The post “ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை appeared first on Touring Talkies.
]]>“ஏலே’ படம் தியேட்டருக்கு வந்து 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என்னும் ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தால்தான் அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடுவோம்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அந்தச் சங்கத்தின் தலைவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, “யார் தடுத்தாலும் ‘ஏலே’ படம் வெளியாகும். மக்களைச் சென்றடையும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
The post “ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post தினத்தந்தி, தினகரனைப் புறக்கணிக்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்..! appeared first on Touring Talkies.
]]>பொதுவாக தமிழ்த் திரையுலகம் விளம்பர வடிவத்தில் வளரத் துவங்கிய காலக்கட்டத்தில் இருந்தே சினிமா துறையைத் தூக்கிப் பிடித்து வந்தது ‘தினந்தந்தி’ மற்றும் ‘தினகரன்’ பத்திரிகைகள்தான்.
இந்த இரண்டு பத்திரிகைகளில்தான் கட்டுப்பாடில்லாமல் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை வெளியிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த இரண்டு பத்திரிகைகளும் சினிமா விளம்பரங்களுக்காகவே அதிகமாக வாங்கப்பட்டன.
இதன் காரணமாகவே வெள்ளி தோறும் இன்றுவரையிலும் ‘சிறப்பு சினிமா செய்தி மலரை’ இந்த இரண்டு பத்திரிகைகளுமே வெளியிட்டு வருகின்றன.
இந்தத் தினசரிகள் இல்லாமல் மற்ற தினசரிகளும் அவ்வப்போது தயாரிப்பாளர்கள் தங்களது பட விளம்பரத்தை அளித்து வந்தாலும், இந்த இரண்டுக்கு மட்டுமே தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். இதற்கேற்றாற்போல் இந்த பத்திரிகைகளும் சலுகை விலையில் விளம்பரங்களை அனுமதித்து வந்தன.
காலப்போக்கில் தயாரிப்பாளர்களின் செலவுகளையும், பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்களின் வித்தியாசத்தைக் கட்டுப்படுத்தவும் விளம்பரத்தில் பல கட்டுப்பாடுகள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் கொண்டு வரப்பட்டது.
இப்போது இந்தக் கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளின் விற்பனை சரிந்ததையடுத்து பல்வேறு நிதி சிக்கல்களில் இந்த இரண்டு பத்திரிகைகளும் சிக்கிக் கொண்டன. அந்தச் சிக்கல்களுக்காக ஊழியர்கள் குறைப்பு, ஊதியம் குறைப்பு என்று பல்வேறு நடவடிக்கைகளை இந்தப் பத்திரிகைகள் மேற்கொண்டன.
அவற்றுடன் சினிமா விளம்பரங்களுக்கான விளம்பரக் கட்டணத்தையும் கிட்டத்தட்ட 4 மடங்கு அளவுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளும் உயர்த்திவிட்டன. இது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பேசியபோது “எதையும் மாற்ற செய்ய முடியாது” என்றே பதில் வந்தது. இடையில் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கமாக ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவானது.
தற்போது அதிகமாக படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இந்தச் சங்கத்தில் மட்டுமே இருப்பதால் இவர்களும் விளம்பரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக இந்த இரண்டு பத்திரிகை நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், “விளம்பரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது…” என்று பத்திரிகைளின் நிர்வாகத்தினர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.
இதனால் தற்போது ‘இந்து தமிழ்’ பத்திரிகையில் இந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அவர்களோ தற்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’ பத்திரிகைகளுக்குத் தயாரிப்பாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்த தொகைக்கே விளம்பரத்தை வெளியிட முன் வந்திருக்கிறார்கள்.
“எனவே, இத்தனையாண்டுகளாக ‘தினத்தந்தி’, ‘தினகரன்’ பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருந்த நாங்கள், தற்போது ‘இந்து தமிழ்’ பத்திரிகைக்கு இடம் மாறுகிறோம்…” என்று இன்றைக்கு ஒரு அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளனர் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.
“பத்திரிகையுலகத்தில் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் இருக்கும் ‘தினத்தந்தி’ மற்றும் ‘தினகரனை’ புறக்கணித்து நான்காமிடத்தில் இருக்கும் பத்திரிகைக்கு போவதற்கு இந்தச் சங்கத்தினருக்கு எப்படி தைரியம் வந்தது..?” என்று திரையுலகத்தினர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
ஏனெனில் ‘தந்தி தொலைக்காட்சி’, ‘சன் தொலைக்காட்சி’ இவைகள் இரண்டுமே தமிழகத்தில் பலம் வாய்ந்தவை. அதிலும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரில் முக்கால்வாசி பேர் தங்களது படங்களுக்கான டிவி விளம்பரத்தை சன் தொலைக்காட்சிக்குத்தான் தருவார்கள். சன் தொலைக்காட்சிக்குத் தங்களது படங்களின் டிவி உரிமையைக் கொடுப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சங்கத்தின் இந்த உத்தரவினை மற்ற தயாரிப்பாளர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது..!
The post தினத்தந்தி, தினகரனைப் புறக்கணிக்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்..! appeared first on Touring Talkies.
]]>The post VPF கட்டணம் தொடர்பாக புதிய ஒப்பந்தம்-மார்ச்-31 வரை புதிய படங்கள் திரையிடப்படும்..! appeared first on Touring Talkies.
]]>கடந்த 2 மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே VPF கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
அந்தப் பேச்சுவார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, QUBE நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள், இந்த VPF பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.
2021 மார்ச் 31-ம் தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து VPF கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.
“இந்த ஒப்பந்தத்தின் மூலம், 2021 மார்ச் 31-ம் தேதிவரையிலும் தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.
அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும்.
இதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத் துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்…” என்று மூன்று சங்கத்தினரும் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளனர்.
The post VPF கட்டணம் தொடர்பாக புதிய ஒப்பந்தம்-மார்ச்-31 வரை புதிய படங்கள் திரையிடப்படும்..! appeared first on Touring Talkies.
]]>The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.
]]>வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது.
இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன.
பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.
VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ அழுத கதையாக, டிஜிட்டல் புரொஜெக்சன் நிறுவனங்கள் திடீரென்று ‘VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு ரத்து’ என அறிவித்து இருக்கின்றன. நல்லது..!
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.
பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் தற்போது VPF கட்டணத்தை விலக்கியிருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்களது சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்களில் மட்டும் எங்களது திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதேசமயம் VPF கட்டணத்தைக் கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல, நிலையான ஒரு தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருக்கின்றன.
தயாராகி வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படங்களில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’, ‘களத்தில் சந்திப்போம்’,’ எம்.ஜி.ஆர். மகன்’ ஆகியவை தீபாவளி ரேஸில் உள்ளன.
இவற்றில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்..!
The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.
]]>The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.
]]>காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான்.
“சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள்.
ஆனால், “இது திரையீட்டுக்கான கட்டணம்தானே ஒழிய.. புரொஜெக்டருக்கான கட்டணம் இல்லை…” என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம்.
இந்த முடிவுறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது “வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கிடையாது. ஆனால், இங்கே மட்டும் கியூப்புக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இதற்குப் பதிலளித்த தியேட்டர்காரர்கள், “அப்போ ஹாலிவுட் படங்களுக்குத் தருவதுபோல நாம் பங்கு பிரித்துக் கொள்ளும் பெர்சேண்ட்டேஜை வைத்துக் கொள்வோமா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது தற்போதைய கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதாக இறங்கி வந்தது. இதையும் தியேட்டர்காரர்கள் 60 சதவிகிதமாக்கச் சொல்ல அதையும் கியூப் ஏற்றுக் கொண்டது. “இதுவும் டிசம்பர் 31-ம் தேதிவரையிலுமே…” என்று சொன்னார்கள் கியூப் நிறுவனத்தார்.
ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து “அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையிலும் வேண்டும்…” என்றார்கள். இதனை தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனத்தினரும் ஏற்றுக் கொண்டாலும் தயாரிப்பாளர்கள் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.
“அந்த மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் இந்தக் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம். இதை ஒரு நிபந்தனையாக வைக்கிறோம்…” என்றார்கள். ஆனால், இதனை கியூப் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
பேச்சுவார்த்தையின் இன்னொரு கட்டத்தில், “தியேட்டர் உரிமையாளர்களே வி.பி.எஃப். கட்டணத்தை கட்டிக் கொள்ளட்டும். படத்தைத் திரையீட்டு முடிந்த பிறகு தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஷேர் தொகையில் அந்தப் பணத்தை அவர்கள் கழித்துக் கொள்ளட்டும்…” என்று தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
“அப்படியென்றால் எந்தவொரு பெரிய படத்திற்கும் தியேட்டர்காரர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் முன் பணம் பெறக் கூடாது.. இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டால் நாங்கள் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டத் தயார்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காததால் இந்த வாதமும் தோல்வியாகிவிட்டது.
கடைசியாக இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முறிந்து போனது.
இதையடுத்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களது சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் நமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்க உறுப்பினர்களின் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது..!
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று காலை கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி.எஃப். கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் சலுகை இந்த நவம்பர் மாதம்வரையிலும்தான் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றே இந்த அரசு விரும்புகிறது. வி.பி.எஃப். பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் இருந்தால் நிச்சயமாக சமாதானப் பேச்சுவார்த்தையை அரசு முன்னின்று நடத்தும்..” என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, இனிமேல் கோட்டையில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில்தான் இந்த வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.
]]>The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.
]]>“தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும்’ “வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்களும் கட்ட மாட்டார்கள்…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
கியூப் நிறுவனமோ தற்போது தாங்கள் வாங்கி வரும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும், இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதிவரைக்கும்தான் செல்லுமாம். இந்த அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் தியேட்டர்களை திறப்பது என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து, இன்று அல்லது நாளை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தாலும், பேசுவதற்குத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
“திரையீட்டுக் கட்டணம் என்பது கியூப் நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. இதில் நாங்கள் பேசி என்ன ஆகப் போகுது.. எங்களிடம் எதற்காக வர வேண்டும்..?” என்று துவக்கத்திலேயே கதவைச் சாத்திவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.
தற்போதைய நிலையில் இந்தத் தீபாவளிக்கு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற திரைப்படம், இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம், ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம், ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் ஆகிய 4 படங்கள் மட்டுமே இப்போதைக்கு கியூவில் நிற்கின்றன.
ஆனால், இவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் தங்களுடைய படத்தை வெளியிட மாட்டார்கள் என்பது உறுதி. இதனால் இந்தப் பிரச்சினையை எப்படி பேசித் தீர்ப்பது என்பது பற்றி தங்களுடைய உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்றால் அந்த நாளைக்கு 15 நாட்களுக்கு முன்பேயே அதன் விளம்பர வேலைகள் துவங்கிவிடும். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். தொடர்ந்து டிவி, ரேடியோ, பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் விளம்பரங்களும் வெளிவந்துவிடும்.
ஆனால், வரும் நவம்பர் 12-ம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இருக்கும் இந்த 4 படங்களுமே இப்போதுவரையிலும் எந்தவொரு ஸ்டெப்பையும் எடுக்கவில்லை.
எனவே, இந்தக் கடினமான சூழ்நிலையில் வரும் தீபாவளியன்று புதிய படங்களை ரசிகர்கள் பார்ப்பது.. தியேட்டர்காரர்கள் மற்றும் கியூப் நிறுவனத்தின் கைகளில்தான் உள்ளது.
The post தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..? appeared first on Touring Talkies.
]]>The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
7 மாதங்களுக்குப் பின்னர் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதால் புத்தம், புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் என்று திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் அப்படியொன்று நடந்துவிடாது என்பதற்கான அறிகுறிகள்தான் தமிழ்ச் சினிமாவில் தென்படுகிறது.
தமிழ்ச் சினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்னர் தற்போது படமெடுத்து வரும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி உருவாக்கிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட ஒளிபரப்புக் கட்டணத்தில் முட்டுக்கட்டை போடுவதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வருமா என்பது தெரியாத குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வி.பி.எஃப். கட்டணம் குறித்து இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்ட வேண்டிய கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனத்திற்கு செலுத்த முடியும்.
வாராவாரம் கட்டும் திரையிட்டூக் கட்டணத்தை இனியும் நாங்கள் செலுத்த மாட்டோம்.
இதை பற்றி நாங்கள் ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கும், டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிக்கும் தெரிவித்தும் அவர்கள் இதற்கு இப்போதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளியிடப்பட மாட்டாது…” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தரும் வி.பி.எஃப். கட்டணத்தை விநியோகஸ்தர்களும் கட்ட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் அங்கே இது பற்றி இப்போதைக்கு முடிவெடு்க்க முடியாது.
ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் திரையிடப்பட மாட்டாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்போது தியேட்டர்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களது தரப்பில் விசாரித்தபோது அவர்கள் விரைவில் தங்களது சங்கத்தினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறியிருக்கின்றனர்.
The post “VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத் தொகையைக் குறைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“நடிகர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்..
என் இனிய சொந்தங்களே…
வணக்கம்…
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்து கொண்டு பணி செய்யுங்கள்.
திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.
கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.
அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மனம் வைக்க வேண்டும். ஏற்கெனவே பிறரிடம் கடன் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம்… இதெல்லாம் தயாரிப்பாளர்களின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ் சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.
தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது இப்போதே உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.
அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா..?
தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தாமே முன் வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதேபோல், இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா…?
எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், தற்போது முடிவடைய வேண்டிய நிலையில் உள்ள படங்களுக்கு உங்களது பங்களிப்பாக, 30 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்து தமிழ்ச் சினிமா உலகம் மீண்டெழ உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
தமிழ்த் திரையுலகம் மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழ வைப்போம்...”
பாசத்துடன்,
பாரதிராஜா
தலைவர்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.
The post “நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>