The post டோலிவுட்-ல் எட்ன்ரி கொடுக்கும் மம்தா பைஜூ… ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இதனைத் தொடர்ந்து, மமிதா பைஜூ திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகையாக மாறினார். இதே நேரத்தில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் காதல் மன்னன் என்று அழைப்பது அனைவரும் அறிந்ததே…
விஜய் தேவரகொண்டா ஒரு ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை “ஜெர்சி” படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்கவுள்ளார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும், மற்றும் தற்காலிகமாக VD-12 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலே அவர் ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் தற்போது அவர் .
விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்குகிறார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும். தற்காலிகமாக VD-12 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார் பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்
The post டோலிவுட்-ல் எட்ன்ரி கொடுக்கும் மம்தா பைஜூ… ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post தில் ராஜூவுடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா! பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு Triple ட்ரீட்… appeared first on Touring Talkies.
]]>குறிப்பாக, “கீத கோவிந்தம்” மற்றும் “அர்ஜுன் ரெட்டி” போன்ற படங்கள் மூலம் பாராட்டையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். அவரது சமீபத்திய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை எனினும், அவரது நடிப்புக்கும் திறமைக்கும் பஞ்சமில்லை.இந்நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்களை குறித்த அப்டேட்கள் போஸ்டராக வெளியாகியுள்ளது.மற்றொரு படத்தின் படக்குழு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ளது.
கடைசியாக “பேமிலி ஸ்டார்” என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் ஆனால் அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.தற்போது விஜய் தேவரகொண்டாவின் அடுத்தடுத்த திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளயாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
முதலாவதாக ஒரு போஸ்டர் ரத்தக்கறை படிந்த கை வாளை ஏந்தியபடி உள்ள காட்சிகளை கொண்டுள்ளது, இது கிராமப்புற ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது.மேலும், இப்படத்தை ரவிகிரண் கோலா இயக்குகிறார் இவர், “ராஜா வாரு ராணி காரு” எனும் வெற்றி படத்தை இயக்கியவர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் 59வது திரைப்பட தயாரிப்பு இதுவாகும்.
அதேபோல் விஜய் தேவரகொண்டாவின் 14வது திரைப்படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது.இப்படத்தை மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் ராகுல் சங்கீர்த்தியான் இயக்கவுள்ளார்.இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.அதேபோல் VD12 படமும் உருவாகியுள்ள நிலையில் படக்குழுவினர் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டு விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை கௌதம் தின்னாரி இயக்குகிறார்.நாக வம்சி தயாரிக்கிறார்.
The post தில் ராஜூவுடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா! பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு Triple ட்ரீட்… appeared first on Touring Talkies.
]]>The post தமிழ் இயக்குநரின் படங்களில் நடிப்பேன் – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் விளம்பர வேளைகளில் ஈடுபட்டிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா விரைவில் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது.
சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது.. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன்.
என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.
இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.
இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் … காதலிப்பதிலும்… நேசிப்பதிலும்… கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.” என்றார்.
அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோரும் படம் பற்றி கருத்து தெரிவித்தனர். இந்தப் படத்தின் வெற்றி இந்திக்கும் இந்தப் படத்தை எடுத்து செல்லும் என்றும், அதற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.
The post தமிழ் இயக்குநரின் படங்களில் நடிப்பேன் – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>The post ஹோலி பண்டிகையை தவிர்த்தது ஏன்? – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தப் படம் குறித்து ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறுகையில், “வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன். ஆனால், தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இங்கு ஹோலியை உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் ‘பேமிலி ஸ்டார்’ படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை. குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம்..” என்றார்.
ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் ‘மதுரமு கதா’ மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான “ஃபேமிலி ஸ்டார் ” படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன, மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதை’ பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. “ஃபேமிலி ஸ்டார்” படத்தின் டிரைலர் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.
“ஃபேமிலி ஸ்டார்” படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, மார்த்தாண்டன் கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
The post ஹோலி பண்டிகையை தவிர்த்தது ஏன்? – விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>The post சம்பளத்தில் இருந்து ரசிகர்களுக்கு ரூ 1 கோடி!: விஜய் தேவரகொண்டா உதவி appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நானும் மகிழ்வுடன் இருக்கிறேன். நான் சில விஷயங்களை யோசித்திருக்கிறேன். அது சரியா, தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அதை நான் செய்யாவிட்டால் எனக்கு தூக்கம் வராது.
என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக ‘குஷி’ படத்தின் என் ஊதியத்திலிருந்து ரூ.1 கோடி ரூபாயை 100 ரசிகர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த 10 நாட்களில் கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறேன். என்னுடைய வெற்றி, என்னுடைய சந்தோஷம், என்னுடைய சம்பளம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்தப் பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டு வாடகை அல்லது கல்விச் செலவு என எதற்காவது பயன்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன். அடுத்த 10 நாட்களில் ‘குஷி’ படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இந்த தொகை 100 குடும்பங்களுக்கு சென்றடைந்துவிடும். இது நிறைவடைந்தால் தான் படத்தின் வெற்றியை எனக்கு முழுமையடையும்” என பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ‘குஷி’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ரூ.70 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
The post சம்பளத்தில் இருந்து ரசிகர்களுக்கு ரூ 1 கோடி!: விஜய் தேவரகொண்டா உதவி appeared first on Touring Talkies.
]]>The post விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் ‘குஷி’ ரூ.70 கோடி வசூல் appeared first on Touring Talkies.
]]>கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ‘குஷி’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரொமான்டிக் – காமெடி ஜானரைக் கொண்ட ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு கைகொடுக்கவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும், திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.70.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
The post விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் ‘குஷி’ ரூ.70 கோடி வசூல் appeared first on Touring Talkies.
]]>The post சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வருகின்றன.
தற்போது இருவரும் குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளனர். அங்கு ஓட்டல் ஒன்றில் விஜய்தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார்.
மேலும்,, “நீ கடைசியில் இருந்தபோதும் பார்த்தேன். முதல் இடத்திற்கு வந்தபோதும் பார்த்தேன். நீ உன்னத நிலையை அடைந்தபோது கூட பார்த்தேன். வாழ்க்கையில் நீ கடந்து வந்த மேடு பள்ளங்களை எல்லாம் பார்த்தேன். எப்படிப்பட்ட நேரத்திலும் கூட சினேகிதர்கள் நம்முடனேயே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
விஜய்தேவரகொண்டா, “எப்போதும் எனக்கு பிடித்த பெண் சமந்தா” என்ற பகிர்ந்துள்ளார்.
ஆக இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளது என்கின்றனர் தெலுங்கு பட உலகினர்.
The post சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ! appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் விஜய்கூட ஜாலி டூர் போனேன்!”: ‘வாரிசு’ ஹீரோயின் டமார்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக தெலுங்கு மீடியாவில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இருவருமே இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அந்த படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றினர்.
இதையடுத்து, “இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டனர்” என தெலுங்கு யு டியுப் சேனல்கள் சில, தெரிவித்தன.
இதையடுத்து ராஷ்மிகா, “விஜய் தேவர்கொண்டா எனது நண்பர். அவருடன் மாலத்தீவு சென்றேன். நண்பர்கள் சுற்றுலா செல்லக்கூடாதா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post “நடிகர் விஜய்கூட ஜாலி டூர் போனேன்!”: ‘வாரிசு’ ஹீரோயின் டமார்! appeared first on Touring Talkies.
]]>The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த ‘லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், இவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டேவும் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜானி சையிக் பாட்ஷா, பட தொகுப்பு- ஜுனைத் சித்திக், எழுத்து, இயக்கம் – பூரி ஜெகன்நாத்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும்விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி, இந்த மாஸ் ஆக்ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது.
துணிச்சலான கதை சொல்லலுக்காக இந்தப் படம் நீண்ட காலமாக ரசிகர்கள் நினைவில் இருக்கும். படத்தில் MMA ஃபைட்டராக நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா உண்மையில் தன்னுடைய மிகப் பெரிய உழைப்பை தந்துள்ளார்.
உலகம் போற்றும் லெஜண்ட்டான மைக் டைசன் இத்திரைப்படத்தில் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வதேச அடையாளமாக விளங்கும் மைக் டைசனின் பிறந்த நாள் சிறப்பு வீடியோவில், அவரது பணிவான குணமும் மற்றும் அவர் படக் குழுவுடன் நெருக்கமாக இருந்தவிதமும் பலரின் இதயங்களை வென்றது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த ‘லைகர்’ படம் கருதப்படுகிறது. மேலும், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும் படக் குழுவினரின் எதிர்பார்ப்புகள் மேலும், மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது.
நேற்றைக்கு வெளியான விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Cross breed போஸ்டர் மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது .
விஜய் தேவரகொண்டாவின் அனைத்து திறமைகளைும் ஒட்டு மொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கிட்டத்தட்ட நிர்வாணமான தனது உடலமைப்பைக் காட்டியுள்ளார். இப்படி போஸ் கொடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும்தான்.
விஜய் தேவரகொண்டா மிகவும் துணிச்சலானவர். தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை இந்தச் செயலின் மூலம் அவர் காட்டியுள்ளார்.
இந்தப் படக் குழு சமீபத்தில் மும்பையில் ஒரு பாடலை பதிவு செய்தது. படக் குழுவினர் படத்திற்கான விளம்பரங்களைத் விரைவில் தொடங்கவுள்ளனர். அடுத்தடுத்து தொடர் அப்டேட்களுடன் வர தயாராக இருக்கின்றனர்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன் மொழி இந்திய திரைப்படமான இந்த ‘லைகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.
]]>