The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.
]]>சல்மான்கானை நம்பி சென்ற நிலையில் சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டாதால் படம் இல்லாமல் திணறிக்கொண்டு கையோடு இருக்கிறார் அஜித்துக்கு பில்லா என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் சல்மான்கான்-ஐ வைத்து படம் எடுக்கலாம் என்று பாலிவுட் பக்கம் சென்றார்.அப்போது விடாமுயற்சி படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்.ஆனால் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்.
தற்போது ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட்ட சல்மான் கான் கடைசியில் கிரீன் சிக்னல் காட்டியது ஏஆர் முருகதாஸ்க்கு தான். சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்திற்கான வேலையிலும் இறங்கி உள்ளார்.
மேலும் சல்மான் கானின் கால்ஷுட் கையில் இருக்கிறது என கெத்தாக சுற்றிய விஷ்ணுவர்தன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருக்கிறாராம். இப்போது தமிழ் நடிகர்கள் படத்தில் நடிக்க பெரிதாக யாரும் முன் வரவில்லை.கடைசியாக பாலிவுட்டிலேயே வேறு யாராவது நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.
]]>The post என்னது பட வாய்ப்பே இல்லாமல் காத்திருக்கும் நயன்தாராவா? appeared first on Touring Talkies.
]]>கடைசியாக நயன்தாரா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டார் ஆனால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.தற்போது எல்.ஐ.சி என்ற அந்த படத்தை செவன் ஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரை வைத்து இய்க்கி வருகிறார்.இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சராசரியாக நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளமாக பெறுவார்.ஆனால் அதிரடியாக அவர் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.எல்.ஐ.சி படத்தில் நடிக்க 10 கோடியை சம்பளமாக கேட்ட போது அதை ஏற்கவில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து நழுவிக் கொண்டார் என செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
இவர் தனது சம்பளத்தை திடீரென உயர்த்த காரணம் இந்தியில் முதல் படத்திலேயே என்ட்ரி ஆகி மாஸ் காட்டினார் அதுமட்டுமல்லாமல் அப்படி 1000 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை நொறுக்கியது இதனால் தனது மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்க தனது சம்பளத்தை நயன்தாரா உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது சம்பளத்தை அதிகமாக கேட்டால் மார்க்கெட் சூடு பிடித்து இருக்கிறது என்பார்கள் எனவே பட வாய்ப்புகள் அதிகமில்லாத சமயத்தை பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணத்தால் தான் தனது சம்பளத்தை டபுளாக அதிகரித்து இருக்கிறார் என தகவல் அடிப்படுகிறது.
The post என்னது பட வாய்ப்பே இல்லாமல் காத்திருக்கும் நயன்தாராவா? appeared first on Touring Talkies.
]]>The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.
விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.
The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.
]]>நயன்தாரா தற்போது டெஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள எல்ஐசி படத்திலும் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்த எல்ஐசி படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 81, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், அதேபோல் முக்கியமான லீட் கேரக்டரில் ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகுமார் இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர் என வலம் வருபவர். இவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக தன் பயணத்தை தொடங்கினார்.பின்னர் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா ஏன் அப்படி பண்றாரு?: விக்னேஷ் சிவன் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “நயன்தாராவை பொறுத்தவரை ஒரு விஷயம் சரியானது என தோன்றினால் மட்டுமே அதனை செய்ய முடிவெடுப்பார். அத்துடன் அதனை புரொமோட் செய்வார்.
அவர் பெரும்பாலும் தனது சொந்த படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவது இல்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார் ” என்று விக்னேஷ் சிவன் பேசினார்.
The post நயன்தாரா ஏன் அப்படி பண்றாரு?: விக்னேஷ் சிவன் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post அஜித்தின் ஏ.கே.62-வில் த்ரிஷா இல்லை.. காரணம் இதுதானாம்! appeared first on Touring Talkies.
]]>படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் அந்தணன், வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
அவர், “அஜித்தின் ஏ.கே.62-ல், த்ரிஷாவை நடிக்க வைக்கத்தான், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் விரும்பியது. ஆனால் இதை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கவில்லை.
அவர் இதற்கு முன் இயக்கிய “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் நடித்து இருந்தனர். இவர்களில் சமந்தா கதாபாத்திரத்துக்கு முதன் முதலில் த்ரிஷாவைத்தான் விக்னேஷ் அணுகினார்.
அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட பட டைட்டிலில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட விக்னேஷ் சிவன் முடிவெடுத்து த்ரிஷாவுக்கு தெரிய வந்தது. இது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இதனால் அவர் மீது விக்னேஷ் சிவனுக்கு கடும் கோபம். அதனால்தான் தான் இயக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு இடம் இல்லை என சொல்லிவிட்டார்” என்றார் அந்தணன்.
The post அஜித்தின் ஏ.கே.62-வில் த்ரிஷா இல்லை.. காரணம் இதுதானாம்! appeared first on Touring Talkies.
]]>The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தோல்வி,வெற்றி அனுபவம் என்று எத்தனையோ வலிகளை கடந்து விருதுகளை சுமந்து சாதனை பெண்ணாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நேரடி பேட்டி கொடுத்த நயன்தாரா. என்னை போன்ற சினிமாவில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது மேக்கப். அதுதான் எங்களை வாழ வைக்கிறது. எங்களின் உணர்வுகளை முகபாவனைகளை கொண்டு வர உதவுகிறது.
சாப்பிட நேரமில்லாமல் இருந்திருப்போம் ஆனால் மேக்கப் போடாமல் இருந்ததில்லை. கேமரா முன்னாடி நிற்கும் போது எங்களை நடிகையாக உணரவைப்பது இந்த மேக்கப் தான் ஆகவே அது எங்களுக்கு கடவுள் மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நயன்தாரா.
The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படம் குறித்தான சமீபத்திய செய்தி என்னவென்றால், UV கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வழங்க இருக்கிறது என்பதுதான்.
தெலுங்கில் உள்ள முன்னணி விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான UV கிரியேஷன்ஸ் ‘கனெக்ட்’ படத்தைத் தெலுங்கில் வெளியிடத் தற்போது தயாராகி வருகிறது.
ஹாரர் – த்ரில்லர் வகையில் அமைந்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் கதையும் நயன்தாராவின் நடிப்பும் பார்வையாளரகளை நிச்சயம் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.
அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த ‘மயூரி’ மற்றும் தாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் அஷ்வின் சரவணனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு அறிமுகம் இருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது.
இந்தப் படம் திரையரங்குகளில் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.
The post நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது appeared first on Touring Talkies.
]]>The post ஜாலியா படம் எடுக்க காரணம்: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “சினிமாவுக்கு வர்றப்போ டெரர் கதைகள்தான் நிறைய வச்சிருந்தேன். ஆனா சென்னை 28, சரோஜா மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து ஜெயிக்கிறதை பார்த்தேன். அதுக்கு அப்புறம்தான் நானும் அந்த டிராக்குக்கு மாறினேன். நானும் ரவுடிதான் போன்ற படங்களை இயக்கினேன்.
தவிர சாதாரணமாகவே நான் ஜாலியான ஆளு. வாழ்க்கையில் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டேன். எவ்வளவு கஸ்டம் வந்தாலும், அதை டேக் இட் ஈசி என கடந்துவிடுவேன். என் ஜாலியான படங்கள் ஜெயிக்க இதுவும் காரணமாக இருக்கும்” என்றார்.
The post ஜாலியா படம் எடுக்க காரணம்: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.
]]>The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>வாடகை தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு பல விதிமுறைகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.
ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது என்றும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தே தாம் வாடகைச் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து தகவல்களும் வெளியாகியிருந்தது.
இவர்களின் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை தனிக் குழுவையே அமைத்தது. இப்போது இந்த விவகாரம் குறித்து அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் முறையான ஆதரங்களை சமர்ப்பித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுத்தவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சரியான நெறிமுறைகளை தம்பதிகள் இருவரும் பின்பற்றியதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டே பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் அது தொடர்பான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தம்பதியினரில் யாாராவது ஒருவருக்கு குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் தம்பதியினர் இருவருமே கடந்த 2020-ம் ஆண்டே இதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் சொல்கிறது.
ஆனால் இவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சரியான ஆவணங்களை மருத்துவ நிர்வாகம் முன் வைக்க தவறியதாகவும் இதனால் அந்தத் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவாரணைக் குழு புகார் அளித்துள்ளது.
அதில் இவர்களுக்கு மருத்துவராக இருந்தவர் சரியான சிகிச்சைகளை பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளை தனியார் மருத்துவமனை ஒழுங்காக பராமரிக்கவில்லை. இதனால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>