Thursday, April 11, 2024

“என்னமோ செய்யுது”:மாமன்னன் பாடல் குறித்து நடிகர் சூரி ட்வீட்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ராசா கண்ணு’ பாடல் வெளியானது. நடிகர் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல், தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் “பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News