Thursday, April 11, 2024

கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -



ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால்,  அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன.  படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர்,  “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.  ஆனால்  20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார்.  அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என கேட்டிருந்தார்.



அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போது பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறார்கள்  என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெறுகிறது என்பதால்தான்.

இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என பதில் அளித்தார் சித்ரா லட்சுமணன்.

- Advertisement -

Read more

Local News