The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>என்னதான் அரண்மனை 3 படம் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும் சற்றும் அசராத சுந்தர் சி. இந்த கோடை விடுமுறையை டார்கெட் செய்து அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். குஷ்பு தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகியுள்ளது அரண்மனை 4.
இந்த படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் சி ஒரு வழக்கறிஞர்.செய்துஅப்பா வழி அத்தையாக கோவை சரளா, சகோதரி கதாப்பாத்திரங்களில் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.தான் காதலித்தவரோடு வேறு ஊருக்கு ஓடிப்போய் குடும்பம் நடத்துகிறார் தமன்னா, 10 வருடங்கள் கழித்து திடீரென அவரது வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டு அத்தையோடு தங்கையின் ஊருக்கு போய் அவரது அரண்மனை மாதிரியான ஒரு வீட்டுக்குள் தங்குகிறார் சுந்தர் சி.
அந்த இடத்தில் அப்போது படிப்படியாக தங்கை வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய க்ளூ கிடைக்க ஆரம்பித்த நிலையில் அதை நூல்பிடித்துச் செல்லும்போது பல அதிர்ச்சி பின்னணிகளை கண்டுபிடிக்கிறார் சரவணன். பிரச்சினைகளை தீர்த்து தங்கை குடும்பத்தை சரவணன் எப்படி காத்தார் என்பதை, கொஞ்சம் காமெடி, அப்பப்போ த்ரில்லர் ஹாரர் என காட்டியுள்ளது இப்படம்.
இப்படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. இந்த முதல் பாதியில் பல மர்மங்களும் அதற்கான க்ளூவும் காட்டப்படுள்ளன். இதனால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தோடு கதையோடு நாம் பயணிக்க இயல்கிறது. இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்கியதுமே, சீக்கிரம் சீட்டுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தோன்றுவது இதனால்தான். சமீப காலத்தில் கோவை சரளா காமெடி என நினைத்து ஓவராக சத்தம் போட்டு பேசுவாரே, அப்படியெல்லாம் இதில் கடுப்பக்காமல் செய்யாமல், தனது ட்ரேட் மார்க் எதுகை மோனை பேச்சால் காமெடி செய்திருப்பது முதல் பாதிக்கு மற்றொரு பலம் என்றே சொல்லலாம்.
இப்படத்தின் முதல் பாதி பலமாக இருக்கும் போது இரண்டாம் பாதி சற்று பலவீனமாக தான் உள்ளது.தானே பலமுறை, அடித்து துவைத்த அதே டெம்ப்ளேட்டை சுந்தர் சி பயன்படுத்தியுள்ளார். கிளைமேக்ஸ் நெருங்கும்போது சுந்தர் சி காரில் பரபரப்பாக போவது, இன்னொரு பக்கம் அம்மன் பாடல் இசைக்கப்படுவது என முந்தைய படத்தின் ரீலை மாற்றி இதில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகத்தோடு, கண்ணை கசக்கி பார்க்க வைக்கிறது காட்சிகள். அம்மன் வந்து தீமையை அழிப்பது கிளைமேக்சாக இருப்பது சரியாக தான் உள்ளது.கண்டிபாக நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இது அமைந்திருக்கிறது.நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.
விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.
The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post தெற்கில் இருந்து வடக்கிற்கு வந்த ரத்னம் விஷால்! சிங்கம் 4 வருமா? அருவா வராதா? தகவல் சொன்ன ஹரி… appeared first on Touring Talkies.
]]>தாமிரபரணி, பூஜை படத்தில் இருக்கிற மாதிரி இல்லாம, இதுல ஃபேமிலியோட கான்செப்ட் குறைச்சுட்டு ஃபுல்லா ஆக்ஷன் இறக்கி இருக்கேன். இந்த படத்துல மொத்தம் எட்டு ஆக்சன் சீன்ஸ் இருக்கும். இது நிச்சயமா இளைஞர்களோட படமாக இருக்கும். கதைக்கு ஏத்த மாதிரி தான் ஆக்சன் சேர்த்திருப்பேன். இது முதன் முதலா நான் வட மாவட்டங்களை பின்னணியா வச்சு எடுத்திருக்க படம். என் படத்துல பெரிய விஷயம் அப்படின்னாலே பரபரப்பான கட்டிங், ஸ்பீடு, சேசிங், ஃபைட், தேடுவது இதெல்லாம் தான். ஆடியன்ஸ்க்கு இப்படி ஸ்பீடு இருந்தா தான் புடிக்கும் அப்படின்றதுக்கு ஏத்த மாதிரி இந்த படத்தை கொண்டு வந்து இருக்கேன்.
இதுல ஹீரோ பாசத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குற பையன் , அவன் ஒரு பொண்ண பார்த்ததிலிருந்து அவன் இழந்ததெல்லாம் அவனுக்கு கிடைச்ச மாதிரி உணருரான். அவன் அந்த பொண்ணோட எப்படி ட்ராவல் பண்றான் அவனுக்கு வர பிரச்சனை, அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் அப்படின்றது தான் இந்த படத்தோட கதை. இதுல நிறைய திருப்பங்கள் இருக்கும், யாரும் கைல எடுக்காத ஒரு பிரச்சனையை நான் இதுல எடுத்துருக்கேன். இதில் வர சண்டை காட்சி நீங்க சீட் நுண்ணிக்க வந்து தான் பாக்குற மாதிரி இருக்கும். இது என்னுடைய ஸ்டைல்ல நிஜமான கமர்சியலா படமா அமையும்.
சினிமால கதை நல்லா அமையனும், நல்ல புரடுயூசர் வேணும், அப்படி இருக்கிறப்போ ஹீரோவுக்கு நல்ல ஹீரோயினி அமையும் அப்படின்றது தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு தமிழ் பொண்ணு நடிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு புரிஞ்சுகிட்டு நல்ல தமிழ் தெரிஞ்ச பொண்ணவும் புரிஞ்சு நடிக்கிற பொண்ணாவும் பவானிசங்கர் கண்டிப்பா இருப்பாங்க அப்படின்னு அவங்கள தேர்வு செஞ்சேன்.நடிப்பு நடனம் அப்படின்னு எல்லா விஷயத்திலும் உழைக்குற பொண்ணு அவங்க. ஏன் கடைசி படமா நான் யானை படுத்துக்கோ இவங்க தான் ஹீரோயின்.
யோகி பாபுவ மண்டேலா படம் பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. என் படத்துல அவருக்கு வேற வேற கேரக்டர் கொடுத்து அழகு பார்த்துட்டு இருக்கேன். சமுத்திரக்கனி அவர்கள ரொம்ப நாளாக கவனிச்சேன். கொடூரமான வில்லனா, அன்பான அப்பாவா, அருமையான புருஷனா என எல்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அருமையா வந்து நடிப்பாரு.
என்ன கண்டிப்பான டைரக்டர் அப்படின்னு சொல்ல காரணம் இங்க பணம் அதிகமா புழங்குற இடம்.காலம் பொன்னானது, கமர்சியலா படம் பண்ணும் போது ஹீரோக்களுக்கு என் மேல மரியாதை அதிகமாக இருக்கு. அவங்க சூட்டிங்கு லேட்டா வந்தா நான் விரும்ப மாட்டேன் அப்படின்ற விஷயம் அவங்களுக்கு நல்லாவே தெரியும். சூர்யாவோட அஞ்சு படம், விஷாலோட மூணு படம், விக்ரமோட மூணு படம் அடுத்தடுத்து தனுஷ், சிம்புனு நம்மகிட்ட விஷயம் இல்லாட்டி வருவாங்களா? சக்சஸ் ஃபுல் ஆர்டிஸ்ட் வைத்து நான் சக்ஸஸ்ஃபுல்லா படத்தைக் கொடுத்து இருக்கேன்.
சிங்கம் 4 மற்றும் அருவா வருமா அப்படின்ற கேள்விக்கு, எங்க போனாலும் இத மட்டுமே நிறைய கேட்டுட்டு இருக்காங்க. சிங்கம் படத்த ஹாட்ரிக் அடிக்கிற மாதிரி அடிச்சாச்சு. இதுக்கு அப்புறம் ஒரு பிரமாதமான போலீஸ் ஸ்டோரி ரெடியா இருக்கு. அது யாருக்கு அமையப்போகுதுனு தெரியல. சிங்கம் 4 பத்தி காலம் தான் பதில் சொல்லும். அருவா படத்துக்கு பிளான் அப்படியே இருக்கு. நீங்களே பாருங்க சிங்கம் 4 வைக்காம அருவானு வச்சிருக்கோம். வேறொரு புது படத்தை ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதைப்பற்றி சொல்ல இது சரியான நேரமா இருக்காது. எல்லாரும் நினைக்கிற மாதிரி எனக்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை அப்படின்றது எதுவுமே இல்ல. நாங்க ரெண்டு பேரும் அன்பாகவும் நட்பாகவும் இருக்கிறோம். மறுபடியும் சூழல் வரும் போது அருவா ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.
The post தெற்கில் இருந்து வடக்கிற்கு வந்த ரத்னம் விஷால்! சிங்கம் 4 வருமா? அருவா வராதா? தகவல் சொன்ன ஹரி… appeared first on Touring Talkies.
]]>The post யோகி பாபு நடிக்கும் ‘போட்’ கவனம் ஈர்க்கும் டீசர் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் நாயகனாக யோகி பாபுவும், கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. போரில் இருந்து தப்பித்து 10 பேர் படகில் செல்கின்றனர்.
அப்போது திடீரென படகில் விரிசல் ஏற்படுகிறது இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
மேலும் அந்த படகை பசியொடு சுறா ஒன்று சுற்றுவது போன்று டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The post யோகி பாபு நடிக்கும் ‘போட்’ கவனம் ஈர்க்கும் டீசர் appeared first on Touring Talkies.
]]>The post குய்கோ – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>எப்படி இருக்கு குய்கோ….. சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனாக யோகிபாபு வருகிறார். சொந்த கிராமத்தில் இருக்கும் தாய் காலமாகிவிடுகிறார். அவர் உடலை வைக்க பிரீஸர் பாக்ஸ் தேவைப்படுகிறது. பாக்ஸை எடுத்துக் கொண்டு அந்த மலைகிராமத்துக்குச் செல்கிறார் நேர்கிறது தங்கராஜாக வரும் விதார்த். இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் தங்கராஜையும் அவர் மாமாவையும் போலீஸ் தேடுகிறது.
ஊருக்குத் திரும்பினால் இவர்களை போலீஸ் பிடிப்பார்கள் என்பதால் சவுதியில் இருந்து மலையப்பன் வரும்வரை, அங்கேயே தங்கராஜ் தங்க வேண்டிய சூழல். ஊருக்கு வந்த மலையப்பன் என்ன செய்கிறார்? தங்கராஜை தேடும் போலீஸ் என்ன செய்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது ‘குய்கோ’
ஒரு சாதாரண கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குநர் டி.அருள் செழியன். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் இவர்தான். இதில், சடலம் சுமக்கும் ‘பிரீஸர் பாக்ஸு’க்கு சென்டிமென்ட் டச் கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பது புதுமை.
சமூதாயத்தில் நடக்கும் விஷயங்கள் கிண்டலடிக்கும் வசனங்களும் கதையோடு இணைந்த காமெடியும் ‘குய்கோ’வின், வெற்றி உறுதி என்பது போன்று உள்ளது.
“ஆடு மேய்க்கிறவரை ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க, இந்த மாடு மேய்க்கிறவனை மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டியா?” என்பது போன்ற வசனங்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. யோகிபாபு வந்திறங்கியதும் விறுவிறுப்பை கூட்டுகிறது திரைக்கதை. சவுதி ரிட்டர்னாக வரும் அவர் நடவடிக்கைகள் சிரிப்பைச் கூட்டுகிறது. அவருக்கான பிளாஷ்பேக் காதலும், ‘என் பேரு மாரி’ பாடலும் ரசிக்க வைக்கிறது.
விதார்த் அவருக்கான கதையில் கட்சிதமாக நடித்திருக்கிறார். யோகிபாபு வழக்கம் போல படத்தை தாங்கிப் பிடிக்கிறார். கால்குலேட்டர் சண்முகமாக வரும் இளவரசு இயல்பான நடிப்பால் நகைச்சுவையை வரவழைக்கிறார். கதாநாயகிகளாக பிரியங்கா, துர்கா கதைக்கு பொருத்தம்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை, பசுமை மாறாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது. அந்தோணி தாசனின் இசையில் ‘அடி பெண்ணே உன்னை’, ‘ஏய், என் செகப்பழகி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் ‘குய்கோ’வை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
The post குய்கோ – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post நர்ஸ் கதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! appeared first on Touring Talkies.
]]>படத்தை இயக்கும் சவரிமுத்து கூறும் போது, “நான் விஸ்வாசம், அண்ணாத்த உட்பட சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். மார்க் ஆண்டனி படத்துக்குத் திரைக்கதை எழுதினேன். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது காமெடித்ரில்லர் கதையை கொண்ட படம். ஐஸ்வர்யா ராஜேஷ் நர்ஸாக நடிக்கிறார். யோகிபாபு படம் முழுவதும் வரும் கேரக்டர். மருத்துவமனை பின்னணியில் நடக்கும் கதை இது. படத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைக்க இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இதன் காட்சி அமைப்புகள் இருக்கும். இதுவரை காமெடி த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு இந்தப் படம் இருக்கும். படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது” என்றார்.
The post நர்ஸ் கதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா படத்துக்கு இப்படி ஒரு பெயரா? appeared first on Touring Talkies.
]]>வீடியோவை பொறுத்தவரை காட்டில் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை காட்சிப்படுத்தபடுகிறது. கல்வெட்டு ஒன்றும் காட்டபடுகிறது. பின்பு, சில்லறை நாணயங்கள், ராக்கெட் வடிவத்திலான 500 ரூபாய் தாள், என பரவிக்கிடக்கும் மண்ணில் படத்தின் பெயர் போடப்படுகிறது.
The post நயன்தாரா படத்துக்கு இப்படி ஒரு பெயரா? appeared first on Touring Talkies.
]]>The post யோகி பாபு புதிய பட டைட்டில் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர், “குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும்” என்றார்.
இந்த படத்துக்கு வானவன் என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் மற்றும் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.
The post யோகி பாபு புதிய பட டைட்டில் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ஒரு கையெழுத்துக்காக கால்ஷீட் கொடுத்த யோகிபாபு appeared first on Touring Talkies.
]]>மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது யோகிபாபு, “இந்த படத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பின்னர் தான் உண்மை என்பதே எனக்குப் புரிந்தது.
படத்தில் நதியா மேடம், ஹரிஷ் கல்யாண் போன்றோர் நடிப்பதால் மூவருக்குமான காட்சிகளில் சேர்ந்து நடிக்கும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படும் என்னால் தேதி ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லையே என்று சொன்னேன். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நீங்கள் இப்படத்தில் நடிக்க தேதி கொடுத்தால் நான் தோனி கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை உங்களுக்கு வாங்கித் தருவேன் என்றார். நான் உடனே என் மேனேஜரைக் கூப்பிட்டு இவர் என்ன தேதி கேட்டாலும் கொடு என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
The post ஒரு கையெழுத்துக்காக கால்ஷீட் கொடுத்த யோகிபாபு appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.
]]>பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
ஏழை குடும்பத்தலைவனாக யோகி பாபு.. மனைவியிடம் நேசமுள்ள கணவனாக, மகளிடம் பாசமுள்ள தகப்பனாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனை கண் முன் நிறுத்துகிறார். மகளை இருவர் பலாத்காரப் படுத்த முயல்கிற காட்சியைக் கண்டு பதறுவது, புகார் அளிக்க மறுத்து சராசரி மனிதனின் உணர்வை வெளிப்படுத்துவது, பிறகு அவரே ஆவேசம் கொண்டு நீதி மன்றத்தை நாடுவது, பிறகு விரக்தியில் பேசுவது.. என அற்புதமாக நடித்து உள்ளார்.
யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா, கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
யோகிபாபுவின் அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன் மற்றும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞராக ஹரி கிருஷ்ணன், யோகி பாபுவின் அப்பாவாக ஜி.எம். குமார், சிறுமி பொம்மை நாயகியான ஸ்ரீமதி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு –அதிசயராஜின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் இசை, செல்வா ஆர்.கே.வின் கலை… அனைத்தும் படத்துடன் ஒன்ற உதவுகின்றன.
வசனங்கள் யதார்த்தம்.. சுடும் யதார்த்தம்.
‘பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற’
‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்தான் சீரழியிறான்0’
‘போற உயிரு போராடியே போகட்டும்’ – போன்ற வசனங்கள் நெஞ்சில் தைக்கின்றன.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரிய பதற்றத்தைக் கொடுக்கும் வேளையில் ‘பாரத மாதா யார்’ என்கிற கேள்விக்கு பொம்மை நாயகி சொல்லும் பதில் சிந்திக்க வைக்கிறது.
படத்தை பாடமாகவும் எடுத்துள்ளார் இயக்குநர். உதாரணம், குழந்தைகளை விசாரிக்கும்போது காவலர்கள் சீருடையில் வரக்கூடாது என்பதைச் சொல்லலாம். பலருக்கும் தெரியாத விசயம் இது.
அண்ணன் தம்பியாக இருந்தாலும் வாக்கு அரசியல் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான்.
சாதி உணர்வுடன் செயல்படும் நபர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவும், சாதி உணர்வை தள்ளி வைத்து அநீதிக்கு எதிராக போடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும் காட்சிப் படுத்தி உள்ளார் இயக்குநர் ஷான்.
சமீப காலமாக தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான திரைப்படங்களும் காட்சிகளும் அதிகரித்து வரும் சூழலில் இப்படம் மிக அவசியமானது. அனைவரும் பார்த்து ரசிக்க அல்ல.. உணர வேண்டிய படம்.
The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.
]]>