Thursday, April 11, 2024

“நான் பயித்தியக்காரன்!”: மாரி செல்வராஜ்  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வடிவேலுவும் உதயநிதியும் கலந்துகொண்ட மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது இருவருமே சொல்லி வைத்ததை போல ஒரே பதிலை கூறினர். அதாவது மாரி செல்வராஜ் செம்ம டென்ஷன் பார்ட்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர்களை அடித்து விரட்டுவார், திட்டுவார் என்றனர்.

இதற்கு மாரி செல்வராஜ், “நான் ஹிட்லர் எல்லாம் கிடையாது, பைத்தியக்காரன். உதவி இயக்குநர்களும் தான் என்னை திட்டுவார்கள், அவர்கள் எல்லாருமே என் ஊர்காரர்கள் தான். அதனால் உரிமையோடு திட்டுவேன், ஊரில் என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள், ஆனால், நான் ஜெயித்த பின்புதான் எல்லாம் மாறியது” என்றார்.

இந்த நிலையில்,  “என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன்” என ஏற்கெனவே மாரி செல்வராஜ் அளித்த பேட்டி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News