Friday, April 12, 2024

“நயன்தாராவுக்குத்தான் வேறு இடத்தில் சம்பந்தம் இருக்கு…” – ராதாரவியின் குத்தல் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் பேசும்போது நடிகை நயன்தாராவை நடிகர் ராதாரவி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதனால் நடிகர் ராதாரவியை அப்போது அவர் இருந்த தி.மு.கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார்கள். இந்த நீக்கத்தைத் தொடர்ந்து தி.மு.கழகத்தில் இருந்து விலகிய ராதாரவி, பாரதீய ஜனதா கட்சியில் போய்ச் சேர்ந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவை கிண்டல் செய்த விவகாரம் பற்றி சமீபத்தில் ராதாரவி பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “நான் நயன்தாராவைப் பத்தி தவறான அர்த்தத்தில் எதையுமே சொல்லலையே.. ‘அவங்க கவர்ச்சியாவும் நடிக்கிறாங்க. சீதை வேஷத்துலேயும் நடிக்கிறாங்க. ரெண்டுக்குமே கச்சிதமா பொருந்துறாங்க’ன்னுதான் சொன்னேன். எனக்கும் நயன்தாராவுக்கும் சம்பந்தமே இல்லையே.. ஆனால், அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு வேற இடத்துல சம்பந்தம் இருக்குன்னு.. இதைத்தான் பெண்களை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு சொல்லி தி.மு.க.வில் இருந்து என்னைத் தற்காலிகமா நீக்கிட்டாங்க. ‘எதுக்குப்பா தற்காலிகமா நிக்குறீங்க..? நிரந்தரமாவே நீக்குறீங்களேன்’னு சொல்லிட்டு நானே வெளில வந்துட்டேன்..” என்று பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

- Advertisement -

Read more

Local News