தனது முதல் படமான, பன்னீர் புஷ்பங்கள் படம் குறித்த நினைவலைகளை பிரபல இயக்குநர் பி.வாசு சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், , “1981ம் ஆண்டு வெளியான அந்த படத்தோட மொத்த பட்ஜெட்டே 5 லட்சம் ரூபாய்தான். இளையராஜாவுக்கு அப்போது சம்பளம் ஒரு லட்ச ரூபாய். ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அவரை அணுகினேன். அவரும் ஒப்புக்கொண்டு மெட்டு அமைத்துக் கொடுத்தார். தயங்கித் தயங்கி சம்பளம் குறித்து கேட்டேன். அதற்கு அவர்,
‘இதுதானய்யா உன் முதல் படம், முதல்ல படம் ஹிட் ஆகட்டும்’ எனக் கூறிவிட்டார். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பி.வாசு.