பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘நடிகர் சிம்பு குறித்து ஏன் நிறைய காண்ட்ரவசிகள் வருகின்றன’ என்பது குறித்து பேசினார்.
அவர், “தனது அப்பாவின் இயக்கத்திலேயே நடித்துக்கொண்டு இருந்த சிம்பு, முதன் முதலில் வெளி இயக்குநர் இயக்கத்தில் நடித்தபடம் என்னுடையதுதான். அவரை வைத்து இரு படங்கள் இயக்கி இருக்கிறேன்.
சிம்பு மிகச் சிறந்த மனிதர். ஆனாலும் அவரைச் சுற்றி காண்ட்ரவசியான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சினிமாவில் எல்லோரும் முகமூடி போட்டுக்கொண்டே பழகுவார்கள். அதாவது ஆளுக்கேற்ற முகமூடி. ஆனால் சிம்பு வெளிப்படையானவர், எதார்த்தவாதி. இதுதான் அவர் மீது தேவையற்ற காண்ட்ரவசிகள் வர காரணம். அவரும் மற்றவர்களைப் போல, ஆளுக்கேற்ற முகமூடி அணிந்து வாழ்ந்தால் இத்தனை காண்ட்ரவசிகள் வராது. ஆனால் அந்த போலித்தனத்தை அவர் விரும்பவில்லை” என்று ஏ.வெங்கடேஷ் கூறினார்.
இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவும், மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறியவும் கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..