பிரபல நடிகர் கவுண்டமணியின் உடன் பிறந்த அக்கா மயிலாத்தாள் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அவரது உண்மையான பெயர் சுப்பிரமணி., அவர் நாடகத்தில் கவுண்டர் ஆக நடித்தாலும், நிறைய கவுண்டர் போட்டதாலும் கவுண்டமணி என்று மாற்றிவிட்டார்கள். அவர் ஏழாவது தான் படித்திருக்கிறார். படிச்சிட்டு இருக்கும்போது அவன் சினிமாவுக்குள் போய்விட்டார்.
முதலில் நிறைய நாடகங்களில் நடித்து இருந்தார். அதன் மூலம் தான் அவனுக்கு சினிமா மீது அதிக ஆசை வந்தது. பின் சென்னைக்கு சென்று நடிகன் ஆனார்” என்றார் மயிலாத்தாள் .