Thursday, April 11, 2024

வதந்தி பரப்பாதீர்!:  கீர்த்தி ஷெட்டி ஆவேசம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி, ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்த அவர் இப்போது, ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘பிரபல ஹீரோ ஒருவரின் மகன் அவரை பின் தொடர்வதாகவும் அவருடன் நட்புக்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் தான் அதை விரும்பவில்லை’ என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

இதற்குப் பதிலளித்துள்ள கீர்த்தி ஷெட்டி, “இதுபோன்ற ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவதையும் பொய்ப் பிரச்சாரம் செய்வதையும் நிறுத்துங்கள். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் வேண்டாம் என நினைத்தேன். இது வேகமாக பரவுவதால், பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News