Thursday, April 11, 2024

2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சரத்குமார். தற்போதும் பல படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என நடித்து வருகிறேன்.

இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி.

இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும்.

அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News