The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.
]]>தற்போது, ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள இயக்குநர் சேரன், அடுத்து சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு, பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதையை இயக்குவார் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.
]]>The post ‘டிமான்டி காலனி 2’ மிரட்டும் டிரெய்லர் appeared first on Touring Talkies.
]]>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக,பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தில் நாம் எதிர்பார்க்கும் திகில் காட்சிகள் ட்ரெய்லர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. காட்சிகளை விட சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை அச்சத்தை கொடுக்கிறது. அதற்கு கேமரா கோணங்கள் உதவிபுரிகின்றன. பறப்பது, திகைப்பது, பயந்து நடுங்குவது, பேயை விரட்ட வரும் புத்த பிட்சுக்களுடன் வழக்கமான ஹாரர் காட்சிகள். கதை களத்துக்கான செட், விஎஃபெக்ஸ், லொகேஷன்ஸ் உள்ளிட்ட மேக்கிங் சார்ந்த அம்சங்கள் கவனம் மிரட்டுகிறது.
The post ‘டிமான்டி காலனி 2’ மிரட்டும் டிரெய்லர் appeared first on Touring Talkies.
]]>The post கண்ணகி – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ஷான் ரகுமான் இசையில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் நான்கு நாயகிகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. கிராமத்தில் இருக்கும் அம்மு அபிராமி பல மாப்பிள்ளைகள் வந்து பார்த்தும் ஏதேதோ காரணத்திற்காக திருமணம் தொடர்ந்து தடை படுகிறது. அம்மு அபிராமியின் அம்மாவான மெளனிகா, தந்தையான மயில்சாமி இருவரும் மகளின் வாழ்க்கை குறித்து கவலைப்படுகின்றனர்.
வித்யா பிரதீப்: விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார் வித்யா பிரதீப்பின் கணவர். வித்யா பிரதீப்பிற்கு ஆதரவாக வாதாடுகிறார் வெற்றி. விவாகரத்தை வேண்டா வெறுப்பாக திருமணபந்தத்திலிருந்து விடுகொடுக்கிறார். வித்யா பிரதீப்பிற்கும் வெற்றிக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது.
ஷாலின் சோயா: தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஷாலின். தண்ணி, தம்மு என்று மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது நடவடிக்கையால் அலுவலகத்தில் அவரை தவறாக பார்க்கவும் பேசவும் படுகிறார். ஒருவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சில நாட்கள் கழித்து அவர் ஷாலினிடம் திருமணம் செய்து கொள்ள ப்ரப்போஸ் செய்கிறார்.
கீர்த்தி பாண்டியன்:
யஷ்வந்த் கிஷோர் வீட்டில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் நான்கு மாத கர்பிணியாக இருக்கிறார். சிசுவை கலைக்க இருவரும் முயற்சி செய்கின்றனர். ஆனால், சிசு 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அதனை கலைக்க மருத்துவர்கள் மறுக்கின்றனர்.
இந்த நால்வரின் கதை தான் இந்த “கண்ணகி” படத்தின் கதை. இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் மீதி கதை
நான்கு கதாபாத்திரங்களும் யதார்த்தமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். பல படங்களில் நடித்த அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகி அம்மு அபிராமி. தனது தந்தை இழப்பை தாங்க முடியாமல் அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அம்மு அபிராமி.
வாழ்க்கை யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேண்டா வெறுப்பாக இருக்கும் நிலையில், ஒரு கை, துணையாக வரும்போது அதுவும் நம்மை விட்டுச் சென்றால்… அந்த மனநிலையை நன்றாகவே உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார் நாயகி வித்யா பிரதீப்.
ஒரு திமிரான, தெனவட்டான எவருக்கும் அடங்காத பெண்ணாக நடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷாலின்.
பல விதமான சோகங்களை மனதிற்குள் தாங்கிக் கொண்டும் 4 மாத சிசுவை வயிற்றில் ஏந்திக் கொண்டும் ஒரு இறுக்கமான மனநிலையில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் சபாஷ் போடவைக்கிறார்.
ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலன் சேர்க்கிறது. பாடல்கள் கதைக்கு ஏற்றது போல் உள்ளது.
ராம்ஜியின் ஒளிப்பதிவு காட்சிகளை ஈர்க்கவைத்துள்ளது. இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது.
கண்ணகி – கொண்டாடப்பட வேண்டிய படம்.
The post கண்ணகி – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ’சலார்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் காட்சி நேரம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.
The post ’சலார்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் பாரதிராஜா பல நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர். இயக்குனர் இமையம் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர்.
அவருக்கு இணை அவர் மட்டுமே’ அவரது வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. ஷூட்டிங் சமயத்தில் மலை மீது ஏறி போய்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் காரில் சென்றோம். ஆனால் அப்பா முதலில் இங்கினார். திரும்பி பார்ப்பதற்குள் மலையின் பாதி தூரம் சென்று விட்டார் என தனது தந்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நடிகர் மனோஜ் டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.
]]>The post ஜெயகி இயக்கத்தில், “ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! appeared first on Touring Talkies.
]]>விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம்.
இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உட்படப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
The post ஜெயகி இயக்கத்தில், “ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! appeared first on Touring Talkies.
]]>The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>அவரது எக்ஸ் பக்கத்தில் வெட்டுள்ள வீடியோவில், “நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்.
இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமெண்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.
நானும் குதூகலமாக இருக்கிறேன், ஏனென்றால் அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன். படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்.
தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே ‘அவ்வையார்’, ‘சந்திரலேகா’ஆயிரத்தில் ஒருவன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎஃபெக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” appeared first on Touring Talkies.
]]>பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.
பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.
பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.
தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
The post இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” appeared first on Touring Talkies.
]]>The post ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை! appeared first on Touring Talkies.
]]>1976 ஆம் ஆண்டு வெளிவந்த இதய மலர் என்கிற திரைப்படம்தான் அது. ஜி. எம். குலத்து அய்யர்
வி. எல். நாராயணன் ஆகியோர் தராபிப்பில் உருவான படம் இது.
ஜெமினி கணேசனுடன் , கமல்ஹாசன், சுஜாதா, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்தனர்.
ஆனால் இந்தப் படப்பிடிப்பின் போது பிரச்சினை வர, பாதியிலேயே விலகிவிட்டார் ஜெமினி. அதன் பிறகு இயக்கியது யார்.. என்ன பிரச்சினை..
# அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ஜெமினி இயக்கிய ஒரே படம்! பாதியிலேயே வந்த பிரச்சினை! appeared first on Touring Talkies.
]]>The post படம் முழுதும் ஒரே உடை!: வித்யா appeared first on Touring Talkies.
]]>
இது குறித்து அவர், “இது வழக்கமான துப்பறியும் கதை அல்ல. எனக்கு படம் முழுதும் ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டும்தான். முழு திரைப்படத்திலும் அந்த ஒரே காட்ஸ்யூமில் தான் வருகிறேன். இதற்காக படக்குழுவினர், ஒரே மாதிரியான 3 உடைகளைத் தந்த போதும், ஒரே உடையை மட்டுமே முழு படத்திற்குமாகப் பயன்படுத்தினேன்” என்றார்.
The post படம் முழுதும் ஒரே உடை!: வித்யா appeared first on Touring Talkies.
]]>