The post ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் appeared first on Touring Talkies.
]]>தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அவரது வருகை படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், “மேற்குத் தொடர்ச்சி மலை” ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
இந்தக் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்கள் மூலம் புகழ் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
The post ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார் appeared first on Touring Talkies.
]]>The post மிகவும் பிரபலமான இந்திய நடிகராக தனுஷ் தேர்வு appeared first on Touring Talkies.
]]>தேசிய விருது பெற்ற நடிகரும், Global Icon-ஆகவும் திகழும் நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக் பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயிலாக, முதல் முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார்.
அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும்.
மேலும் தற்போது ‘வாத்தி / சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
The post மிகவும் பிரபலமான இந்திய நடிகராக தனுஷ் தேர்வு appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் இசை கூட்டணி்யில் உருவாகும் ‘வாத்தி’ படம் appeared first on Touring Talkies.
]]>சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றனர்.
நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கி அட்லூரி படத்தை இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பள்ளி ஆசிரியராக தனுஷ் நடிக்கும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
நாளை நவம்பர் 10-ம் தேதி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ள நிலையில் ஒரு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில்… ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ‘வா வாத்தி…..’ என்ற பாடலின் ஒரு சில வரிகளை பாடி வெளியிட்டுள்ளார் தனுஷ். தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார்.
இத்திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
The post தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் இசை கூட்டணி்யில் உருவாகும் ‘வாத்தி’ படம் appeared first on Touring Talkies.
]]>The post தனுஷிடம் சண்டை போட்ட சரண்யா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “வேலை இல்லா பட்டதாரி – “விஐபி – என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார் தனுஷ். அப்போது ‘இந்த படத்தில் உங்களுக்கு பெரிய கதாபாத்திரம்.. ஒரு பாடல் கூட இருக்கிறது’ என்றெல்லாம் கூறினார்.
ஆனால் படப்பிடிப்பின் போது, பெரிய அளவினலான கதாபாத்திரம் இல்லை என தோன்றியது. ஆகவே, தனுஷிடம் ‘என்னை இந்த படத்திற்கு நடிக்கவே அழைத்திருக்கக் கூடாது’ என சண்டை போட்டேன். அதற்கு அவர் ‘படம் முடிந்த பிறகு பாருங்க மேடம்’ என்றார்
படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேசும்போது, படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எனக்கு இத்தனை காட்சிகள் இருக்கிறதா இதெல்லாம் எப்போ எடுத்தார்கள் என்று தோன்றியது.
பிறகு தனுசிடம் ஸாரி கேட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
The post தனுஷிடம் சண்டை போட்ட சரண்யா! appeared first on Touring Talkies.
]]>The post “ஆடுகளம் 2 ”: கிசோர் சொல்லும் தகவல் appeared first on Touring Talkies.
]]>ஆடுகளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் கிசோர் சமீபத்தில் இது குறித்து பேசினார்.
அவர், “என்னிடம் கூட பலரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனிடமே இது குறித்து நான் கேட்டேன். அவரும்,’இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்’ என்றார். ஆனால் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றே நினைக்கிறேன்” என்றார் கிசோர்.
ஆக, ரசிகர்களின் ஆசை நிறைவேறப்போகிறது.
The post “ஆடுகளம் 2 ”: கிசோர் சொல்லும் தகவல் appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ் கேட்ட அந்த கேள்வி! appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில் நடிகர் தனுஷும் சேர்ந்திருக்கிறார். இது குறித்து நேற்று முன்தினம் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் ஷெட்டி “படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார். நான் அவரிடம், ‘என் கல்லூரி காலத்தில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து ரசித்து வருகிறேன்’ என்றேன்.
பிறகு அவர், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அபாரம். அதுபோல காட்சி வைக்க பெரும் தைரியம் வேண்டும். எப்படி அந்த காட்சியை வைக்கத் துணிந்தீர்கள்?’ என்றார்.
அதற்கு நான், ‘நாம் என்ன நினைக்கிறோமோ.. அதைச் செய்துவிட வேணடும் என நினைத்தேன்’ என்றேன்.
தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல.. இயக்குநரும் கூட. அதனாலோ என்னவோ மிகச் சரியாக, கிளைமாக்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார் ரிஷப் ஷெட்டி.
.
The post தனுஷ் கேட்ட அந்த கேள்வி! appeared first on Touring Talkies.
]]>The post ‘அந்த’ ஹிட் படத்தை தவறவிட்ட தனுஷ்!: கஸ்தூரி ராஜா புதிய தகவல் appeared first on Touring Talkies.
]]>செல்வராகவன் இயக்கத்தில், துள்ளவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானதும், பிறகு பெரிய நடிகராக உலா வருவதையும், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என தனது பன்முகத் திறமயை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்ப்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லா.
ஆனால் கஸ்தூரி ராஜா சொல்லி இருப்பது, பழைய சம்பவமானாலும் தகவல் புதுசு!
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் – சந்தியா நடித்த காதல் திரைப்படம் பெரு வெற்றி பெற்றது அல்லவா? இது பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படம்.
இப்படத்தில் நாயகனாக நடிக்க துனுசைத்தான் அணுகினார் பாலாஜி சக்திவேல். தனுசின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவை சந்தித்து கதையைச் சொன்னார். பிறகு இருவரும், ஏவி.எம். நிறுவனத்தில் கதையைச் சொன்னார்கள். அந்நிறுவனமும் ஒப்புக்கொண்டது. தனுசுக்கும், பாலாஜி சக்திவேலுக்கும் அட்வான்ஸும் கொடுத்தது.
அப்படத்தில் தனுஸ்தான் நாயகன் என்பது உறுதியானது. ஆனால் ஏனோ அந்நிறுவனம் படத்தயாரிப்பை தள்ளிப்போட்டது. ஆகவே வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்துவிட்டனர் இருவரும்.
இது குறித்து கூயிருக்கும் கஸ்தூரிராஜா,”நான் எத்தனையோ செக் வாங்கி இருக்கிறேன். ஆனால் ராசாவின் மனசிலே படத்துக்காக ராஜ்கிரனிடம் வாங்கிய செக்கும், காதல் படத்தில் நடிக்க தனுசுக்காக ஏவி.எம். நிறுவனத்தாரிடம் வாங்கிய செக்கும்தான் எனக்குப் பெருமை என நினைத்தேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தம்தான்” என்று சொல்லி இருக்கிறார்.
The post ‘அந்த’ ஹிட் படத்தை தவறவிட்ட தனுஷ்!: கஸ்தூரி ராஜா புதிய தகவல் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆயிரத்தில் ஒருவன்’-2-ம் பாகம் 2024-ம் ஆண்டில் துவங்கும்” – இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>சோழர் காலத்திய வரலாற்றை மையப்படுத்தி உருவானது இப்படம். ஆனால் இந்தப் படம் ‘பொன்னியின் செல்வனைப்’ போல ரசிகர்களைக் கவரவில்லை. பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்தது.
இது குறித்து இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் இயக்கிய எந்தப் படத்தையும் 2-ம் பாகத்தையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து 4 பாகம்வரையிலும் அதனை எடுத்திருப்பேன்.
இந்தப் படத்துக்கு அப்போது ரசிகர்களிடையே பாராட்டும், வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்காதது எனக்கு அதிக சோர்வையும், வருத்தத்தையும் தந்தது. ஆனால் இப்போது 2-ம் பாகங்கள் பல படங்களில் தொடர்வதால் இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2-ம் பாகத்தையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். இது அநேகமாக 2024-ம் ஆண்டு துவங்கும். இந்தப் படத்தில் சோழ அரசராக தனுஷ் நடிப்பார்..” என்றார் செல்வராகவன்.
The post ‘ஆயிரத்தில் ஒருவன்’-2-ம் பாகம் 2024-ம் ஆண்டில் துவங்கும்” – இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நானே வருவேன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவும், இன்னொரு நாயகியாக எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, யோகி பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – செல்வராகவன், தயாரிப்பு – கலைப்புலி எஸ்.தாணு, இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், தயாரிப்பு வடிவமைப்பு – ஆர்.கே.விஜய் முருகன், நடனப் பயிற்சி இயக்கம் – கல்யாண், சதீஷ், சண்டை பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், ஸ்டன் சிவா.
பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டை மகன்களுடன் கோவையின் மலைப் பகுதியில் வசித்து வருகிறார்கள் சரவண சுப்பையாவும் அவரது மனைவியும். இருவரில் மூத்தவனான கதிரின் நடவடிக்கைகள் சமீப காலமாக சைக்கோத்தனமாய் இருக்கின்றன.
இதனால் இவனது தந்தை இவனைக் கண்டிக்கிறார். தண்டிக்கவும் செய்கிறார். ஆனால் கதிரின் சைக்கோத்தனம் முற்றிப் போய் ஒரு கட்டத்தில் அப்பாவையே கொலை செய்துவிடுகிறான்.
இவர்களது அம்மா இருவரின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து பரிகாரம் கேட்க.. “கதிரை உடன் வைத்துக் கொள்ளாதே.. அவன் இன்னொரு மகனை நிச்சயம் கொன்றுவிடுவான்” என்கிறார் ஜோதிடர். இதனால் கோவிலேயே கதிரை அனாதையாக விட்டுவிட்டு அவனது அம்மா பிரபுவை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்.
இப்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் பிரபுவுக்கு இந்துஜாவுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள இந்துஜா ஆர்வமாக இருந்தாலும், தன் வாழ்க்கை படிப்பினையை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட பிரபு, அது வேண்டாம் என்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று மகளின் நடவடிக்கைகளில் வித்தியாசம் கூடுகிறது. தனது அறைக்குள் யாரோ ஒருவருடன் அவள் தனிமையில் பேசுகிறாள். அழுகிறாள். மன நல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றும் பிரயோசனமில்லாமல் இருக்கிறது. கடைசியாக தன் மகளைப் பிடித்திருப்பது ஒரு பேய் என்பது பிரபுவுக்குத் தெரிய வருகிறது.
பேயுடன் டீலிங் பேசுகிறார் பிரபு. பேயோ தான் சொல்லும் ஒருவனை கொலை செய்தால்தான் அவரது மகளைவிட்டு விலகுவேன் என்று உறுதியாகச் சொல்கிறது. அந்தக் கொலை செய்யப்பட வேண்டியவன் யார் என்று பார்த்தால் அது பிரபுவின் உடன் பிறந்த அண்ணனான கதிர்.
அந்தப் பேய்க்கும், கதிருக்கும் என்ன சம்பந்தம்..? கதிரை கொலை செய்ய பேய் ஏன் துடிக்கிறது..? இனி என்ன நடக்கிறது என்பதுதான் இந்த பேய், அமானுஷ்யம், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.
பிரபு, கதிர் என்று இரட்டை வேடத்தில் படம் முழுவதையும் ஒற்றை மனிதராகத் தாங்கிப் பிடித்துள்ளார் தனுஷ். ஒரு பக்கம் ஒரு சாதுவான குடும்பத் தலைவனாக, பாசமிக்க அப்பாவாக, அன்பான கணவனாக, அமைதியின் திருவுருமாக ‘பிரபு’ என்ற கதாபாத்திரத்தில் அமைதியாய் நடித்துள்ளார் தனுஷ்
இன்னொரு பக்கம், சைக்கோத்தனம் கலந்த கொடூர வில்லனாக.. புத்தம்புது வகையிலான நடிப்பை தனது பாடி லேங்க்வேஜ் மூலமாக காட்டி ஏன்யா.. ஏன்.. இப்படி என்று கேள்வி கேட்கும் அளவுக்கு வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார் ‘கதிர்’ என்ற தனுஷ்.
யோகிபாபுவிடம் அப்பாவியாக பேயைப் பற்றி விசாரிப்பதும், தன்னிரக்கம் கொண்டு கவலைப்படுவதும், மகளிடம் பாந்தமாகப் பேசி உண்மையை சொல்ல வைக்கும் இடத்திலும் தனுஷ் தெரியாமல் பிரபுதான் தெரிகிறார்.
இதேபோல் பிரபுவை போலவே துவக்கத்தில் அமைதியான குணத்தைக் காட்டிவிட்டு, பின்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற ரீதியில் காட்டும் கொடூர வில்லத்தனமும், மனைவி, மகன்களிடத்தில் பாசமாக இருந்தாலும் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் முழுக்க, முழுக்க சைக்கோவாக மாறி நடித்திருப்பதிலும் கதிர்தான் தெரிகிறார்.
தனுஷின் மகளாக நடித்திருக்கும் ஹியா டேவிக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். சின்னப் பொண்ணு.. இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடித்திருந்தாலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பேயிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சியிலும், பேய் சொல்வதைக் கேட்டுக் கேட்டு அப்பாவிடம் சொல்லும் காட்சியிலும், பேய் தன் உடம்பில் ஏறியவுடன் காட்டும் திமிரும், அலட்சிய சிரிப்புமாய் நம்மை சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.
இந்துஜா, எல்லி அவரம் இருவருமே பாவமான மனைவிகளாக நடித்துள்ளனர். இந்துஜா இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவராகவே இருக்கிறார். கையறு நிலையில் இருக்கும் அம்மா, மனைவி கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார் இந்துஜா.
இதேபோல் எல்லி அவரம் ஸ்வீடன் நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பாலிவுட் நடிகை போலவே தோற்றமளிக்கிறார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரத்தில் என்ன நடிக்க முடியுமோ, அதைச் செய்து நமது அனுதாபத்தை முழுமையாகப் பெற்றுள்ளார்.
படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்து கவனம் பெற்றுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் இரட்டையர்களின் நடிப்பும் அபாரம். அதிலும் தனுஷ் செய்த கொலைகளை நேரில் பார்க்கும் மூத்த மகன் தனது பயம், பரிதவிப்பு என்ற உணர்வுகளை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.
யோகிபாபு, பிரபு இருவருக்கும் சின்ன கதாபாத்திரங்கள்தான். ஆனால் இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி, திரைக்கதைக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாமல் இருக்கிறது. ஏன்.. எதற்காக இந்தக் காட்சி..?
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் ஏற்ப வித்தியாசமான லைட்டிங்குகள் மற்றும் காட்சிகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது.
சென்னையில் வீட்டுக்குள் நடக்கும் மர்ம சம்பவங்களை படம் பிடித்திருக்கும்விதம் பரபரப்பை கூட்டியிருக்கிறது. இதேபோல் கதிரைத் தேடி பிரபு செல்லும் காட்சியில் அந்தக் காட்டுப் பகுதியை நம் மனதைவிட்டுப் பிரியா முடியாத அளவுக்குப் படம் பிடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், பேயின் அதிரி புதிரி காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் இயக்குநருக்கு பெரிதும் உதவியுள்ளார் என்றே சொல்லலாம்.
படத்தின் இன்னொரு ஹீரோ நிச்சயமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். கதிரின் ஆர்ப்பாட்டமான அறிமுகக் காட்சியில் ஒலிக்கும் ‘வீரா சூரா’ பாடலும், பின்னணி இசையுமே அந்தக் கதாபாத்திரத்தை வெகுவாக உயர்த்திக் காட்டியுள்ளது. பாடல்களும் கேட்கும் ரகம்தான்..! மிகச் சரியாக 2 மணி நேரத்தில் முடியும் அளவுக்கு இறுக்கமான படமாக படத் தொகுப்பு செய்திருக்கும் படத் தொகுப்பாளர் புவன் சீனிவாசனுக்கும் ஒரு நன்றி..!
ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கதையை முடிக்க திரைக்கதை அலை பாய்கிறது என்பதும் உண்மைதான்.
இண்டர்வெல் நேரத்தில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. ‘விக்ரம்’ படம்போல இரண்டாம் பாதிக்காக ஏங்க வைக்கும் டிவிஸ்ட் அது. இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியையும் சஸ்பென்ஸூடன் முடித்து வைத்துள்ளார் செல்வா. பிழைத்திருப்பது கதிரா, பிரபுவா என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!
கடைசிவரையிலும் போலீஸையே கண்ணில் காட்டாதது.. இத்தனை கொலைகளை செய்தும் கதிர் சுதந்திரமாக நடமாடுவது.. கதிரின் சைக்கோத்தனத்திற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தை சொல்லாதது.. என்று பல கேள்விகள் இந்தப் படத்தில் கேட்கப்பட வேண்டியவைகள் என்றாலும், இது அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு ஒரு சுவையான திரில்லிங் அனுபவத்தைத் தரும் படம் இது.
RATING : 3.5 / 5
The post நானே வருவேன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் ‘வாத்தி’ படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்டபள்ளி மது, நரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சரா, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கி அட்லுரி, தயாரிப்பு – நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா, படத் தொகுப்பாளர் – நவீன் நூலி, ஒளிப்பதிவாளர் – ஜே.யுவராஜ், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவிநாசி கொள்ளா, சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், தயாரிப்பு நிறுவனம் – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ், வழங்குபவர் – ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹமத்.
இந்த ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பானது முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
அந்த பட வெியீட்டு அறிவிப்பின் படத்தின் புகைப்படம் தாங்கிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் நாயகன் தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு நாளை காட்டுவது போல் இருந்தது.
தனுஷின் பின்புறம் உள்ள கரும் பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்படுகிறார்.
“தேதியை குறித்துக் கொள்ளுங்கள்… வாத்தி வருகிறார் பாடம் எடுக்க.. 2022 டிசம்பர் 2-ம் தேதி முதல்” என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம்.
The post தனுஷின் ‘வாத்தி’ படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>