தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு தனது கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் விகாஸ் பால் ஜோதிகா இயக்கத்தில் அஜய்தேவ்கான் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.
திரில்லர் படமான இது மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது.
ஜோதிகா கடைசியாக 1998-ல் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற இந்தி படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.