The post மலையாள நடிகர் திலகனின் வீட்டிலிருந்த ஒரே தமிழ் நடிகரின் போட்டோ – Director Viji | Part – 3 | CWC appeared first on Touring Talkies.
]]>The post மிஸ் செய்த சூர்யா டேக் ஓவர் செய்த அருண் விஜய்…. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வணங்கான் போஸ்டர் வெளியீடு.. appeared first on Touring Talkies.
]]>பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். முதலில் இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவர் பின்னர் படத்திலிருந்து விலகினார். பாலா முன்பு துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீவிரமாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post மிஸ் செய்த சூர்யா டேக் ஓவர் செய்த அருண் விஜய்…. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வணங்கான் போஸ்டர் வெளியீடு.. appeared first on Touring Talkies.
]]>The post இவர் இருந்தா பல பேர் பிழைப்பாங்க! சமுத்திரக்கனி பற்றி நெகிழ்ந்த பாலா… appeared first on Touring Talkies.
]]>ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்த இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சமுத்திரக்கனியைப் பற்றிப் பேசிய பாலா, சமுத்திரக்கனியின் பெரிய ரசிகன் நான்.அவருடைய ரசிகனாக நடிப்பிலும் இயக்கத்திலும் சாதனை படைத்துள்ளார். மேலும், கடின உழைப்பாளி. பிறருக்கு உதவுவதில் பெரிய மனது கொண்டவர். இது போன்று தொடர்ந்தால், இன்னும் இவரால் பலபேர் பிழைப்பார்கள் என்றார்.பலருக்கு பயன்பட முடியும்” என்று புகழ்ந்தார்.
The post இவர் இருந்தா பல பேர் பிழைப்பாங்க! சமுத்திரக்கனி பற்றி நெகிழ்ந்த பாலா… appeared first on Touring Talkies.
]]>The post ஒன்னு இல்ல இது ரெட்ட தல!அருண் விஜய்யின் 36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… appeared first on Touring Talkies.
]]>நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்து கடைசியில் விலகிய வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருடைய 36 ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் நிகழ்ந்தது.இந்த படம் சிறப்பாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.
அருண் விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இரட்ட தல என பெயரிடப்பட்டுள்ளது.சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் அருண் விஜய் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே உணர்த்துகிறது.இப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற மான் கராத்தே படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.அருண் விஜய் உடன் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த ரெட்ட தல படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் இரண்டு கெட்டப்புகளில் இருக்கிறார். ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்வது போல் வெளியான இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்போதே படம் தாறுமாறு ஹிட் வேற லெவலாக இருக்கும் என மகிழ்ச்சியில் பொங்கி வருகின்றனர்.
The post ஒன்னு இல்ல இது ரெட்ட தல!அருண் விஜய்யின் 36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… appeared first on Touring Talkies.
]]>The post “ஏமாற்றிவிட்டார் இயக்குநர் பாலா” : புலம்பும் தயாரிப்பாளர் துரை appeared first on Touring Talkies.
]]>25 வருடங்களுக்கும் மேல் திரைத்துறையில் இருந்து வரும் இவர், பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார். இதில், ரஜினி படங்கள் அடக்கம். அடுத்து, என்னம்மா கண்ணு, பொல்லாதவன், லூட்டி, பிதாமகன், கஜேந்திரா போன்ற திரைப்படங்களை தயாரித்தார்.
இவர் எடுத்த என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட 3 படங்கள் அவருக்கு லாபத்தை கொடுத்தன. அப்போதுதான் அவரை இயக்குநர் பாலா சந்தித்தார்.
இதுபற்றி பேட்டியில் கூறியுள்ள விஏ துரை “பாலா மீது துரைக்கு என்பக்கு நல்ல அன்பும்,மரியாதையும் இருந்தது. பிதாமகன் கதையை இரண்டு வரிகளில் கூறினார். விக்ரம், சூர்யா நடிப்பதாகவும் நான்கரை கோடியில் எடுத்து முடித்து தருகிறேன் எனவும் கூறினார். ஆனால், படத்தை பல நாட்கள் எடுத்து ரூ.14.5 கோடியில் முடித்தார். படம் சூர்யாவுக்கும், விக்ரமுக்கும், பாலாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
ஆனால், நான் கடனாளியாக மாறினேன். அந்த கடனை அடைக்க மேலும் சில படங்கள் எடுத்து அதுவும் தோல்வியில் முடிந்தன. அதன்பின் என்னை சந்தித்த பாலா மேலும் ஒரு படத்தை செய்து தருவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். அந்தப் படத்தையும் துவங்கவில்லை.
பிறகு நான் மிகவும் கஷ்டப்படும் சூழல். ஆகவே, அவரிடம் அந்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு பாலா ‘உங்களிடம் எப்போது பணம் வாங்கினேன்?’ என கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இப்போது உடல் நலம் நலிவுற்று, சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவிக்கிறேன். சூர்யா, வெற்றிமாறன் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். ரஜினியும் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.
ஆனால் என்னிடம் பணம் பெற்ற பாலா, இப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை” என வருத்தத்துடன் சொல்கிறார் தயாரிப்பாளர் துரை.
The post “ஏமாற்றிவிட்டார் இயக்குநர் பாலா” : புலம்பும் தயாரிப்பாளர் துரை appeared first on Touring Talkies.
]]>The post பாலா திருந்த வேண்டும்; ’அழகன் தமிழ்மணி appeared first on Touring Talkies.
]]>பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.
அவர் சமீபத்தில் அந்த படத்தில் பாலாவுடன் நடந்த சம்பவத்தை பற்றி யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார்.
இயக்குனர் பாலா ’நான் கடவுள் ’படத்தில் நடிக்க என்னை அழைத்தார் நானும் ஒப்புக் கொண்டேன். படத்தில் நான் தாடி வைத்திருக்க வேண்டும். 8 மாதங்கள் ஆனது தாடி வளர அதன் பிறகு தான் படப்பிடிப்பு நடந்தது.
படத்தில் எனது மனைவியாக வரும் பெண் என்னை அடிக்க வேண்டும். அது தத்துருபமாக வரவேண்டும் என்பதால் பாலா என்னை வேகமாக அடிக்கச் சொன்னார்.
அவர் அடித்ததில் மயங்கி விட்டேன். அடுத்து பாலத்தில் இருந்து குதிக்க வேண்டும் நான். தண்ணீரில் கற்கள் கிடந்தன குதித்ததில் காலில் காயம் பட்டது. அதை பொருட்படுத்தாத பாலா மீண்டும் மீண்டும் குதிக்க சொல்லி டேக் ஓகே சொன்னார்.
அதன் பிறகு எனது அம்மா இறப்பு மொட்டை அடித்து தாடியை எடுக்க வேண்டும் அதற்கும் அனுமதி இல்லை. எனது படம் முடியும் வரை நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றார்.
அந்த படம் முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது அப்படியே சுற்றினேன். படத்தில் நடிப்பவர்களை கஷ்டப்படுத்தி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார் இனிமேலாவது திருந்த வேண்டும்.
இல்லையென்றால் பாலா என்ற இயக்குனர் காணாமல் போய்விடுவார் என்றார் அழகன் தமிழ்மணி
The post பாலா திருந்த வேண்டும்; ’அழகன் தமிழ்மணி appeared first on Touring Talkies.
]]>The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>இதற்குப் பின்பு ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவை வைத்து இயக்கி பெரும் வெற்றியடைந்தார் பாலா. அதோடு சூர்யாவின் அப்பா சிவக்குமாருடன் பாலாவுடனான நட்பு தனித்துவம் வாய்ந்தது. பாலாவுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே சிவக்குமார்தான். அந்த அளவுக்கு பாலா சிவக்குமார் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ‘2-டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை துவங்கினார் பாலா. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று இரவு இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதுதான் :
“என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.
மற்றபடி ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும்…
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>The post “என் மானசீக குரு இயக்குநர் பாலாதான்” – இயக்குநர் விஜய் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மூவரும் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க, முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக் களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் நவம்பர் 18-ம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, வடபழனி போரம் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசும்போது, “இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இங்கு நிறையப் பிரபலங்கள் வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை. ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம். அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதைவிடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் சாம் CS பேசும்போது, “123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது ‘லஷ்மி’ படத்தின் ‘மொராக்கோ’ சாங்தான். அதே போன்ற கதை கொண்ட இந்த படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ-5 நிறுவனத்திற்கு நன்றி. இது வெறும் டான்ஸ் காம்படேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல… நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்…” என்றார்.
நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசும்போது, “இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி…” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, “பாலா சார் எனது மானசீக குரு. அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இத்தொடரில் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி என்று அந்த மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப் பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் உருவாகியிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி..!” என்றார்.
The post “என் மானசீக குரு இயக்குநர் பாலாதான்” – இயக்குநர் விஜய் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாலா மனைவியை விவாகரத்து செய்தார் appeared first on Touring Talkies.
]]>கடந்த 4 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும், பாலாவின் மனைவி முத்து மலர் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது பற்றி பாலா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து செய்தி இன்றைக்கு உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா. தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத மனிதர்களின் கதைகளைக் கொடுத்த வகையில் பல மாநில இயக்குநர்களாலும் கவரப்பட்டவர்.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த விஷயம் அவரது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
The post இயக்குநர் பாலா மனைவியை விவாகரத்து செய்தார் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாலாவுடன் இணைவதை உறுதி செய்த நடிகர் சூர்யா..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் பாலா தனது அடுத்தப் படத்தை இன்னமும் அறிவிக்காமல் இருக்கிறார். அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படத்தை பாலா இயக்கப் போவதாகவும் இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதை சூர்யாவோ, பாலாவோ உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
இப்போது கூட்டணியை மட்டும் சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார். சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த விழாவுக்கு இயக்குநர் பாலாவும் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இன்றைக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் இது பற்றிய செய்தியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், ‛‛என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார் சூர்யா.
அதேசமயம் பாலா இயக்கவிருக்கும் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறாரா… அல்லது நடிக்கிறாரா என்பது குறித்து சூர்யா எதையும் தெரிவிக்கவில்லை.
விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இயக்குநர் பாலாவுடன் இணைவதை உறுதி செய்த நடிகர் சூர்யா..! appeared first on Touring Talkies.
]]>