The post “பிக்பாஸ் போட்டியாளர்களை எருமை மாட்டை குளிப்பாட்ட வைப்பேன்” – மன்சூரலிகான் அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.
]]>ஆனால், இவை அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான். கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அதிலும், “நான் வந்தா பிக்பாஸாகத்தான் வருவேன்” என்ற அவரது பஞ்ச் டயலாக் பிக்பாஸ் வீட்டையே ஆட்டம் காண செய்துவிட்டது.
பிக்பாஸ் போட்டியில் பலமான போட்டியாளர்களும், பிரபலமான முகங்களும் இல்லாத காரணத்தால், அனைத்தையும் சமாளித்து அதிரடி காட்டும் ஒருவரை தேடிய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நடிகர் மன்சூர் அலிகானை தேர்வு செய்து அவரை அணுகியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், நம்ம அதிரடி மன்னன் மன்சூர் அலிகான், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் 6 மாதங்களுக்கு தன்னிடம் தேதி இல்லை, என்று சொல்லியிருக்கிறார்.
“அப்படியே ஒருவேளை தேதிகளை சரி செய்து பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க நான் சம்மதித்தாலும், நான்தான் பிக்பாஸாக இருந்து போட்டியை நடத்துவேன். 100 ஏக்கர் பொட்டல் நிலத்தை என்னிடம் கொடுங்கள். போட்டியாளர்களை வைத்து அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றி, அதில் விளைச்சல் செய்து காட்டுவதுதான் போட்டி. இதில் வெற்றி பெறுபவர்களை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியாகத்தான் நான் பிக்பாஸ் போட்டியை நடத்துவேன்..” என்று கூறியிருக்கிறார்.
மன்சூர் அலிகானின் இந்த ஐடியாவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ, ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகானின் இந்த நிபந்தனைதான் வைரலாகி வருகிறது.
மன்சூர் அலிகான் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க போகிறார் என்ற செய்தியை தாண்டி தற்போது மன்சூர் அலிகான், பிக்பாஸ் நிகழ்சிக்கே போட்டியாக, பல கருத்துக்களை வைரலாகி வருகிறார்.
இந்த நிலையில், புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடமும், டிவி சேனல்கள் ஏரியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது உண்மையா? புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகானையே தொடர்பு கொண்டு கேட்டபோது, ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன், என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் தொடர்ந்து நான் அதில் பங்கேற்கப் போவதாக செய்திகள் பரவியது. அதனால்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக்பாஸாக போட்டியை நடத்துவேன். என்று கூறினேன். நான் கூறியது வைரலாகி இப்போது அது பற்றி என்னிடம் ரசிகர்க்களும், மக்களும் கேட்க தொடங்கிவிட்டார்கள்.
எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. இதை வித்தியாசமான, புதிய வகை பிக்பாஸ் என்று எடுத்துக் கொண்டாலும் தவறில்லை.
நான் சொல்லும் யோசனைபடி பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தால் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வெற்றியாளர், தோல்வியடைந்தவர் என்று இருக்காது. அனைவருக்கும் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.
நான் குதிரை மீது வந்துதான் போட்டியில் பங்கேற்பேன். எலிமினேஷன் ஆகிறவர்கள் எருமை மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மாடுகளை வளர்க்க வேண்டும். யானைகளை கட்டி போரடிக்க வேண்டும். இப்படி பல வகையான போட்டிகளை நடத்துவேன்.
இந்தப் போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டுமல்ல; வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதி நவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.
மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும்.
இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத் தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறு வயதிலேயே நமது இளைய தலைமுறையினர் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்…” என்றார்.
“இந்த புதிய வகை பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த டிவி-க்காக நடத்தப் போறீங்க?” என்று அவரிடம் கேட்டபோது, “இது என் யோசனை என்பதால் இதை நான்தான் நடத்த வேண்டும் என்பதில்லை. இதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இப்படி நடந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறேன். அப்படி இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.
கதையின் நாயகனாகவும், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்கள் என்று நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க தயாராகவே இருக்கிறேன். காரணம், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமின்றி, டிவி முன்பு உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பயன் தரும்.” என்று பட்டாசு வெடித்தது போல் பதில் கூறினார் நம்ம அதிரடி மன்னன் மன்சூர் அலிகான்.
The post “பிக்பாஸ் போட்டியாளர்களை எருமை மாட்டை குளிப்பாட்ட வைப்பேன்” – மன்சூரலிகான் அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ்-6 – அசல் கோளறு வெளியேற்றப்பட்டார் appeared first on Touring Talkies.
]]>இதில் நடன இயக்குநர் சாந்தி முதல் நபராக வெளியேற்றப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஜி.பி.முத்துவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறினார். இதனால் ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காரணம்… இதற்கான போட்டியில் அசீமும், அசலும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
அசீம் மூர்க்கமாக பேசுவதும், கோபப்படுவதுமாக இருந்தார். அசல் கோளாறு பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது, அவர்களுடன் படுத்துக் கொள்வது, அவர்கள் மீது கால் போடுவது என தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அசீமையும் அசலையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அசல் கோளாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவோடு வாக்குகளை அளிக்காமல் புறக்கணித்து அவரை வெளியேற்றியுள்ளனர்.
The post பிக்பாஸ்-6 – அசல் கோளறு வெளியேற்றப்பட்டார் appeared first on Touring Talkies.
]]>The post “கணவரைப் பிரிந்து வாழ்வது ஏன்..?” – பிக்பாஸில் விளக்கம் சொல்லிய ரக்சிதா..! appeared first on Touring Talkies.
]]>இன்று ‘பிக்பாஸ்’ வீட்டில் ரஷிதா தனது சக போட்டியாளர்களான கதிர், குயின்ஸி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் மனக் குமுறலைக் கொட்டியிருக்கிறார்.
ரக்சிதா இது குறித்துப் லபேசும்போது, “நான் எதற்கெடுத்தாலும் குடும்பம், குடும்பம் என்று பார்த்துதான் அனைத்தையும் இழந்தேன். என் மொத்த வாழ்க்கையும் விமர்சனங்களுக்குப் பயந்து, பயந்தே போய்விட்டது. என் வாழ்க்கை முழுவதும் குடும்பம், குடும்பம் என்று நினைத்தே ஓடிவிட்டது.
நான் ஒரு பார்ட்டிக்குகூட போனது இல்லை. நிறைய பேர் என்னிடம், “பெங்களூரில் பிறந்துவிட்டு பார்ட்டிக்குகூட போக மாட்றியே..?” என்று கேட்பார்கள். ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால்கூட நான் குடும்பத்துடன் மட்டும்தான் போவேன். குடும்பம்தான் என்னுடைய பலம் மற்றும் பலவீனம்.
ஒவ்வொரு வீட்லேயும் அம்மா, அப்பா எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு என்று அனைத்தையும் கொடுத்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் பிள்ளைகளிடம் திருப்பிக் கேட்கலாமா, வேண்டாமா என்று யோசித்து விட்டுவிடுவார்கள்.
அம்மா, அப்பாவை வேறு யார் பார்த்துக் கொள்வார்கள்.? நாமதானே பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு சில கட்டுப்பாடுகளால் நமக்கும் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. அது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது. நீ யார் அதை கேட்பதற்கு என்ற கேள்வி கேட்கும் சூழல் கண்டிப்பாக ஒரு சிலரின் வாழ்க்கையில் தோன்றும். அது போன்ற நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. நான் அந்த நிலைமையை மிகவும் மோசமாக அனுபவித்து இருக்கிறேன்…” என்றும் கூறியுள்ளார்.
The post “கணவரைப் பிரிந்து வாழ்வது ஏன்..?” – பிக்பாஸில் விளக்கம் சொல்லிய ரக்சிதா..! appeared first on Touring Talkies.
]]>The post BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார் appeared first on Touring Talkies.
]]>ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய வீிடியோக்களை வெளியிட்டதன் மூலமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமானார். அவர் இந்த பிக்பாஸ் 6-வது சீஸனில் நுழைந்ததில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் கூடுதலான பார்வையாளர்கள் கிடைத்தார்கள்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே தனது யதார்த்த பேச்சுக்களால் உடன் இருந்த போட்டியாளர்களை சமாளித்து வந்த ஜி.பி.முத்துவுக்கு சமீப நாட்களாக தனது குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும், தவிப்பும் ஏற்பட்டது. அதிலும் தனது மகன் தன்னைக் காணாமல் தவிப்பான் என்று புலம்ப ஆரம்பித்தார்.
இதையடுத்து 2 முறை அவரை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் முத்து மனம் மாறாமல் நேற்றைக்கு சாப்பிடாமலேயே இருந்துவிட்டார். இதையறிந்த பிக்பாஸ் மீண்டும் அவரை அழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருந்தார்.
இன்றைக்கு வார இறுதி நாள் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் கமல்ஹாசன் ஜி.பி.முத்துவை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பேசினார். அப்போதும் ஜி.பி.முத்து தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவரை பிக்பாஸ் அரங்கத்தில் இருந்து வெளியேற அனுமதித்தார் கமல்ஹாசன்.
தொடர்ந்து உள்ளேயிருந்த சக போட்டியாளர்களிடமும் ஜி.பி.முத்து போட்டியில் இருந்து வெளியேறதையும் தெரிவித்தார் கமல்ஹாசன். அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டனர். “நல்ல போட்டியாளரை இழந்துவிட்டோம் என்பதைவிடவும் சிறந்த அப்பாவை அனுப்பி வைத்திருக்கிறோம் என்று நாம் பெருமைப்படுவோம்…” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார் கமல்ஹாசன்.
The post BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார் appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..! appeared first on Touring Talkies.
]]>சிறைக்கு அனுப்புவதற்காக 3 போட்டியாளர்களைத் தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறியதற்காக நடந்த பிரச்சினையில் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவரிடையே எழுந்த வாய்த் தகராறு கடைசியாக டாஸ்மாக் கடை சண்டையில் வந்து முடிந்துள்ளது.
பெண் போட்டியாளர் என்றும் பாராமல் ஆயிஷாவை போடி, வாடி என்றழைத்தார் அசீம். இதைத் தட்டிக் கேட்ட விக்ரமனையும், வாடா போடா என்று அழைத்து டென்ஷனை கூட்டினார் அசீம்.
பதிலுக்கு ஆயிஷாவும் தனது செருப்பைக் கழட்டிக் காட்டி “அடிச்சிருவேன்” என்று அசீமை மிரட்டினார். “அடிச்சுப் பாருடி.. வாடி” என்று அசீமும் கோபத்துடன் கத்த.. நிகழ்ச்சி ஏக ரகளையானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையிலும் இல்லாத வகையில் நடந்த ஒரு அநாகரிகமான நிகழ்ச்சி இதுதான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை பிக்பாஸூக்கு வரும் கமல்ஹாசன் அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்ற பிக்பாஸ் சீஸனில் பேருந்தில் செல்லும்போது ஜாலியாக நடந்த ஒரு நிகழ்ச்சியை கூறிய நடிகர் சரவணன் பெண்களை இழிவு செய்து விட்டதாக உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியே தள்ளிய பிக்பாஸ், இப்போது பெண்களிடம் அவமரியாதையாக “வாடி, போடி” என்று பேசிய அசீம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
The post பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..! appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..! appeared first on Touring Talkies.
]]>பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர்களின் இறுதி பட்டியல் இதுதான்..!
01. ஜி.பி முத்து (Tik Tok)
02. அசீம் (நடிகர்)
03. அசல் கோலார் (Musical Artist)
04. ஷிவின் கணேசன் (Transgender)
05. ராபர்ட் மாஸ்டர் (Dance Master)
06. ஷெரினா (Model)
07. ராம் ராமசாமி (Cricketer / Model)
08. ஆர்யன் தினேஷ் (ADK)
09. ஜனனி (IBC Tamil)
10. அமுதவாணன் (Vijay TV)
11. மஹேஷ்வரி (VJ)
12. கதிரவன் (VJ)
13. ஆயிஷா (Actress)
14. தனலட்சுமி (Tik Tok)
15. ரச்சிதா (Actress)
16. மணிகண்டன் (Actor-Brother of Aishwarya Rajesh)
17. மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த் (Dance Master)
18. விக்ரமன் (VJ)
19. குயின்சி ஸ்டான்லி (Model / Actress)
20. நிவாஷினி (Singapore Model)
நேற்றைய முதல் நாள் நிகழ்வு இன்று இரவு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இது 24 மணி நேரமும் நேரலையாக காண்பிக்கப்படவுள்ளது.
The post பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..! appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..? appeared first on Touring Talkies.
]]>எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம். மக்கள் போட்டியாளர்கள் என்ற கேட்டகிரியில் மேலும் 6 சாமானியமானவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்களாம்.
மேலும் விஜய் டிவியில் தினமும்1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் இந்த பிக்பாஸ்-6 சீஸன் நிகழ்ச்சியைப் பார்க்கலாமாம்.
இந்த சீஸனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி நடிகை விசித்ரா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பாடகி ராஜலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தோழிகளாக நடித்த ரச்சிதா, ‘மைனா’ நந்தினி, டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து, ஆயிஷா, வி.ஜே.மகேஸ்வரி, இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன், வி.ஜே.கதிரவன், கானா பாடகர் வசந்த், ராம்சந்தர், நடன இயக்குநரும், நடிகையுமான மெட்டி ஒலி சாந்தி, திருநங்கை சிவின் கணேசன், சிங்கப்பூர் தொகுப்பாளினி நிவாஷினி, மாடலிங் அழகியான நீது, இவர்களுடன் விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்று இந்தப் பட்டியலில் பலதரப்பட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் கடைசி நேரத்தில் யாராவது இல்லாமலும் இருக்கலாம். சென்ற முறை விஜய் டிவியே பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல்களை லீக் செய்து பிக்பாஸ் பற்றிய பரபரப்பை உண்டு செய்தது. ஆனால் இந்த முறை எதையும் செய்யாமல் அமுக்கமாக இருந்து வருகிறது.
எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் இது தொடர்பான பிரிவியூ வீடியோக்களை விஜய் டிவி வெளியும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வழக்கம்போல இந்த பிக்பாஸ்-6 சீஸனையும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார். கமலின் புரோமோ வீடியோக்கள் தற்போது தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.
The post பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..? appeared first on Touring Talkies.
]]>