The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.
]]>படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ‘ராக் ஸ்டார்’ அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலுக்கு ‘நடனப் புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்துத் தர இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S.தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.
The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.
]]>The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.
பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.
‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.
மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை.
பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி.
அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.
இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.
இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம் பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம் பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>The post பிரபுதேவா-ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘மை டியர் பூதம்’ படம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மற்றும் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை யு.கே.செந்தில்குமார் கையாள, படத் தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றியுள்ளார். பிரபுதேவாவின் நடனத் திறமைக்கு ஏற்ற பாடல் உள்ளிட்ட ஐந்து வகைகளில் டி.இமான் இப்படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். கலகலப்பான வசனங்களை தேவா எழுதியுள்ளார்.
இந்தப் படத்தை ‘மஞ்சப்பை’ மற்றும் ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் N.ராகவன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் என்.ராகவன் பேசும்போது, “ஒரு பூதத்துக்கும், 10 வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும், பயணமும்தான் இந்தக் கதையின் முக்கியக் கரு. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி வகையைச் சேர்ந்த இப்படம் குடும்பப் பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்கப்படும்.
குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும். எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும். இதற்காக அதி நவீன தொழில் நுட்பம் படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும். கதாபாத்திரத்திற்காக பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டார். பூதமாக அவர்தான் நடித்துள்ளார். அவரது உடல் மொழியிலும் சிரிப்பை வரவழைத்துள்ளார்…” என்றார் இயக்குநர் என்.ராகவன்.
குழந்தைகளுக்கான முழு நீள ஃபேண்டசி திரைப்படமான இந்த ‘மை டியர் பூதம்’ படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.
“படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ-5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன. படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது…” என்று இந்தப் படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
The post பிரபுதேவா-ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘மை டியர் பூதம்’ படம் appeared first on Touring Talkies.
]]>The post அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>மேலும் ஜான் விஜய், வி.டி.வி.கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அறிமுக இயக்குநரான சாம் ரோட்ரிக்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் பற்றி இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில், ”பிரபு தேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக இது தயாராகிறது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களுக்கு புதுமையான ஒரு அனுபவமாக இருக்கும்…” என்றார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகன் பிரபுதேவா, தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
The post அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post சல்மான்கானுக்கு ‘நோ’ சொன்ன பிரபுதேவா appeared first on Touring Talkies.
]]>சல்மான்கானை வைத்து தொடர்ச்சியாக 3 ஹிட்டுகளை கொடுத்தவர் இயக்குநர் பிரபுதேவா. ஆனால் கடைசியாக சல்மான்கானின் நடிப்பில் பிரபுதேவா உருவாக்கிய ‘தபாங்-3’, ‘ராதே’ ஆகிய படங்கள் தோல்வியடைந்ததையடுத்து பாலிவுட்டில் பிரபுதேவாவுக்கு இறங்கு முகமாகிவிட்டது.
ஒரே மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச். சல்மான்கானின் மேனரிசம்.. கதை அமைப்பு.. திரைக்கதை என்று பாலிவுட்டின் சல்லு பாயின் ரசிகர்களுக்கு பிரபுதேவாவின் இயக்கம் போரடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இதையடுத்து தற்போது மீண்டும் சல்மான்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததை பிரபுதேவாவே ஏற்கவில்லையாம். தெலுங்கு படத்தின் ரீமேக்கில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சஜீத் நாடியத்வாலா, சல்மான்கானை அதில் நடிக்க வைக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபுதேவாவை தேடி வந்திருக்கிறார். ஆனால் நோ சொல்லிவிட்டாராம் பிரபுதேவா.
தற்போதைக்கு மீண்டும் இயக்கம் பக்கமே போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம். இதனால்தான் சமீபத்தில்கூட ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரபுதேவா.
பிரபுதேவாவின் நடிப்பில் ஏற்கெனவே ‘பொன் மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹீரா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The post சல்மான்கானுக்கு ‘நோ’ சொன்ன பிரபுதேவா appeared first on Touring Talkies.
]]>The post பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் – கல்யாண் கூட்டணியில் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி மீண்டும் நடிப்புக்கு வந்தார். அவரது நடிப்பில் தற்போது ‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில்தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் அந்தப் படத்திற்கு பூஜை போட்டு, படப்பிடிப்பையும் தொடங்கி நேற்றுதான் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைக்கு அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார் பிரபுதேவா. இன்று தொடங்கிய பிரபுதேவாவின் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் இயக்குநர் கல்யாண். அவர் வெறும் கல்யாண் அல்ல; ‘அதிர்ஷ்டக்கார கல்யாண்’ என்று தமிழ்த் திரையுலகத்தில் சொல்கிறார்கள்.
சினிமாவில் சில இயக்குநர்களுக்கு ஹிட் கொடுத்தாலுமே அடுத்தப் பட வாய்ப்பு அமையாது. சிலர் தோல்விகளை மட்டுமே தருவார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தின் அட்வான்ஸ் அவர் கையில் இருக்கும். இயக்குநர் கல்யாண் இது போன்ற அதிர்ஷ்டக்காரர்தான்.
அவர் இயக்கிய ‘கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’, ‘ஜாக்பாட்’ என்ற நான்கு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதில் ‘குலேபகாவலி’யில் பிரபுதேவாதான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தில் மறுபடியும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் பிரபுதேவா, நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கல்யாண், தயாரிப்பாளர் அபிஷேக் பிள்ளை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
The post பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் – கல்யாண் கூட்டணியில் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>