The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>தி கோட் படப்பிடிப்பு சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.திருவனந்தபுரத்தில் நடக்கும் தி கோட் படப்பிடிப்பில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய் திருவனந்தபுரம் வந்தது முதல் கேரள ரசிகர்கள் விஜய் செல்லும் இடம்பெறலாம் சூழ்ந்த வண்ணம் உற்சாகத்தில் உள்ளனர்.
வேட்டையன் படப்பிடிப்பும் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில் திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியுள்ளனர் என்பதே சுவாரஸ்யம் இப்படி இருக்க இவர்கள் இருவரும் விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கேரளா சென்றுள்ள விஜய் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>The post “எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் ‘பாபா” – லதா ரஜினி பேட்டி appeared first on Touring Talkies.
]]>இதையொட்டி நேற்று டிசம்பர் 9-ம் தேதி மாலை சென்னை சத்யம் திரையரங்கில் இதன் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது.
இந்த சிறப்பு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியான லதா, ஐஸ்வர்யா ரஜினி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் லாரன்ஸ், நாய் சேகர் படத்தின் இயக்குநரான கிஷோர், கலைப்புலி தாணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் லதா ரஜினி பேசும்போது “ஒரு புதிய படம் போல இந்த ‘பாபா’ ரீ ரிலீஸூக்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு இந்த ‘பாபா’ படம் திகட்டாது. அது போலத்தான் ரசிகர்களுக்கும் ரஜினி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. தற்போது புயல் மழை உள்ளது. எனவே அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்” என அக்கறையுடன் தெரிவித்தார் லதா ரஜினி.
The post “எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் ‘பாபா” – லதா ரஜினி பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் வெளியாகின்றன..! appeared first on Touring Talkies.
]]>‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு திரைப்பட விழா’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இந்தப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அவரது பிறந்த நாளுக்கான கவுண்ட்டவுனாக 2 தென்னிந்திய நகரங்களில் உள்ள 4 பி.வி.ஆர். திரையரங்குகளின் பெரிய திரையில், நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், பாபா (2002), சிவாஜி: தி பாஸ் (2007), 2.0 (2018) மற்றும் தர்பார் (2020) ஆகிய 4 சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த திரை விழா பற்றி பி.வி.ஆர். லிமிடெட் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியான கௌதம் தத்தா பேசும்போது, “ரஜினிகாந்த் சார், சாதனைகளை தகர்த்தெறிந்த பல திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா துறைக்குபெருமை சேர்த்த ஒரு மகத்தான நடிகராவார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதிலும், மனதைவிட்டு நீங்காத அவரது சிறந்த திரைப்படங்களில் சிலவற்றை ரசிகர்களுக்கு திரையிடுவது குறித்தும் பிவிஆர் பெருமிதம் கொள்கிறது.
சினிமா உலகில் அவரது பயணத்தை காட்சிப்படுத்தும்விதமாக, இந்த 7 நாள் ரஜினிகாந்த் திரைப்பட விழாவைக் காண சென்னை மற்றும் கோவையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம். பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய தலைவரின் படங்களை மீண்டும் கண்டு மகிழ அவரது ரசிகர்களுக்கு இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பாக இருக்கும்” என்று கூறினார்.
பி.வி.ஆர். ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்புத் திரைப்பட விழா குறித்தும், ‘பாபா’ திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுவது குறித்தும் லதா ரஜினிகாந்த் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாபா திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. அத்திரைப்படம் இப்போது மீண்டும் வெளியாவது என் மனதிற்கு மேலும் நெருக்கமான ஒரு உணர்வுபூர்வ அனுபவமாக உள்ளது. பாபா, எங்கள் குடும்பத்திற்கு பல விதங்களில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாகும். திரையரங்குகளில் ‘பாபா’ படத்திற்கு மீண்டும் அமோக வரவேற்பை அளிக்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள்மீது காட்டும் அனைத்து அன்பிற்காக கடவுளுக்கு நன்றி கூறுவதோடு, ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க நான் காத்திருக்கிறேன்” என்றார்.
The post ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் வெளியாகின்றன..! appeared first on Touring Talkies.
]]>The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.
]]>இது குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, “ஒரு கனவு நனவாச்சுன்னு சில விஷயங்களை சொல்வோமே.. அதுமாதிரின்னுகூட இதைச் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் படத்துல நாம பக்கா ஹீரோவா நடிக்கப் போறோம்கிற விஷயம் என் கனவுலகூட நான் நினைச்சுப் பார்க்காத விஷயம். அதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பு. இதையெல்லாம் பார்க்கும்போது இதுவொரு மேஜிக் மாதிரிதான் இருக்கு. இது நடக்கப் போகுதுன்னு என்னால இப்போவரைக்கும் நம்பக்கூட முடியலை. ஷூட்டிங் போறதுக்காக ஆர்வமாக காத்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.
]]>நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் பி.எல்.தேனப்பன். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்து படங்களுக்கும் நான்தான் தயாரிப்பு நிர்வாகி என்பதால் ‘முத்து’ படத்திலும் என்னையே தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்ற வைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள். அதனால் எனக்குக் கீழே உதவியாளர்களை வைத்துக் கொண்டுதான் அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
அதோடு சில காட்சிகளில் துணை நடிகர்களை நூற்றுக்கணக்கில் அழைத்து வர வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மிகச் சிரமப்பட்டுத்தான் அவர்களை வரவழைத்து வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பிரச்சினையில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு நான்கு நாட்கள் கழித்து ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் அவரைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது அவர் என்னிடம், “நான் இதுவரைக்கும் 40-க்கும் மேல படங்களை தயாரிச்சிருக்கேன். ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின்போதும் நடு ராத்திரி 12 மணிக்குக்கூட எனக்கு ஏதாவது ஒரு விஷயமா போன் வரும். ஆனால், இத்தனை வருஷ அனுபவத்துல.. இந்த ஒரு படத்தின் போதுதான் ஒரு போன்கூட எனக்கு வரலை. இத்தனை ஆர்ட்டிஸ்ட் படத்துல இருந்தும் ஒரு பிரச்சினையும் இல்லாம நீ பார்த்துக்கிட்ட.. உண்மையில் இது கிரேட் ஜாப். பாராட்டுக்கள்..” என்று சொல்லிவிட்டு எனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்.
இது நடந்த சில நாட்கள் கழித்து நான் ‘பரம்பரை’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொன்னார்கள். நானும் அவரைப் பார்க்கப் போனேன். அவரும் என்னை ‘முத்து’ படத்தில் பிரச்சினையில்லாமல் பார்த்துக் கொண்டதற்காக என்னைப் பெரிதும் பாராட்டிவிட்டு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கவுரவப்படுத்தினார்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.
The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.
]]>The post புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ‘பாபா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணி புரிந்தனர்.
ஒளிப்பதிவு – சோட்டா K.நாயுடு, படத் தொகுப்பு – V.T.விஜயன், கலை இயக்கம் – G.K., சண்டை பயிற்சி இயக்கம் – FEFSI விஜயன், பாடல்கள் – கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து. பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப் படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அடிக்கடி காட்டும் அந்த ‘பாபா’ முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத் தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும்கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.
விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது.
The post புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ‘பாபா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post பத்திரிகைகளுக்கு ரஜினியின் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது, ‘பாட்ஷா’ படத்தின் மாஸான பி.ஜி.எம். ஒலிக்க, அந்த படத்தின் பாணியில் கோட்சூட் போட்ட நால்வருடன் ரஜினி மேடையேறியபோது ரசிகர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.
அப்போது மேடையில் பேசிய ரஜினி, “சிங்கப்பூர் நாட்டில் அதிபராக இருந்தவர் நாதன். தமிழரான அவர் மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன், அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, நமது இயக்குநர் சேரனின் இயக்கத்தில் வெளியான ‘பொற்காலம்’ படத்தில் இடம் பெற்ற, தேவா இசையமைத்து, வைரமுத்து எழுதியிருந்த ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் இறந்த பிறகு அந்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன் பின்னர்தான் எனது உடலை எடுத்துச் செல்ல வேண்டும்..” என எழுதியிருந்தார்.
அதேபோல் சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்த பின்னர் அவரது உடலை கொண்டு சென்றபோது, உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.
இந்தப் பாடலை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் மொழி பெயர்த்து பத்திரிகைகளில் எழுதியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அது குறித்து எழுதவில்லை.
அப்போது தேவாவுக்கு மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்…? இதனால், தயவு செய்து இது போன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளி உலகிற்கு சொல்ல வேண்டும்…” என்று வேண்டுகோள் விடுத்தார்.
The post பத்திரிகைகளுக்கு ரஜினியின் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெயிலர்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதை, சன் பிக்சர்ஸ் நேற்று உறுதிப்படுத்தியது
படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக் குழு இன்று வெளியிட்டுள்ளது. ரஜினியின் அசத்தல் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த மேக்கிங் வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
The post ‘ஜெயிலர்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ் மற்றும் படத் தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் N.சுப்ரமணியன், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் லைகா நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் லைகா நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.
The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள் appeared first on Touring Talkies.
]]>அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இத்தகவலை லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.
இன்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் லைகா நிறுவனத்தின் அதிபரான சுபாஷ்கரனும், தமிழகப் பொறுப்பாளரான தமிழ்க்குமரனும் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.
The post லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள் appeared first on Touring Talkies.
]]>