Thursday, March 28, 2024

“எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் ‘பாபா” – லதா ரஜினி பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆனது..!

இதையொட்டி நேற்று டிசம்பர் 9-ம் தேதி மாலை சென்னை சத்யம் திரையரங்கில் இதன் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது.

இந்த சிறப்பு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியான லதா, ஐஸ்வர்யா ரஜினி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் லாரன்ஸ், நாய் சேகர் படத்தின் இயக்குநரான கிஷோர், கலைப்புலி தாணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் லதா ரஜினி பேசும்போது “ஒரு புதிய படம் போல இந்த பாபா’ ர ரிலீஸூக்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு இந்த பாபா’ படம் திகட்டாது. அது போலத்தான் ரசிகர்களுக்கும் ரஜினி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. தற்போது புயல் மழை உள்ளது. எனவே அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்” என அக்கறையுடன் தெரிவித்தார் லதா ரஜினி.

- Advertisement -

Read more

Local News