Thursday, April 11, 2024

“மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா  ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில்,  உலகளவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராஜமௌலிக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா.

தனது ட்விட்டர்  பக்கத்தில், “ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்”என பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இது போன்ற ஒரு கொலை மிரட்டலை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இதை ராம் கோபல் வர்மா கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

Read more

Local News