‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில், உதயநிதி ஸ்டாலின், “ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனாக இருப்பார். அவருடைய அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கண்ணாபின்னானு கத்துவாரு, ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும்” என கூற, அதற்கு வடிவேலுவும் ஆமாம் என சொன்னார்.
இதேபோல், மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு நேர்காணலில், ‘என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன்’ என்று அவரே கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது ஒருபுறம் தீயாக பரவ, மறுபுறம் அவர் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் அப்பாவாக வரும் கூத்து கட்டும் கலைஞரை கன்னத்தில் அறைந்ததாக அவரே கூறும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிர்களும் மாரி செல்வராஜ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.