Friday, April 12, 2024

S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கை கோர்க்கும் சமுத்திரக்கனி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நீதிக்கு தண்டனை’, ‘சாட்சி’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நான் சிகப்பு மனிதன்’ என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை.’

இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி CBCID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வாகை சூட வா’, ‘மௌன குரு’ படத்தில் நடித்த இனியா நடிக்கிறார். மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக ‘பிக் பாஸ்’ புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் ‘பருத்தி வீரன்’ சரவணன் நடிக்கிறார்.

ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரனும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல்மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார்  ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள், இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.

மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத் தொகுப்பை பிரபாகரனும், கலை இயக்கத்தை வனராஜூம் கவனிக்கிறார்கள்.

இந்த ‘நான் கடவுள் இல்லை’ படத்தைப் பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் பேசும்போது,  “குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும் படத்தை தற்செயலாக சமுத்திரக்கனி பார்த்தார். பார்த்துவிட்டு அந்தக் குறும் படத்தைப் பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார்.

இதை வெள்ளித்திரையில் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால், தான் அதில் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும் படத்தை வெள்ளித்திரைப் படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார். சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன். கதையை கேட்டவர், “சார் எத்தனை நாள் என்னுடைய தேது வேண்டும்”  என்று கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு, பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக்கொடுத்தார்.

இத்திரைப்படம் சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான படமாக அமையும். அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும், சமூக அக்கறையும் பாராட்டப்பட வேண்டியது…” என்றார் இயக்குநர் எஸ்.ஏ.சி..

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News