடமும் பணியாற்று. எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி பாலிசி போட வைக்கிறேன். உனக்கு இரட்டை வருமானம் கிடைக்கும்” என்றார்.

இதைக் கேட்ட உதவியாளர் நெகிழ்ந்துவிட்டார்.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=EVORwJ1Ez2o

 

- Advertisement -

Read more

Local News