The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை பாரதிராாஜாவை சந்திக்க தனது மனைவியுடன் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இசையமைப்பாளரின் மனைவி பாரதிராஜாவிடம், “உங்க படத்துல என் கணவரை இசயமைக்கச் சொல்லாதீங்க” என்று சொல்லி இருக்கிறார்.
“கணவனுக்கு வாய்ப்பு தராதீங்க என்கிறாரே” என்று அதிர்ந்து போய்விட்டார். பிறகு, “ஏம்மா இப்படிச் சொல்றீங்க” என்றார்.
அதற்கு இசையமைப்பாளரின் மனைவி, “உங்க படத்துக்கு, இளையராஜாவின் இசைதான் சிறப்பா இருக்கு. அதனாலதான்!” என்று கூறினார்.
# கணவனுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று சொன்ன, அந்த இசையமைப்பாளரின் மனைவி யார்..
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>The post மனைவி ராதிகாவின் திருமணங்கள்!: கணவர் சரத் குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்கள் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா இரண்டு மகள்கள்.
இன்னொரு புறம் நடிகை ராதிகா மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பிறகு விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் முறிந்தது.
இந்த நிலையில்தான் சரத் – ராதிகா திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர். இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் சரத்குமார்.
அவர், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பாதிப்புகள், பிரச்சனைகள் இருக்கலாம். அதை பிறர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நம்மோடு ஒருவர் உறவில் இருக்கும் போது அவர்களுடைய கடந்த வாழ்க்கையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நடிகராக இருக்கும் போது என்னுடைய காதல் கதைகளை நான் ராதிகாவிடம் நிறைய சொல்லி இருக்கிறேன். அப்போது, அவர் என் மனைவியாக வருவார் என்பது எனக்கு தெரியாது. அவரும் என்னை அப்படி பார்த்ததில்லை. என்னை அவர் ஒரு நண்பனாக தான் பார்த்தார்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அரவிந்த்சாமி கூட கோபப்பட்டு, நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம காதலிச்சு இருக்கீங்க? இடையில் நான் இருந்திருக்கின்றேன். நீங்கள் இருவரும் என்னை கோமாளியாக்கி இருக்கீங்க. எனக்கு தெரியாம உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணமா? என்றெல்லாம் பேசி இருந்தார். –
அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த காதல் யாருக்கும் தெரியாது. இதனைத்தொடர்ந்து என்னுடைய கடந்த காலம் பற்றி அனைத்துமே நான் ராதிகாவிடம் கூறியிருக்கிறேன். உண்மையான காதல், நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக் காட்டி நாங்கள் எப்பொழுதும் சண்டை போட்டதே கிடையாது.
திருமணமான பின்பு, என் மனைவியிடம் நான் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறியிருந்தார். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒரு நாள் நீங்களே தவறி அதை வார்த்தைகளாக விட்டுவிடுவீர்கள் என்று கூறுவார். ஆகையால் நானும் ராதிகாவும் கடந்த காலத்தை பற்றி பேச மாட்டோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
அவரது பதில் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது.
இந்த பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post மனைவி ராதிகாவின் திருமணங்கள்!: கணவர் சரத் குமார் பதில் appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம்! appeared first on Touring Talkies.
]]>ஆரம்பகாலத்தில் அவர் நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்குபார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருக்கு தங்கமணி என்கிற பெயரும் உண்டு.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஜப்பான் நாட்டு விமானங்கள் சென்னையில் குண்டு வீசப்போகிறது என தீயாக செய்திகள் பரவியது. எனவே, மக்கள் பீதியில் இருந்தனர். எம்.ஜி.ஆரும், அவரின் சகோதரர் சக்கரபாணியும் தங்கள் மனைவிகளை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊருக்கு சென்ற பார்கவி மாரடைப்பில் மரணமடைந்தார். மனைவி இறந்துபோன செய்தி கேட்டு எம்.ஜி.ஆர் துடிதுடித்துப்போனார். எம்.ஜி.ஆர் அங்கு செல்வதற்கு முன் பார்கவியை அடக்கம் செய்துவிட்டனர். இதனால் கடைசியாக தனது மனைவியின் முகத்தை கூட அவரால் பார்க்க முடியாமல் போனது. இந்த சோகம் எம்.ஜி.ஆரை பெரிதும் பாதித்தது. அவரை அவரின் அன்னை சத்யாவும், சக்கரபாணியும் தேற்றினர்.
பார்கவி 1942ம் வருடம் மரணமடைந்தார். அதாவது எம்.ஜி.ஆரின் முதல் திருமண வாழ்க்கை 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது. அடுத்து அவர் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் காசநோயால் பாதிக்கப்பட்டு 1962ம் வருடம் மரணமடைந்தார். சதானந்தவதி நோய்வாய் பட்டு படுக்கையில் இருந்தபோதே அவரின் சம்மதத்துடன் ஜானிகியை எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தனது இரு மனைவிகளின் மரணங்களே தன்னை மிக பாதித்ததாக ஒரு முறை எம்.ஜி.ஆர். பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
The post எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம்! appeared first on Touring Talkies.
]]>The post முதலிரவில் மனைவியை துரத்தியடித்த சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள் கதையே, சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்ததுதான் என்றும் சொல்வார்கள்.
அதாவது, முதலிரவு அன்று, மணப்பெண் தனது காதலனைப் பற்றி கூற… மணமகன் அதிர்ச்சி அடையாமல், அந்த காதலனுடன் மனைவியை சேர்த்துவைக்க முயல்வதுதான் கதை.
“இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் செய்தார் சந்திரபாபு..” என்று நெகிழ்பவர்கள் உண்டு.
ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு.
இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும் திரைப்பட இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பேசியதில் இருந்து..
“ 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். ஏற்கெனவே தனக்கு இருந்த காதல்கள் குறித்து சந்திரபாபு கூறினார். மனைவியிடமும் மனம் திறந்து பேசுமாறு கூறினார்.
கணவர் இவ்வளவு வெளிப்படையாக பேசும்போது, நாம் எதையும் மறைக்கக்கூடாது என நினைத்த மனைவிய, தனக்கு இருந்த காதல் பற்றி கூறினார்.
இதை எதிர்பார்க்காத சந்திரபாபு, ஆத்திரமாக, முதலிரவு அன்றே மனைவியை வெளியில் தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டார்.
சந்திரபாபு மற்றும் அவரது மனைவிக்கு காட் பாதராக இருந்தவர், கே.சுப்ரமணியன். அவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் சந்திரபாபு, ‘சேர்ந்து வாழச் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றார். ஆகவே தம்பதி, முதலிரவோடு பிரிந்தனர்.
அந்த பெண்மணி பிறகு லண்டன் சென்று படித்தார்.
இந்த விசயத்தை, கே.சுப்ரமணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயக்குநர் பழமுதிர் சோமநாதன் பதிவு செய்து உள்ளார்” என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்ய தகவல்களுக்கு touring talkies யு டியுப் சேனல் பாருங்கள்..
The post முதலிரவில் மனைவியை துரத்தியடித்த சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>The post “நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்! appeared first on Touring Talkies.
]]>அதில், “இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போது நான் சம்பாதித்து அவரைக் காப்பாற்றினேன். இதை அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பேட்டிகளிலும் சொல்லியுள்ளார். ஆனால் இப்போது, வேறு ஒருபெண்ணுடன் வாழ்கிறார். அவர்களால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என தெரிவித்து உள்ளார்.
ஆனால் ஏற்கெனவே இவர், “எனக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆகவே நான்தான் என் கணவருக்கு அந்த பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தேன்” என்று தெரிவித்து இருந்தார்.
The post “நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்! appeared first on Touring Talkies.
]]>The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.
]]>சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.
The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.
]]>The post ‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>அதேபோல் ரஜினியின் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, பொல்லாதவன், கமலுடன் காக்கிச்சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்துடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள செந்தாமரை ரஜினியுடன் நடிக்க பயப்படுவார் என்று அவரது மனைவி கௌசல்யா செந்தாமரை தெரிவித்துள்ளார்.
சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர் கூறுகையில், “ரஜினி குடுமபத்தினருக்கும் எங்களுக்கும் ஆழமான நட்பு உள்ளது. ஒருமுறை ரஜினியின் குடும்பத்தில் பிரச்சினை வந்தபோது ரஜினியை சராமாரியாக திட்டிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். இதை நடிகர் முத்துராமன் என்னிடம் தெரிவித்தார். அதேபோல் அவர் ரஜினியுடன் இணைந்து நடித்த தம்பிக்கு எந்த ஊரு என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மூன்று முகம் படத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படம். இந்த படமும் எனக்கு பிடிக்கும். அதே சமயம் மற்ற நடிகர் நடிகைகயுடள் நடிக்கும்போது என் கணவர் பயப்படுவார். நடிப்பில் அவர்கள் நம்மை விட அதிக பர்பாமன்ஸ் செய்து நாம் இந்த சீனில் தெரியாதபடி ஆகிவிடுமோ என்ற பயம். இது அதிகமாக ரஜினி படத்தில் தான் நடக்கும். ஆனாலும் இருவரும் போட்டி போட்டு நடித்து பாராட்டுக்களை பெறுவார்கள் அப்படி ஒரு படம்தான் மூன்றுமுகம்” என்று கூறியுள்ளார்.
The post ‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>The post “வீரப்பன் இப்போது தேவை!”: முத்துலட்சுமி appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎன்ஆர் ராஜா, இயக்குநர் பேரரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீரப்பன் மகள் விஜயலட்சுமி பேசும்போது, “சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்து படம் இது. ஆகவேதான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, ‘ எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர். அவர் எப்போதும் சாதிக்கு துணை போகாதவர். வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதே தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர்.
ஆனால் அன்று வீரப்பன் தேசத்துரோகி என்று அவரை விஷம் வைத்து இந்த அரசு கொலை செய்தது. அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறை பொய் சொல்லி வருகிறது’ என்றார்.
The post “வீரப்பன் இப்போது தேவை!”: முத்துலட்சுமி appeared first on Touring Talkies.
]]>The post பிரபல நடிகரின் மனைவி கைது! appeared first on Touring Talkies.
]]>பிரபல நடிகர் தாடி பாலஜியின் மனைவியும் நடிகையுமான நித்யாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மாதவரம் பகுதியில் வசித்து நித்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே காரை நிறுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய் தகராறு நீடித்து வந்தது.
இந்தநிலையில், தன் காரை சேதப்படுத்தியதாக மணி காவல் நிலையத்தில் நித்யா மீது புகார் அளித்தார். .
காரை நித்யா சேதப்படுத்துவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக கொடுத்தார்.
இதையடுத்து மாதவரம் போலீசார் நித்யா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சட்டப்பிரிவு 427 (பிறர் சொத்துகளை சேதப்படுத்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால், அவரை காவல்நிலைய பிணையில் போலீசார் விடுவித்தனர்.
The post பிரபல நடிகரின் மனைவி கைது! appeared first on Touring Talkies.
]]>The post மணிகண்டன் கஷ்டப்படறத பார்க்க சந்தோசமா இருக்கு!: மனைவி சோபியா appeared first on Touring Talkies.
]]>பிக்பாஸ் நிகழ்ச்சியில், மணிகண்ட ராஜேஷ் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். தமிழில் அட்டக்கத்தி, காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் இவர். சன்.டிவியின் அழகு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்ததோடு, மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.
இவரது மனைவியும் நடிகையுமான சோபியா, “மணிகண்டன் , வீட்ல பெருசா வேலை ஏதும் செய்ய மாட்டார். சமையல்ல கொஞ்சம் கொஞ்சம் ஹெல்ப் பண்றதோட சரி..இந்த நிலையில பிக்பாஸ்ல டாஸ்க் அப்படிங்கிற பேர்ல மணிகண்டன் படற சிரமத்தைப் பார்க்க சந்தோசமா இருக்கு.” என்றார்.
The post மணிகண்டன் கஷ்டப்படறத பார்க்க சந்தோசமா இருக்கு!: மனைவி சோபியா appeared first on Touring Talkies.
]]>