1999ல் வெளியான சேது திரைப்படம் மூலம்தான் பாலா திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். அந்தத் திரைப்படம்தான், நடிகர் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமைந்ததும் இந்தப் படம்தான்.
இப்படத்தை தயாரித்த கந்தசாமி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர், “சேது திரைப்படம் இயக்குநர், நடிகருக்கு எல்லாம் நல்ல பெயரை எடுத்துத்தந்தது.. அடுத்தடுத்த படங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. தவிர விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கும் லாபம் கிடைத்தது.
ஆனால் வியாபாரம் தெரியாமல், நான்தான் நட்டமடைந்துவிட்டேன்.
விட்டதை பிடிப்போம் என அடுத்த படம் எடுக்க தயாரானேன். அப்போதைய பிரபல ஹீரோ ஒருவரை புக் செய்து, அவருக்கு அட்வான்ஸாக நாற்பது லட்ச ரூபாய் கொடுத்தேன்.
ஆனால் அவர் கால்ஷீட்டும் தரவில்லை.. நாற்பது லட்ச ரூபாயையும் திரும்பித் தரவில்லை” என்று வேதனையுடன் சொன்னார்.
நாற்பது லட்ச ரூபாயை ஆட்டையைப் போடட ஹீரோ யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..