மும்பை விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய நடிகர் ஷாருக் கான் வெளியே வரும்போது, ரசிகர் ஒருவர் அவரை நெருங்கி சென்று தனது மொபைல் போனில் செல்பி புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்று உள்ளார்.
அப்போது, நடிகர் நடிகர் ஷாருக் கான் அவரை அந்த பக்கம் தள்ளி விட்டார்.
விமான நிலையத்தில் இருந்து ஷாருக் கான் வெளியே வந்ததும் ரசிகர்கள் கும்பலாக அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, பலரும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முயன்றனர். அதில் இந்த ரசிகர் சற்று நெருங்கி சென்று உள்ளார். இதனால், அவரதை தள்ளி நிற்கச் சொல்லி தட்டிவிட்டார் சாரூக் கான்.
இதில் அந்த ரசிகரின் போன் சற்று தள்ளி போய் கீழே விழுந்தது. அந்த நபரை முறைத்து பார்த்து விட்டு திரும்பிய நடிகர் ஷாருக் கான் மற்றவர்களை நோக்கி புன்னகைத்து விட்டு, உடனடியாக தனது காரை நோக்கி விரைந்து சென்றார்.