The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>தி கோட் படப்பிடிப்பு சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.திருவனந்தபுரத்தில் நடக்கும் தி கோட் படப்பிடிப்பில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய் திருவனந்தபுரம் வந்தது முதல் கேரள ரசிகர்கள் விஜய் செல்லும் இடம்பெறலாம் சூழ்ந்த வண்ணம் உற்சாகத்தில் உள்ளனர்.
வேட்டையன் படப்பிடிப்பும் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில் திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியுள்ளனர் என்பதே சுவாரஸ்யம் இப்படி இருக்க இவர்கள் இருவரும் விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கேரளா சென்றுள்ள விஜய் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>The post என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் பெண்களுக்கு பிடித்த ,குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் நான் கிரிகெட் பத்து ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. அதனால் விளையாட முடியாது என்பதால் கிரிக்கெட் பார்ப்பதை தவித்தேன்.
சினிமா முயற்சி ஆறு ஆண்டுகள் தொடர் தோல்வி, நான் ஆசைப்பட்டது கிரிக்கெட் அதில் தோல்வி அழுது விட்டேன்.
அப்பா சொன்னார் யார் உனக்கு கை கொடுக்கிறார்களோ அவர்களை மறக்காதே என்றார். ’லால் சலாம்’ படத்தில் ரஜினி சாருடன் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். எனது ஆசை சினிமாவில் நிறைவேறிவிட்டது என்றார் விஷ்ணு விஷால்.
The post என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.
]]>கவிப்பேரரசு வைரமுத்து சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்தவர். அவர் பாட்டு எழுதாத படங்கள் குறைவு என்றே சொல்ல முடியும் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து,கமல்,ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியிடம் நீங்கள் பார்க்காத வெற்றி இல்லை,மேடைகள் இல்லை,புகழ்,நீங்கள் சேர்க்காத பொருள் இல்லை இந்த வாழ்க்கை உங்களுக்கு சொல்கிற செய்தி என்ன என்று கேட்டார் வைரமுத்து.
வாழ்க்கையில் எத்தனையோ படிகள் இருக்கிறது.மரணம் எந்த படியில் வரும் என்று சொல்ல முடியாது. அடுத்த படியில் கூட இருக்கலாம். நிரந்தரமில்லாதது. வாழ்க்கை என்பது ஒரு பகல் கனவு என்றார் ரஜினிகாந்த்.
The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பாடலுக்கு ஆறு மணி நேரம் ஷூட்டிங் – ரஜினி காந்த் appeared first on Touring Talkies.
]]>ரஜினிகாந்த், விஜயசாந்தி நடிப்பில் மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதன் முதலில் அந்த படத்தில் ரஜினி ஜானகியுடன் இணைந்து பாடியிருப்பார். அப்போது அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
’’அடிக்குது குளிரு’’ பாடலில் இணைந்து பாட வேண்டும். என்னை பாட சொன்னார்கள் எனக்கு பாட்டு வராது என்றேன் ஆனால் விடாமல் பிடித்து என்னை பாட வைத்து விட்டார் இளையராஜா. வெறும் ஆறு வரிகள் தான் பாடினேன். ஆனால் அதை எடுக்க ஆறு மணி நேரம் ஆனது என்றார். நான் பாடிய முதல் பாடலும் கடைசி பாடலும் இதுதான்.அதன் பிறகு நான் பாடவில்லை என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னன் படத்தில் பாடியது குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
The post ஒரு பாடலுக்கு ஆறு மணி நேரம் ஷூட்டிங் – ரஜினி காந்த் appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியின் கை முத்திரை ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியில் பொது இடங்களுக்கு சென்றால் அவர் தனது கை விரல்களால் முத்திரை வைத்தவாறே இருப்பார். ஆனால் அதை பெரிதாக யாரும் கவனித்திருக்க மாட்டோம்.
அந்த முத்திரையின் ரகசியம் யாருக்காவது தெரியுமா..? அவரது கையில் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் அழுத்தி பிடித்தவாறு இருப்பார். சினிமாவில் மற்றும் பொது இடங்களில் அவர் இருக்கும் இந்த முத்திரையை நீங்கள் பார்க்கலாம். இந்த முத்திரைக்கு பெயர் ஜிம் முத்திரை என்று சொல்வார்கள்.
இந்த ஜிம் முத்திரையை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. மேலும் மனதில் உற்சாகம் ஏற்படுதல்,ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த முத்திரை உதவுகிறது. அதனால் தான் இந்த முத்திரையை ரஜினி பன்னுகிறார்.
The post ரஜினியின் கை முத்திரை ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post பிரமாண்ட படத்திற்கு ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நடிகரோ, நடிகையோ ஒப்பந்தம் செய்யும் போது குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக பெறுவார்கள். பெரும்பாலான நடிகர்கள் சம்பளத்தில் 50% வீதம் முன் தொகையை வாங்கி பெறுவர். மீதி தொகையை படம் முடிந்த கையோடு கேட்டு வாங்கி விடுவார்கள்.
கடன் வாங்கியாவது தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது வழக்கம். ஆனால் சினிமா உலகின் ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர் நடித்த இரண்டு படத்திற்கு வெறும் ஒரு ரூபாய் முன் பணமாக வாங்கிக்கொண்டு நடித்து கொடுத்திருக்கிறார்.
ஆம்… சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் அந்த தயாரிப்பாளர்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே அட்வான்ஸாக வாங்கி கொண்டு நடித்து முடித்த பின் தனது முழு சம்பளத்தை வாங்கி இருக்கிறார் ரஜினி.
The post பிரமாண்ட படத்திற்கு ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியை வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>ரஜினிக்கும் தனக்கும் இடையிலான ஒரு சம்பவத்தை சொல்கிறார் ராதாரவி:
“ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தை பி.வாசு இயக்குவதாக இருந்தது. அப்போது வாசி, ‘நீதான் வில்லன். படக்குறிப்புகளில் ஆர் ஆர் என உனது பெயரைத்தான் வில்லன் வசனங்களுக்கு முன் குறிப்பிட்டு இருக்கிறேன்’ என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் ரஜினியிடமிருந்து போன். தனது வீட்டுக்கு வரச் சொன்னார்.
அப்போது அவர், ‘அருணாச்சலம் படத்தை பி.வாசு இயக்கவில்லை. சுந்தர் சி. இயக்குகிறார். அதே போல படத்தில் ஒரு வில்லன் என்பதை மாற்றி மூன்று வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கோம். ஆகவே உங்களுக்கு அந்த கதாபாத்திரங்கள் எதுவும் சரியாக வரும் என தோன்றவில்லை.. தவறாக நினைக்க வேண்டாம்’ என்றார்.
இதை கூப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டாம் என தோன்றியது.
அந்த ஆதங்கத்தில், ‘பரவாயில்லை.. சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா? (ரஜினியைச் சுட்டிக்காட்டி) அந்த அதிர்ஷ்டத்தைத் தேடி, (என்னைச் சுட்டிக்காட்டி) இந்தத் திறமை வரவேண்டி இருக்கிறதுதான்’ என்றேன்.
ஆனால் அதற்கு கோபப்படாமல், ‘அடேங்கப்பா.. அடேங்கப்பா’ என சொல்லிச் சொல்லி சிரித்தார் ரஜினி!” என தனது நினைவுகளை கூறினார் ராதாரவி.
The post ரஜினியை வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியை ‘அதற்கு’ சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதையும் சொல்லலாம்.
பிரபலமான அந்த நிகழ்ச்சி, ரஜினியால் மேலும் பரபலமானது.
அது குறித்து தற்போது ஒரு தகவலை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கூறியிருக்கிறார்:
“ஆரம்பத்தில் இதில் கலந்துகொள்ள ரஜினி விரும்பவில்லை. இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என் தந்தையை அணுகினார்கள். அவர்தான் ரஜினியிடம், ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி.. கலந்துகொள்’ என்றார் அதன் பிறகே ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்” என ரகசியத்தை உடைத்தார் புஷ்பா.
The post ரஜினியை ‘அதற்கு’ சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ஆனந்தராஜை மிரள வைத்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் உண்மையிலேயே பயந்த சம்பவத்தை விவரித்தார் நடிகர் ஆனந்தராஜ்.
“அப்போது பாட்சா படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரம். திடீர்னு ரஜினி கூப்பிட்டார். நான் போனேன். நான் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கணும் அப்படினு சொன்னார்.
எனக்கு ஆச்சரியம்.. அந்தப் படத்துல ஏற்கெனவே ரகுவரன், சரண்ராஜ், தேவன் என்று வில்லன் நடிகர்கள் இருக்காங்க. நம்மளை எதுக்குக் கூப்பிடுறாருன்னு நினைச்சேன்.
என் எண்ணத்தை புரிஞ்சிகிட்டு, ‘என்னை நீங் கட்டிவச்சு அடிக்கிற மாதிரி ஒரு காட்சி.. அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்’ என்றார்.
உண்மையாகவே எனக்கு பயமா போச்சு. ‘சார்.. அப்படி நான் நடிச்சா.. உங்க ரசிகர்கள் என்னை கல்லாலேயே அடிப்பாங்க’ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
அதற்கு ரஜினி, ‘ என்னை ஒருத்தர் அடிக்கிறாருன்னா.. அதை மக்கள் நம்பனும்.. ஏத்துக்கணும்.. அதுக்கு ஏற்ற ஆள் நீங்கதான்’ என்றார். பயம் போய்.. பெருமையா உணர்ந்தேன்.. அந்த காட்சியில நடிச்சேன்” என்று தான் பயந்த வியத்தை பகிர்ந்துகொண்டார் ஆந்தராஜ்.
The post ஆனந்தராஜை மிரள வைத்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post ‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் அல்லவா. இப்படத்தை இயக்க கே.பாலசந்தர் முதலில் வாய்ப்பு அளித்தது வசந்த்துக்குத்தான்.
ஆனால் சொந்த காரணங்கள் சிலவற்றால் அப்போது அப்படத்தை இயக்க முடியாமல் போனது வசந்த்துக்கு.
சினிமாவில் மட்டுமல்ல.. சினிமா உருவாவதும் ஒரு மேஜிக்தான். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லவே முடியாது.
vasanth
The post ‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்! appeared first on Touring Talkies.
]]>