Thursday, April 11, 2024

முதல் கணவரால் 2-ம் கணவருக்கு வந்த கோபம்!: குட்டி பத்மினியின் சோகம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தற்போது திரைப்படம் டிவி தொடர்களில் நடித்து வருபவர் குட்டி பத்மினி. தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர், தனது சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

“காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். குழந்தையும் பிறந்தது. தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து பிரபலமாக இருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. வீண் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பிரிந்தோம்.

வேதனையில் இருந்த எனக்கும் என் குழந்தைக்கும் ஆதரவாக இருப்பார் என நம்பி இன்னொருவரை திருமணம் செய்தேன்.

மகிழ்ச்சியாகத்தான் குடும்பம் போய்க்கொண்டு இருந்தது. இந்த நிலையில் என் முதல் கணவர் விபத்தில் சிக்க சிரமப்படுகிறார் என்பதை அறிந்து அவருக்கு உதவினேன். என்ன இருந்தாலும் அவர் என்னுடன் வாழ்ந்தவர்.. என் மகளின் தந்தை.

ஆனால் இப்படி நான் உதவி செய்வது இரண்டாவது கணவருக்குப் பிடிக்கவில்லை. அவரும் பிரிந்தார்” என தனது வாழ்க்கை சோகத்தை பகிர்ந்துள்ளார் குட்டி பத்மினி.

 

- Advertisement -

Read more

Local News