Thursday, April 11, 2024

“காறித்துப்புற மாதிரி படம் எடுக்கும்  மாரி செல்வராஜ்!” : ஆத்திரப்பட்ட இமான் அண்ணாச்சி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, பட விழா ஒன்றில் பேசும்போது, இயக்குநர் மாரி செல்வராஜை கடுமையாக கிண்டலடித்துவிட்டார்.

“இன்றைய சினிமா மிக மோசமான நிலையில் உள்ளது. மேல் தட்டு கீழ்த்தட்டு என தட்டு தட்டாக பிரித்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.

மக்கள் அனைவரும் சாதிய பாகுபாடுகள் கடந்து தற்சமயம் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட சாதியினர் தங்களுடைய சாதியை தூக்கி பிடிப்பதற்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுத்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்” என்றவர், “அது என்ன படம்” என கேட்க, கூட்டத்தில் பலரும், “மாமன்னன்” என்றனர்.

“ஹாங்…” என்று இழுத்த இமான், “இப்பொழுதெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே காரித்துப்பும்படி இருந்தால்தான்  வெற்றி படமாக அமைகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் 100 நாள் 200 நாள் ஓடிய திரைப்படத்தின் இயக்குனர்கள் கூட இப்படி படம் எடுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் ஜாதியை வைத்து படம் எடுத்தால் மக்களிடையே பிரச்சினையை உண்டு செய்யும் என்று. அவங்கள பார்த்து நல்லா கத்துக்கோங்க” என்று காட்டமாக பேசினார் இமான்.

 

- Advertisement -

Read more

Local News