The post கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா appeared first on Touring Talkies.
]]>அடுத்து நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ என்கிற படத்தில் கவின் நடித்து வருகிறார். அதன் பிறகு அறிமுக இயக்குனரான விக்கிரனன் அசோக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கு நெகட்டிவ் கேங்ஸ்டர் கதாபாத்திரம் என்றும் அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
The post கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு திரையுலகை அதிர வைத்த இயக்குநர் அட்லீ. appeared first on Touring Talkies.
]]>அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து பேசி இருக்கிறார். இந்தியா அளவில் பல மொழிகளில் தயாராக உள்ள அந்தப் படம் மிகப்பெரிய பிரமாண்ட படமாக அமைய இருக்கிறது. அதற்கான பட்ஜெட் பெரிதாக இருப்பதால் அந்தப் படம் குறித்த பேச்சு வார்த்தை ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது.
இந்தப் படத்தை தயாரிக்க தமிழில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்வது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.
மேலும், இயக்குநர் அட்லீ அதிக சம்பளம் மற்றும் வணிகத்தில் பங்கு என்று தெலுங்கு இயக்குனர்கள் கேட்டிராத பெரும் தொகையை கேட்டிருக்கிறாராம். இதனால் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் அது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறாராம்.
வியாபாரத்தில் பங்கு என்ற அட்லீயின் சம்பள தகவல் தெலுங்கு திரையுலகில் வெளியாகி அதிர வைத்திருக்கிறது. ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் தான் இப்படி வியாபாரத்தில் பங்கு அல்லது ஏரியாவை கேட்பார்கள். இயக்குநர் ஒருவர் இப்படி கேட்கிறாரே என்று பரபரப்பாகியுள்ளது.
அட்லீ கேட்டிருக்கும் சம்பளம் மாற்றும் வியாபாரத்தில் பங்கு என்பதை தயாரிப்பு தரப்பு ஏற்றுக் கொண்டால் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இந்த மாதம் எட்டாம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது.
The post தெலுங்கு திரையுலகை அதிர வைத்த இயக்குநர் அட்லீ. appeared first on Touring Talkies.
]]>The post சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ appeared first on Touring Talkies.
]]>‘குக் வித் கோமாளி’ பாலா நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார். அதில் புதிதாக மின்சார ரயிலில் சமோசா விற்கும் முருகம்மாள் என்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து மகிழ வைத்திருக்கிறார். முருகம்மாவின் கணவர் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்டாராம். மூன்று மகள்களை ஆளாக்க சமோசா விற்று பிழைத்து வரும் முருகம்மாளுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்ததாம்.
இந்த தகவலை தெரிந்து கொண்ட பாலா. தன்னுடைய ராகவா லாரன்ஸ் உதவியுடன் முருகம்மாளுக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சசிக்கு ஆளாக்கி இருக்கிறார்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காளிதாஸ் ஜெயராம் படம்
அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்த ‘போர்’ திரைப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த திரையரங்குக்கு வரவேற்பும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இப்போது இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் போர் படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராசன், பானு, ஜான்விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இணையத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் “அடி கட்டழகு கருவாச்சி”
பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் “அடி கட்டழகு கருவாச்சி” என்கிற பாடலை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. மாயா மகாலிங்கம், ஏகாதேசி இருவரும் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடி உள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில் இப்போது “அடி கட்டழகு கருவாச்சி” பாடலும் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடலாக அமைந்திருக்கிறது.
இணையத்தை கலக்கும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
ஆதம் பாவா இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல் ரூ 16.70 கோடி
பிளஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரிதிவிராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் நேற்று முன்தினம் வெளியானது. உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 16 கொடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் appeared first on Touring Talkies.
]]>மறைந்த நடிகர் முரளியின் சித்தி மகனான டேனியல் பாலாஜி சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வமாக சினிமாவில் பணிபுரியவே ஆசைப்பட்டார். தரமணியில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர் கமல்ஹாசன் நடித்த ‘மருதநாயகம்’ படத்தில் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக அந்தப் படத்தில் உதவி மேனேஜராக பணியாற்றினார்.
முரளி நடித்த ‘காமராசு’ படத்தில் உதவி இயக்குநராக நாஞ்சில் சி அன்பழகனிடம் பணியாற்றியவர், ராதிகா நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘சித்தி’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து டேனியல் என்கிற பாத்திரத்தின் மூலம் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு டேனியல் பாலாஜி என்றே அழைக்கப்பட்டார்.
சுந்தர் கே.விஜயன் இயக்கிய ‘அலைகள்’ தொடரிலும் தொடர்ந்து நடித்தவர் முதல் முறையாக ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் சுரேஷ் என்கிற பாத்திரத்தில் நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவுடன் மோதும் டெரர் வில்லனாக நடித்து தனது நடிப்பின் மூலம் கவனிக்க வைத்தார்.
தொடர்து கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையா’டு படத்தில் கமலுடன் மோதும் அமுதன் சுகுமாரன் என்ற வில்லனாக நடித்தார். வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான ‘பொல்லாதவன்’ படத்தில் கிஷோரின் தம்பியாக மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து தனுஷுடன் முதியவர், தனுஷுடன் ‘வடசென்னை’, விஜய்யுடன் ‘பைரவா’, ‘பிகில்’ என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘ஞான கிறுக்கன்’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர், சென்னை ஆவடியில் ஶ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றையும் கட்டியுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48
பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகினரும் நண்பர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
The post நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் appeared first on Touring Talkies.
]]>The post திரைப்பட விமர்சனம்: தூக்குதுரை appeared first on Touring Talkies.
]]>பட விளம்பரங்களில் யோகிபாபுவுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தாலும், படத்தில் சில காட்சிகளே வருகிறார்.
ஜமீன்தார் மகள் இனியாவை யோகிபாபு காதலிக்கிறார். ஜமீன்தார் ஆட்கள் யோகிபாபுவை, கிணற்றில் தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள். அந்த கிணற்றில்தான், காணாமல் போன கிரீடம் இருக்கிறது. அதை எடுத்து, கோயிலில் வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் கிராம மக்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
யோகிபாபு காமெடியன் மட்டுமல்ல.. சிறந்த நடிகரும்கூட என்பதை மண்டேலா உள்ளிட்ட படங்கள் நிரூபித்து உள்ளன. ஆனால் அவருக்கு அச்சு பிச்சு வசனங்களை கொடுத்து எரிச்சல் ஏற்படுத்துகிறார்கள் இந்த படத்தில். காதலியுடன் ஊரைவிட்டு ஓடுகிறார் யோகிபாபு… காதலியின் ஊர்க்காரர்கள் கொலை வெறியுடன் துரத்துகிறார்கள். உயிர் பயம் வெளிப்படவேண்டிய அந்த காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் யோகிபாபு ஏதேதோ பேச.. முடியலை!
மொட்டை ராஜேந்திரனும் வீணடிக்கப்பட்டு உள்ளார். கதையில் ஏற்படும் திடுக் திருப்பங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதைவிட எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.
இயக்குனர் டெனிஸ், முன்பு ஒரு பேட்டியில், படம் ஒரு அரச குடும்பத்தைச் சுற்றி வருகிறது என்றும், அந்தக் குடும்பம் கைலாசம் கிராம மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம் என்றார்.
உண்மைதான். ஆனால் இதில் சுவாரஸ்யம்தன் மிஸ்ஸிங்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், முத்தழகு போன்ற தொடர்களில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.
ரவிவர்மா கே ஒளிப்பதிவு செய்ய, கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார்.
மொத்தத்தில் படம் சுமார்.
The post திரைப்பட விமர்சனம்: தூக்குதுரை appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: சலார் appeared first on Touring Talkies.
]]>சலார் எப்படி இருக்கி? உயிருக்கு உயிரான நண்பன் மீது ஒரு அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் பட முதல் பாகத்தின் கதை. இந்தியாவில் தன் அம்மாவின் அஸ்தியை கரைக்க வெளிநாட்டில் இருந்து வருகிறார் நாயகி சுருதிஹாசன்.
மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் இவரை கொல்ல முயற்சி செய்கி றது. முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்போடு கொலை முயற்சி நடக்கிறது. அவர்களிடமிருந்து காப்பாற்றி சுருதிஹாசனை பிரபாஸிடம் ஒப்படைக்கிறார் மைம் கோபி.
அம்மா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாயகன். தாய் ஈஸ்வரி ராவின் சொல்லுக்கிணங்க எந்த அடிதடிக்கும் செல்லாமல் சாதுவாக இருக்கிறார் நாயகன் பிரபாஸ். சுருதிஹாசனை கொல்ல வரும்போது தாய் சொன்ன பிறகு எதிரிகளை அடித்து துவம்சம் செய்து காப்பாற்றுகிறார். இதைக் கேள்விப்பட்ட வில்லனாக வரும் பிரித்விராஜ் கும்பல், பிரபாஸை துவம்சம் செய்ய அவர் வீட்டுக்கு வருகின்றனர்.
மிகப் பெரிய வீரனாக இருக்கும் பிரபாஸ் ஏன் தன் தாயின் கட்டுப்பாட்டிற்குள் சாதுவாக இருக்கிறார்? இவருக்கும் அவருடைய நண்பர் பிரித்விராஜுக்கும் இருக்கும் உறவு என்ன? என்பதே சலார் படத்தின் மீதி கதை .அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதிரடி ஆக்சன், பாசம் என பிரம்மாண்ட படமாக முதல் பாதி இருக்கிறது.
இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன அதில் பிரபாஸுக்கும் பிரித்வி ராஜுக்குமான நட்பு, அதன் பிறகு ஏற்படும் பகை, மோதல், அடிதடி சண்டை பழிவாங்கல் என படம் நீள்கிறது. சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த வைக்கிறார் இயக்குனர்.
பிரபாஸின் நடிப்பு அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மாஸாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெருகிறார்.
பிருத்விராஜ் எதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார்.
பாகுபலிக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு சலார் படம் மூலம் திரும்பி இருக்கிறார் பிரபாஸ். படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். நாயகியாக வரும் சுருதிஹாசன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகிறார் ஈஸ்வரி ராவ்.
வில்லனாக வரும் பிரித்விராஜ் பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ஆகியோர் படத்திற்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் அருமை.
அதிரடி ஆக்சன், பாசம், நட்பு என ரசிகர்கள் விரும்பும் கதைக்களத்துடன் வெளியாகி விருந்து வைத்திருக்கிறது சலார்.
The post விமர்சனம்: சலார் appeared first on Touring Talkies.
]]>The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>இதன் மூலம் இயக்குநரின் முதல் படமான ஈரம் படத்துக்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர்
தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.
ஈரம் படத்தை போன்றே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ‘ஆல்பா ப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ‘சப்தம்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழில் சமீப காலமாக திகில் படங்களில் வருகை குறைவாக இருந்த நிலையில், சப்தம் திரைப்படம்
திகில், சஸ்பென்ஸ் படமாக ரசிகர்களை மிரட்டவருகிறது.
The post திகில் திறைந்த ’சப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post பிரபாஸ் நடிக்கும் ’சலார் ’சாதனை படத்தை ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.
]]>பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், சலார் ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,பிருத்விராஜ்
ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ஆம் தேதி வெளியாகும் என தெறிவித்தனர்.இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.
நிலையில், வெளியான 18 மணி நேரத்தில் ‘சலார்’ ட்ரெய்லர் யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
The post பிரபாஸ் நடிக்கும் ’சலார் ’சாதனை படத்தை ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.
]]>The post 4 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர்:அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம்! appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் நடந்த சம்பவங்களை தயாரிப்பாளர் ரவீந்திரன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்க வேண்டும் என விரும்பினேன். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
The post 4 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர்:அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம்! appeared first on Touring Talkies.
]]>The post கருப்பு உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்… appeared first on Touring Talkies.
]]>