தமிழ், மலையாளம் என பன்மொழிகளில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்யில், “ஷகிலா என்றாலே ஆபாச நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் ஆபாச காட்சியில் நடித்தது இல்லை. அதே நேரம், எனது படங்களில் செக்ஸ் காட்சிகளை பிட்டு போட்டு ஒட்டி ரிலீஸ் செய்தார்கள். சென்சார் முடித்த படங்களையே இப்படி செய்திருக்கிறார்கள்.
இதன் பிறகு நான் நடித்த இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சென்சார் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது.
நான் மோகன்லால் சார் ரசிகை. மம்மூட்டி மேலே எனக்கு கோபம் இல்லை. ஆனால், அவர் தான் என் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார். இது கூட நான் கேள்விபட்டது தான்.
அவரின் கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் 10 லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் படம், ரூ.4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வரத்தானே செய்யும். அப்படி தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும்.
அவர்கள் என்னை தடை செய்ய நினைத்த போது, நானே என் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’’ என்று அந்த பேட்டியில் ஷகிலா கூறியுள்ளார்.