The post மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் நடித்து அசத்திருப்பார்கள்.ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று வெவ்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்திருந்தார்.
அந்நியன், ரெமோ மற்றும் அம்பி என அவரது மூன்று கதாபாத்திரத்திங்கள் மற்றும் அதன் மாற்றங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படத்தின் பாடல்களும் பெரும் மவுஸை பெற்றன.
இந்நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் மேலும் மேம்படுத்தப்பட்டு விரைவில் தமிழில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பாக வரும் மே 17ம் தேதி அந்நியன் படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழில் அதிகமான படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன.இப்படி பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிவரும் சமயத்தில் அந்நியன் படமும் ரீ ரிலீஸ் ஆகவிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்… appeared first on Touring Talkies.
]]>கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சுந்தர்.சி.யின் அரண்மனை 4, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் டீன்ஸ் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு, கவின் நடித்த ஸ்டார், சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த தி ஃபுரூப், உள்ளிட்ட படங்கள் மே மாதத்தில் வெளியாகவுள்ளன. இவை ரிலீஸ் ஆகும் என்றாலும், அதிகாரபூர்வ தேதி இன்னும் சில நாட்களில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
கீர்த்தி சுரேஷின் ரீவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாத்தா ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக தயாராகி விட்டன. இரண்டில் ஒன்றை திரையிட முயன்றனர். ஆனால், இரண்டு படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது என்று தகவல்.அதேபோல, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்த ‘கருடன்’ படம் வெளியாகும் என்றனர். ஆனால், படத்தின் பேட்ச் வொர்க் இன்னும் முடியாமல் இருப்பதால், அது முடிந்த பிறகு மட்டுமே அறிவிப்பு வெளியாகும்.
மிஷ்கினின் பிசாசு 2, அமீர் நடித்த உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளிவரும் எண்ணத்தில் உள்ளன. தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் நடிக்கின்றனர்.
அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று மங்காத்தா மறுவெளியீடு செய்யப்படுகின்றன.
The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்… appeared first on Touring Talkies.
]]>The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்றுபடத்தை இயக்கி இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாது அந்தப்படம் மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்தது. அப்படத்தில் ரித்திகா சிங் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக அவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல அமைந்தது.
மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார் அப்படம் சில காரணங்களால் தள்ளிபோனது. இந்நிலையில் விக்ரமின் மகனான துருவ் விக்ரமிற்கு ஒரு கதையை கூறியிருக்கிறார் என தகவல் வெளி வந்துள்ளது.விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்திற்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்படத்தில் கபடி வீரராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படம் மட்டும் ரிலீசுக்கு தள்ளாடி வருகிறது. இந்த இரு படங்களிலும் இருவேறு வெர்ஷன்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆசையுடன் காத்திருக்கின்றனர்.
விக்ரமின் 62வது படமாக வீர தீர சூரன் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. சித்தா படத்தின்மூலம் கவனம் பெற்ற அருண்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கவுள்ளார் .இந்தப் படத்தின் அறிமுக டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டிலும் டீசருடன் வெளியாகி படத்தின் பெயர் வீர தீர சூரன் என்று அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கெத்தாக கொண்டாடினர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த பிரபல நடிகர் சுராஜ் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இவரது கதாப்பாத்திரத்திம் மிகவும் ஆழமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.
The post வீர தீர சூரனுக்கு வில்லன் ரெடி… டாப் மலையாள நடிகரை உள்ளே இழுத்த சித்தா இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க? வீர தீர சூரன் அதென்ன பாகம்-2 appeared first on Touring Talkies.
]]>வாழை பழம் காமெடி போல் இந்த படத்தின் டைட்டிலோட பாகம் 2-ஐ பார்த்தால் ஒன்னு இந்தா இருக்கு இன்னொன்னு எங்க இருக்கு என்று தான் கேட்க தோன்கிறது.சற்றே வித்தியாசமாக இந்தப் படத்தை `பாகம் 2′ என டைட்டிலில் கூறியுள்ளார்கள்.இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் பாகம் 1 இதன் முன்கதை என்ன என்பதை பற்றி வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பை துவங்க டைட்டில் டீசரை வெளியிட்டுவிட்டு உடனடியாக பறக்க நினைத்தபோது தேர்தல் இருந்ததால், படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார்கள். இந்தப் படத்திற்காக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வந்தார் இயக்குநர் அருண்குமார். இப்போது லொக்கேஷன்கள் ஓகே செய்யப்பட்டு விட்டாதால் இம்மாதமே படப்பிடிப்புக்குக் கிளம்பவுள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கிவிடுவார்கள் எனவும் தொடர்ந்து ஒரு மாதம் அங்கே படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் மாவட்டங்களை நோக்கி பயணிக்க உள்ளார்கள் படக்குழு.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் முன்னதாகவே இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.விக்ரமின் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களில் ‘தெய்வத் திருமகள்’ படத்தின் பாடல்கள் நிச்சயம் உண்டு.அப்போது இருந்தே அவருக்கும் விக்ரமிக்கும் இடையேயான ஒரு இணக்கம் நல்லவிதமாக இருப்பதால் சீயான் விக்ரமுக்காக சிறப்பான ஸ்பெஷலாக பாடல்கள் கொடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.
The post ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க? வீர தீர சூரன் அதென்ன பாகம்-2 appeared first on Touring Talkies.
]]>The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.
]]>இப்படி இருவரும் பிஸியாக பயணிக்க விக்ரம் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான தூள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டார் விஜய் என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?
தமிழில் எதிரும் புதிரும், குருவி, ஒஸ்தி, தில், தூள் மற்றும் கில்லி என சூப்பர் ஹிட்டான படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் தரணி.தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ஆனால் விஜய் ஏதோ சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்திருக்கிறார்.இப்படி தவிர்த்த சமயத்தில் தரணி தூள் படத்தை விக்ரம் நடிப்பில் இயக்க அப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.நடிகர் விக்ரமின் மிகசிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
இவ்வாறு ப்ளாக் பஸ்டர் ஆன படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டோமே எனவும் இப்பேர்பட்ட சிறந்த இயக்குனர் தரணியை நழுவவிட கூடாது என முடிவெடுத்த விஜய் அவரின் அடுத்த படத்தில் நடித்தார் அப்படி அவர் நடித்து மெகா சூப்பர் ஹிட்டான படம் தான் கில்லி.இப்படம் 20 வருடங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.
]]>The post சியான் 62 டைட்டில் வெளியீடு! தெறிக்கவிடும் வீர தீர சூரன்… appeared first on Touring Talkies.
]]>அதேசமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மகிழ் திருமேனி இயக்ககத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படாததால் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சித்தா படத்தின் வெற்றி நாயகன் ஒருபக்கம் சித்தார்த் என்றால் மறுபக்கம் இப்படியொரு அருமையான கதையை சித்தார்த்துக்கு கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்குமார் தான். சித்தார்த்துக்கே ஹிட் கொடுத்த இயக்குநர் தனக்கும் ஹிட் கொடுப்பார் என நினைத்து உடனடியாக சியான் 62 படத்துக்கு அவரை தேர்வு செய்தார் விக்ரம்.
இந்நிலையில் சியான் 62 படத்துக்கு வீர தீர சூரன் என வெறித்தனமான தமிழ் தலைப்பை அருண் குமார் வைத்திருக்கிறார்.நேற்று டைட்டில் வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் படத்தின் டைட்டில் வழக்கம் போல லீக் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சியான் 62 டைட்டில் வீடியோவில் மளிகை கடையில் கடைக்காரராக சியான் விக்ரம் பொட்டலம் போட்டுக் கொண்டு இருக்க அவரை ஒரு கும்பல் போட்டுத் தள்ள ஆயுதங்களுடன் வருகின்றனர். கடைசியில் வேலை பார்த்துக் கொண்டே துப்பாக்கியை ரெடி செய்து கொல்ல வரும் ஆட்களில் ஒருத்தனை சுடவும் அனைவரும் அலறியடித்து கொண்டு அந்த கும்பல் ஓடும் காட்சியை தற்போது டைட்டில் அறிவிப்புடன் வெளியிட்டுள்ளனர்.
The post சியான் 62 டைட்டில் வெளியீடு! தெறிக்கவிடும் வீர தீர சூரன்… appeared first on Touring Talkies.
]]>The post ‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்? appeared first on Touring Talkies.
]]>நடிகர் விக்ரமின் திரை பயணத்தில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு.அவற்றுள் சேது, தில், தூள், ஜெமினி, காசி போன்ற பல படங்களில் அவர் நடிப்பின் நாயகன் என்பதை காட்டியிருப்பார்.அவரது நடிப்பு ஒவ்வொரு படத்தில் தனித்துவமாக இருக்கும் பல பாராட்டுகளையும் பெறும் என்பதில் ஆச்சரியமில்லை.
இப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் இயக்குனர் சரண் இயக்கத்தில் அவர் நடித்த ஜெமினி திரைப்படம். இப்படம் இன்றுவரை மக்கள் விரும்பும் படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பிடித்து இருக்கும். இருந்தாலும் சமீப காலமாக விக்ரம் நடித்த படங்கள் எவையும் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கைக்கொடுவில்லை. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாக உள்ளது.
அதேசமயம் நேற்றைய தினம் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ மிக்க நன்றி.. என்று குறிப்பிட்டு for all the love pouring in today. Interesting updates..இன்னும் சில தினங்களில், Any guesses?? & don’t forget to ஓ போடு!! ‘ என்று பதிவிட்டிருந்தார்.சில தினங்களில் முக்கியமான அப்டேட்கள் வெளிவரும் என்று சொல்லியிருக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு செய்த தினம் நேற்று, இவர் போட்ட ‘ஓ போடு’ பதிவினால், ரசிகர்கள் ஜெமினி படத்தின் பாகம் 2 அப்டேடாக இருக்குமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்படி இல்லையெனில் கர்ணன், கருடா போன்ற படங்களின் முக்கிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.எப்படி இருந்தாலும் இன்னும் சில தினங்களில் அவர் சொன்ன அப்டேட்கள் என்ன என்பது தெரிந்துவிடும்.
The post ‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்? appeared first on Touring Talkies.
]]>The post வேட்டையன் படத்தில் நடிக்க தயங்கிய பகத் பாசில்… ஞானவேல் போட்ட ஸ்கெட்ச்! appeared first on Touring Talkies.
]]>தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீஸான விக்ரம் திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருந்தார்.அவரின் என்டிரியை கண்டு திரையங்கையே அதிர விட்டார்கள் ரசிகர்கள்.பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் சம்பவம் செய்து நடிப்பில் அசத்திருந்தார பகத் பாஸில்.
இவ்வாறு தொடர்ந்து மலையாள சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்றுவரும் பகத் பாஸில் ஜெய் பீம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாப்பை பெற்றார்.பகத் பாஸில் இந்த படத்தில் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானது ரஜினிக்கு வில்லனாக மிரட்ட போகிறார் என எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டியது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக பகத் பாஸில் காமெடி கேரக்டரில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார் என தெரியவந்தது.மிரள வைக்கும் வில்லனாக நாம் கண்ட பகத் பாஸில் காமெடி கேரக்டரில் நடிப்பது ஆச்சரியத்துடன் எதிர்பார்ப்பையும் எழுப்பி உள்ளது.இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்பதால் அவர் இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார் என ஒருபுறமும் ஆரம்பத்தில் காமெடி கேரக்டர் என்றவுடன் பகத் பாசில் நடிக்க தயங்கியதாகவும் பின்னர் இயக்குனர் கதாபாத்திரத்தை விளக்கியவுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாக மறுபுறமும் தகவல் பரவுகின்றன.
எது எப்படியோ அவர் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் இணைந்து நடிப்பது அதுவும் வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிப்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தையும் மேலும் வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.
The post வேட்டையன் படத்தில் நடிக்க தயங்கிய பகத் பாசில்… ஞானவேல் போட்ட ஸ்கெட்ச்! appeared first on Touring Talkies.
]]>The post சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எவ்வளவு கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>எடுத்த உடனே ஹீரோவாக எல்லாம் நடிக்காமல் சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி சூப்பர் ஹிட்டான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து பெரிதும் வரவேற்பைப் பெற்றார்.
அந்நேரத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வர ஆரம்பித்தனர் இவர்களின் தேர்வு விஜய் சேதுபதியை வைத்து தங்களது படத்தை எடுப்பதாக இருந்தது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களின் மூலம் வரிசையாக ஹிட் கொடுத்தார். தனது வித்தியாசமான தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டுமா என்ன வில்லனாகவும் நடிப்பேன் என பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்து கெத்து காட்டினார் விஜய் சேதுபதி.
அதோபோல ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் அவரது ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மகாராஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். பிசாசு 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.அதாவது ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டதற்கு தனது சம்பளமாக 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதை படக்குழு ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.வில்லனாக நடிக்க வேண்டும் என வரும் கோரிக்கைகளை தடுக்கவே வில்லனாக நடிக்க சம்பள பணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
The post சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எவ்வளவு கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>