The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.
]]>மொழி தெரியாத நடிகர்களுக்கு பணத்தை வாரி கொடுக்கின்றனர். திறைமையான நடிகர்கள் அவர் நடித்த காட்சிக்கு பணம் வாங்க உதாசினப்படுத்தப்படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் நேர்காணலில் செம்புலி ஜெகன் பகிர்ந்து கொண்ட வீடியோ….
The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.
‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.
மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில், பத்திரிகையாளர் செல்வம், “விஜய் சேதுபதியை பார்த்தாவது, சீனியர் நடிகர்கள் திருந்துவார்களா” என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா? appeared first on Touring Talkies.
]]>The post ‘அப்படிப்பட்ட’ நடிகர்களுக்கு மனோரமா விடுத்த எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>அந்த குறிப்புகளில் மனோரமா எழுதி உள்ளவை:
“ஒரு படத்திலோ அல்லது ஒரு நாடகத்திலோ நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான் தோன்றுகின்ற முதல் காட்சியிலேயே நான் ஏற்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தை கொண்டும் அடுத்தடுத்த காட்சிகளில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருந்ததே இல்லை. எனது கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.
ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல படவுலகமும் – ரசிகர்களும் இருவருமே அவசியம். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் நட்சத்திர வாழ்க்கை என்பது செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும்.
‘எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த சினிமாக்காரர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்’ என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்த பல நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
ஆகவே, கலைஞர்கள் எப்போதும் ரசிகர்கள் – தயாரிப்பாளர்கள் ஆகிய இருவரையும் மதித்து நடக்க வேண்டும்.
இன்னொரு விசயம்.. எனது பிரச்சினைகள் எதையும் படப்பிடிப்பில் காண்பிக்க மாட்டேன். ஷூட்டிங்கிற்கு புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரமாகவே உட்காருவேன். கார் வீட்டை விட்டு புறப்பட்ட மறுகணம் வீட்டை மறந்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார் மனோரமா.
The post ‘அப்படிப்பட்ட’ நடிகர்களுக்கு மனோரமா விடுத்த எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>“மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட முக்கியமாக, இந்த விசயம், யாருக்கும் தெரியக்கூடாது என்றார். இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது நெகிழ்ச்சியில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>
ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால், அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர், “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார். அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போது பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.
ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெறுகிறது என்பதால்தான்.
இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என பதில் அளித்தார் சித்ரா லட்சுமணன்.
The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>