The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவைத் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளார்.வைரமுத்துவை வளர்த்தது நாங்கள் தான் என்றும், இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும், வைரமுத்துவுக்கு நன்றி உணர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்றாலும் நல்ல மனிதர் அல்ல எனக் கூறினார். இனி வைரமுத்து இளையராஜாவைப் பற்றி தவறாக பேசினால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், வைரமுத்து தனது புதிய ட்வீட்டில் பாடல் வரிகள் தான் படத்திற்கு பலம் என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.
The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா என்பது தற்போது திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல பாடல் பிறக்கும் என்றும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பெயர் இல்லாமல் யாரை எப்படி அழைப்பது? வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
காலம் கடந்த பாடல்கள் இன்னும் நிலைத்திருப்பதற்கு இசை மட்டுமே காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை, எந்த இசையுமின்றி பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு போன்ற பல கவிஞர்களின் சிந்தனைக்கூறும் பாடல் வரிகள், காலத்தை கடந்து நிற்கின்றன என்று கூறினார்.
இசையும் கவிதையும் இணைந்தால் தான் பாடல் உருவாகும். இல்லை என்று கூறுவது அறியாமை என்று வைரமுத்து கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது எனவும் ஒருவேளை இவர் கருத்து பாடலுக்கு உரிமை கோரும் இளையராஜாவை தான் குறித்து வைத்து பேசுகிறாரோ என்று இணையத்தில் வினாவி வருகின்றனர்.
The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>The post ’தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர்’ எக்ஸ் பக்கதில் பதிவிட்ட வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பின் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு நடவெடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் திரைப் பிரபலங்கள் விஜய், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைரமுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி’ எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது. வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம்.
விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன். என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.
The post ’தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர்’ எக்ஸ் பக்கதில் பதிவிட்ட வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>The post “பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன!”: ‘கட்டில்’ பட விழாவில் வைரமுத்து காட்டம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.
இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:
“தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர். என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர்.
அவர் இயக்கி நடித்துள்ள கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும்.
பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள் ஆனால் இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு .இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதற்குத்தான் ஆசைப்படுகிறோம்.
கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன், அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார், ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார்.
காட்டில் சிங்கம், புலி போன்ற வலிய விலங்குகள் மட்டுமல்ல.. எளிய சிறு விலங்குகளும் வாழும். அதே போல கட்டில் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகி வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும். வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று வைரமுத்து பேசினார்.
The post “பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன!”: ‘கட்டில்’ பட விழாவில் வைரமுத்து காட்டம் appeared first on Touring Talkies.
]]>The post கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>‘சிப்பியில் தப்பிய நித்திலமே…
நித்திலம் என்றால் என்ன?’
‘முத்து’
‘புரியுமா?’
‘அறுபதுகளில் புரிந்தது
எண்பதுகளில் புரியாதா?’
‘அப்போதே வந்திருக்கிறதா;
எந்தப் பாட்டில்?’
‘எம்.ஜி.ஆர் பாட்டில்:
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே’
(சிறிய சிந்தனைக்குப் பிறகு)
‘சரி சரி’
# கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்
தமிழைக் காப்பாற்றினார்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
The post கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>The post 40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மண்வாசனை வெளிவந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்..’ என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது. ‘என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்..’ என்பது விளக்கம்
இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது வெட்கப்பட ஆளுமில்லை மஞ்சளுக்கும் வேலையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>The post அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!: வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>நிகழ்வில், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என விஜய் பேசினார். இதையடுத்து அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற யூகம் வலுப்பெற்று உள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியலுக்கு நான் வருவேனா, என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது” என்று கூறினார்
The post அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!: வைரமுத்து appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் நடிப்பாரா? வைரமுத்துவின் நாவல் சினிமா படமாகிறது! appeared first on Touring Talkies.
]]>மதுரை அருகே வைகை அணை கட்டியபோது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்கள் நடத்திய போராட்டமே இந்த நாவலின் கதை. மண்சார்ந்த மக்களின் வாழ்வியலாக கதை உருவாகி இருந்தது.
திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் ஜி.வி.பிரகாஷ் இந்த நிலையில் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது படமானால் ஆஸ்கார் போன்ற விருதுகள் பெறக்கூடிய சர்வதேச தரம் இந்த கதைக்கு இருப்பதாக படக்குழுவினர் கருதுகிறார்கள்.
டைரக்டர் விக்ரம் சுகுமாரன் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை படமாக எடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். இவர் மதயானை கூட்டம் படத்தை எடுத்து பிரபலமானவர். தற்போது சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் படத்தை இயக்கி வருகிறார்.
கள்ளிக்காட்டு இதிகாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரமை நடிக்க வைக்க பரிசீலனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
The post விக்ரம் நடிப்பாரா? வைரமுத்துவின் நாவல் சினிமா படமாகிறது! appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினி கேட்டது ஒரே ஒரு முறைதான்!”: வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>அவர், “அண்ணாமலை திரைப்படத்திற்கு நான் பாடல்கள் எழுதி, கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ‘கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ… குஷ்பூ’ என பல்லவி எழுதிவிட்டேன். உடனே எல்லோரும், ‘குஷ்பூ பேர் பாடலில் வருகிறதே, நல்லா இருக்குமா’ என்று கேட்டார்கள். நான், ‘அதெல்லாம் நல்லா வரும், தியேட்டரில் விசில் பறக்கும்’ என்று கூறினேன்.
தவிர, கவியரசர் கண்ணதாசன் ‘அம்பிகாபதி’ படத்தில் ஒரு பாடலில், அதில் நடித்த நடிகை பானுமதியின் பெயரைச் சாமர்த்தியமாக சேர்த்ததைச் கூறினேன்.
அப்போது அங்கு வந்த ரஜினிகாந்த் பாடல் குறித்துக் கேட்டார். குஷ்பூ பெயர் பாடல் இடம்பெற்றிருந்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ரஜினி, ‘என்னுடைய பேர் வருமா’ என்று கேட்டார்.
அதன் பின்னர் தான் ‘என்றும் நீ ராஜா நீ ரஜினி’ என்ற வரிகளை சேர்த்தேன். என்னிடம் ரஜினி வாய்விட்டு கேட்ட ஒண்ணே ஒண்ணு இதுதான்” என்றார் வைரமுத்து.
The post “ரஜினி கேட்டது ஒரே ஒரு முறைதான்!”: வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>
பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி, ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
“கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜாவே எழுதிவிட்டார்.
வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினார்.
அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார்” இவ்வாறு பிஸ்மி கூறினார்.
The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>