The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தோல்வி,வெற்றி அனுபவம் என்று எத்தனையோ வலிகளை கடந்து விருதுகளை சுமந்து சாதனை பெண்ணாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நேரடி பேட்டி கொடுத்த நயன்தாரா. என்னை போன்ற சினிமாவில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது மேக்கப். அதுதான் எங்களை வாழ வைக்கிறது. எங்களின் உணர்வுகளை முகபாவனைகளை கொண்டு வர உதவுகிறது.
சாப்பிட நேரமில்லாமல் இருந்திருப்போம் ஆனால் மேக்கப் போடாமல் இருந்ததில்லை. கேமரா முன்னாடி நிற்கும் போது எங்களை நடிகையாக உணரவைப்பது இந்த மேக்கப் தான் ஆகவே அது எங்களுக்கு கடவுள் மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நயன்தாரா.
The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படம் குறித்தான சமீபத்திய செய்தி என்னவென்றால், UV கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வழங்க இருக்கிறது என்பதுதான்.
தெலுங்கில் உள்ள முன்னணி விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான UV கிரியேஷன்ஸ் ‘கனெக்ட்’ படத்தைத் தெலுங்கில் வெளியிடத் தற்போது தயாராகி வருகிறது.
ஹாரர் – த்ரில்லர் வகையில் அமைந்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் கதையும் நயன்தாராவின் நடிப்பும் பார்வையாளரகளை நிச்சயம் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.
அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த ‘மயூரி’ மற்றும் தாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் அஷ்வின் சரவணனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு அறிமுகம் இருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது.
இந்தப் படம் திரையரங்குகளில் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.
The post நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் 81-வது படம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>நடிகை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான, ‘ரௌடி பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், அடுத்ததாக நடிக்க உள்ள 81-வது படம் குறித்த அறிவிப்பு அவருடைய 38 ஆவது பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை, ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ போன்ற தரமான படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்க உள்ளார்.
இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், “தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்த, உன்னதமான கதைகளை துரை செந்தில் குமார் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் படங்களில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் சாந்தி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
இந்த படம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பும், இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகி நயன்தாராவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post நயன்தாராவின் 81-வது படம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post வெளிவரக் காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்..! appeared first on Touring Talkies.
]]>‘பிரேமம்’ பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், பிரித்விராஜுக்கு ஜோடியாக ‘கோல்டு’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படம் நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர்.
மேலும் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
அதேபோல இயக்குநர் அகமதுவின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நயன்தாராவின் 75-வது படமும் உருவாகி வருகிறது. மேலும் மற்றொரு மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார் நயன்தாரா.
இதையடுத்து நயன்தாரா பிறந்த நாளன்று வேறு சில படங்களில் அப்டேட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வெளிவரக் காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்..! appeared first on Touring Talkies.
]]>The post ஆனந்தராஜூக்காக வருத்தப்பட்ட நயன்தாரா! appeared first on Touring Talkies.
]]>சில நாட்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், “சில படங்களில் சிறப்பாக நடித்தும் அந்த காட்சிகள் நீளம் கருதி வெட்டப்படுவது உண்டு. விக்னேஷ் சிவன் எனக்கு நல்ல நண்பர். தனது நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கவைத்தார். அந்தப் படத்தில் நான் செய்த காமெடி பலராலும் ரசிக்கப்பட்டது.
ஆனால் அதில் வெட்டப்பட்ட காட்சிகள் அதிகம். அது எனக்கு வருத்தம்தான். என்னைவிட வருத்தப்பட்டவர் நயன்தார். ‘படத்தில் வந்த காட்சிகளைவிட கட் செய்த காட்சிகளில் இன்னும் ரசித்துச் சிரித்தேன்.. அதெல்லாம் கட் செய்யப்பட்டு விட்டதே’ என வருந்தினார். சொல்லப்போனால் இதுவும் ஒரு பாராட்டுதானே” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் ஆனந்தராஜ்.
பரவாயில்லை… நயன்தாராவே பாராட்டி இருக்கிறார் என்றால் அதைவிட வேறு என்ன வேண்டும்!
The post ஆனந்தராஜூக்காக வருத்தப்பட்ட நயன்தாரா! appeared first on Touring Talkies.
]]>The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>வாடகை தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு பல விதிமுறைகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.
ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது என்றும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தே தாம் வாடகைச் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து தகவல்களும் வெளியாகியிருந்தது.
இவர்களின் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை தனிக் குழுவையே அமைத்தது. இப்போது இந்த விவகாரம் குறித்து அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் முறையான ஆதரங்களை சமர்ப்பித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுத்தவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சரியான நெறிமுறைகளை தம்பதிகள் இருவரும் பின்பற்றியதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டே பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் அது தொடர்பான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தம்பதியினரில் யாாராவது ஒருவருக்கு குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் தம்பதியினர் இருவருமே கடந்த 2020-ம் ஆண்டே இதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் சொல்கிறது.
ஆனால் இவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சரியான ஆவணங்களை மருத்துவ நிர்வாகம் முன் வைக்க தவறியதாகவும் இதனால் அந்தத் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவாரணைக் குழு புகார் அளித்துள்ளது.
அதில் இவர்களுக்கு மருத்துவராக இருந்தவர் சரியான சிகிச்சைகளை பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளை தனியார் மருத்துவமனை ஒழுங்காக பராமரிக்கவில்லை. இதனால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
The post வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா-விக்னேஷ் சிவன்-வாடகை தாய் விவகாரத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியானது appeared first on Touring Talkies.
]]>இது குறித்து தமிழக அரசு அமைத்திருக்கும் மருத்துவ விசாரணைக் குழுவிடம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆதாரங்களில் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு முன்பேயே பதிவு திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தைப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post நயன்தாரா-விக்னேஷ் சிவன்-வாடகை தாய் விவகாரத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா-விக்னேஷ் சிவன்-வாடகை தாய் விவகாரம் – அரசு விசாரணை உறுதி appeared first on Touring Talkies.
]]>நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நேற்றைக்கு தங்களது சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
இதையொட்டி நடந்த விசாரணையில் இவர்கள் வாடகை தாய் மூலமாக இந்தக் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம் என்று தெரிய வந்தது.
ஆனால் இ்ந்தியாவில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெறுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. தம்பதிகளுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு குறைபாடு இருக்க வேண்டும். கரு முட்டைகள் உருவாகிய பின்புதான் அது வாடகை தாய்க்கு செலுத்தப்படுதல் வேண்டும் என்ற மருத்துவ ரீதியான நிபந்தனைகள் இதில் உண்டு.
ஆனால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம்தான் திருமணமே நடைபெற்றது என்பதால் இவர்கள் எப்படி இந்த வாடகை தாய் திட்டம் மூலமாகக் குழந்தை பெற முடிந்தது என்று நேற்று இரவு முதலே சமூக வலைத்தளங்களில் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதியினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மருத்துவ ஊரகப் பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதுதான் வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கரு முட்டை 18 வயது முதல் 31 வயதுவரையிலான பெண்களிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.
இதனால், இந்த தம்பதிகள் விதிமுறைகளுக்குட்பட்டு கரு முட்டை செலுத்தி குழந்தை பெற்றார்களா என்று விசாரிக்கப்படும்..” என்று தெரிவித்தார்.
The post நயன்தாரா-விக்னேஷ் சிவன்-வாடகை தாய் விவகாரம் – அரசு விசாரணை உறுதி appeared first on Touring Talkies.
]]>The post வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் appeared first on Touring Talkies.
]]>கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்திலும் நடித்தார் நயன்தாரா.
சமீப நாட்களாக நயன்தாரா இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார். அவர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகிவிட்டார் என்றெல்லாம் இணையத்தளங்களில் செய்திகள் பிறந்து வளர்ந்தன.
இந்த நிலைமையில் இன்றைக்கு அனைவரையும் அதிர்ச்சியாக்கும்வகையில் தாங்கள் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிவிட்டதாக தங்களது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே தெரிவித்துள்ளனர்.
வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்போதும் நயன்தாரா படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்ததால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.
மேலும் ஏற்கனவே நயன்தாராவுக்கு 38 வயதாகிவிட்டதால் இனிமேல் கருவுற்று குழந்தை பெறுவது கடினமான செயல் என்பதால் இந்த முடிவை கணவர் குடும்பத்தாருடன் கலந்து பேசி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாடகை தாய் மூலமாக குழந்தை பெறுதல் உலகம் முழுவதுமே நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தியத் திரையுலகத்திலும் பல பிரபலங்கள் இது மாதிரியாக குழந்தை பெற்றுள்ளனர்.
நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி, சன்னி லியோன், லஷ்மி மஞ்சு, நடிகர் ஷாரூக்கான், பாலிவுட் பட தயாரிப்பாளரும் பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகளுமான ஏக்தா கபூர், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் பல பிரபலங்களும் இதே முறையில் குழந்தை பெற்றுள்ளனர்.
The post வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் appeared first on Touring Talkies.
]]>The post “திருமணம் முடிந்தவுடன் நயன்தாராவுடன் வந்து சந்திக்கிறேன்” – விக்னேஷ் சிவன் பேட்டி appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் இன்று காலையில் சென்னையில் தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் தனது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ளார்.
அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது “லைஃப்ல இப்போது நானும், நயன்தாராவும் அடுத்த கட்டத்துக்குப் போகப் போகிறோம். எனது காதலியான நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.
எங்களது திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்து முறைப்படிதான் எங்களின் திருமணம் நடைபெறும், அன்று மதியம் எனது சமூக வலைத்தள பக்கத்தில் எங்களது திருமண புகைப்படம் வெளியாகும். இதுதான் எங்களது பிளான்.
இந்தத் திருமணத்தில் எங்களது இரு குடும்பத்தினரின் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜுன் 11-ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளேன்…” என்றார்.
இதற்கிடையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இதற்காக இந்தத் திருமண வைபவத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திருமணத்திற்காக 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் வி.வி.ஐ.பி.க்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வி.வி.ஐ.பி.க்களில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரும் அடக்கம் என்று தெரிய வந்துள்ளது.
இவர்களின் திருமண விழாவில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால், யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
இத்திருமணம் தொடர்பான தகவலை விக்னேஷ் சிவன் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #VigneshShivan, #Nayanthara, #GVM, #Netflix ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி உள்ளன.
ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பலரும் இப்போதே நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The post “திருமணம் முடிந்தவுடன் நயன்தாராவுடன் வந்து சந்திக்கிறேன்” – விக்னேஷ் சிவன் பேட்டி appeared first on Touring Talkies.
]]>