Thursday, April 11, 2024

பிரபல நடிகரின் மனைவி கைது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகர் தாடி பாலஜியின் மனைவியும் நடிகையுமான நித்யாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மாதவரம் பகுதியில் வசித்து நித்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே காரை நிறுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய் தகராறு நீடித்து வந்தது.
இந்தநிலையில், தன் காரை சேதப்படுத்தியதாக மணி காவல் நிலையத்தில் நித்யா மீது புகார் அளித்தார். .

காரை நித்யா சேதப்படுத்துவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக கொடுத்தார்.

இதையடுத்து மாதவரம் போலீசார் நித்யா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சட்டப்பிரிவு 427 (பிறர் சொத்துகளை சேதப்படுத்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால், அவரை காவல்நிலைய பிணையில் போலீசார் விடுவித்தனர்.

- Advertisement -

Read more

Local News