Thursday, April 11, 2024

சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கு என்னதான் ஆச்சு? குழப்பத்தில் பா.இரஞ்சித்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா.இரஞ்சித் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அப்படத்தின் மூலம் ஒலிப்பார்.இவருகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விகாரம் நடிப்பில் இவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் சார்பட்டா பரம்பரை 2 பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அவரவர் உரிமைகளை பெற ஒடுக்கப்பட்டவர்கள் அநீதியை எதிர்த்து கேள்வி கேட்பதை போன்ற திரைப்படங்கள் அதிகம் வர வித்திட்டது இயக்குனர் பா.இரஞ்சித். அட்டக்கத்தியில் தொடங்கி மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்து பெரிய வரவேற்பை பெற்றன. இதை பலரும் ஏற்றுக்கொண்டு வரவேற்றார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்கூட வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் பா.இரஞ்சித் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம் என்று மணிரத்னம் புகழ்ந்து பேசினார். இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர் இரஞ்சித்தை பலரும் பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள்.

இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது இப்படம் எதிர்பார்த்த அளவில் பெரிய வரவேற்பை பெறவில்லை.தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார் பா.இரஞ்சித். இப்படமானது விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. கோலார் தங்க வயலில் மக்கள் பட்ட துயரங்களை மையப்படுத்தி பீரியட் ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய படங்களில் முக்கியமான ஒன்று .நேரடியாக ஓடிடியில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி அப்படம் மெகா ஹிட் ஆனது. வடசென்னை மக்களின் வாழ்வியலில் குத்துச்சண்டை எப்படி கலந்திருந்தது என்பதை அருமையாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருந்தார். ஆர்யாவுக்கும் சிறந்த படமாக அமைந்தது. பெயர் கிடைத்தது.இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை 2 குறித்து புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.அதன்படி படத்தை S ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.ஆனால் தற்போது கடுமையான நிதி நெருக்கடி S ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருப்பதன் காரணமாக இந்த படத்திலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக பேசப்படுகிறது. எனவே இப்படத்தை தனியாக தயாரிப்பதா அல்லது வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதா என்று இயக்குனர் பா.இரஞ்சித் குழப்பத்தில் இருப்பதாகவும் அது தான் சார்பட்டா பரம்பரை 2 பட தாமதத்துக்கு காரணம் என்றும் தகவல் கசிந்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News