The post 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி… appeared first on Touring Talkies.
]]>இந்த கேரக்டர்காக நடிக்க கமல் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறாராம்.மேலும் இந்த கூட்டணியில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படக்குழுவினர் இறுதிகட்ட பணிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கமலின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் மிரட்டி இருக்கிறார். சும்மாவே கமல், நடிப்பில் பிச்சு உதறுவார். அப்படிப்பட்டவருக்கு இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் சொல்லவா செய்யணும். அதனால் தான் கமலின் அசுர நடிப்பை பார்த்து ராஜமவுலி வியந்து போட்டுள்ளாராம்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் புது படம் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்க வேண்டும் என்று ராஜமவுலி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு ப்ளான் போட்டு வைத்துள்ளாராம் ராஜ மௌலி. இதற்கான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கமல், தக் லைப் படத்தை முடித்துவிட்டு ராஜமௌலியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடி வாங்கிய கமலுக்கு வலைவிரித்த ராஜமெளலி… appeared first on Touring Talkies.
]]>The post அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்துள்ள சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்தார் ரஜினிகாந்த். அவரும் அமிதாப் பச்சனும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் நேற்று வெளியாகி ட்ரெண்ட் ஆகின.
சூர்யா நடித்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். போலி என்கவுண்டருக்கு எதிரான படம் வேட்டையன் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல கல்வியில் நடந்து வரும் ஊழல் குறித்தும் இந்த படம் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு முக்கிய சந்திப்பில் ஏற்பட்ட நட்பில் டிஜே ஞானவேல் நானிக்கு ஒரு கதையை சொன்னதாகவும் அது அவரை மிகப்பெரிய அளவில் கவர்ந்த சூழலில் அந்த படத்தில் நடிக்க அவர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ஞானவேல் விரைவில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இவர் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நானியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
The post அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post கவினை இயக்குகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? கவின் உடைத்த சீக்ரெட்… appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளின் வெளியாகிறது. நேற்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தளபதி விஜய் போலவே கவின் நடந்து வருவதாகவும் ரசிகர்களை பார்த்து கை அசைப்பதாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் ட்விட்டர் பக்கத்தில் கிளப்பி விட்டனர் ரசிகர்கள்.
ஸ்டார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினிடம் ஒரு படம் வெற்றி அடைந்த உடன் அதிகமாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது அது பற்றி உங்களின் கருத்து என்ன என பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு கவின் எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரின் மார்க்கெட் தெரியாமல் சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கமாட்டார்கள். நான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் என் சம்பளம் வெறும் 1000 ரூபாய் தான். அந்த சீரியல் முடிக்கும் போது என்னுடைய சம்பளம் 6000 ஆக மாறியது. ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு நீங்கள் சென்றால் கூட சம்பள உயர்வு எதிர்பார்க்கிறீர்களா மாட்டீர்களா என நெத்தியடியாக ஒரு பதிலை கூறினார்.
அதோபோல் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இன்னமும் அந்த படம் எப்போது துவங்கும் யார் ஹீரோ என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அது தொடர்பான கேட்க்கப்பட்ட கேள்விக்கு , ஜேசன் சஞ்சய் என்னை வந்து சந்தித்து கதை சொன்னது உண்மைதான் தான் ஆனால் நான் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறியதால் அவரும் டிஸ்கஷன் செய்து விட்டு வருவதாக சொன்னார்.அதற்கு பிறகு இருவரும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
The post கவினை இயக்குகிறாரா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? கவின் உடைத்த சீக்ரெட்… appeared first on Touring Talkies.
]]>The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என கூறப்படுகிறது.
அதாவது அந்த பாடல் இந்த படத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் சங்கர்.மிகப்பெரிய செலவில் அப்படாலை எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி உள்ள நிலையில் இது குறித்துலைக்கா-விடம் பேசிய போது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது.
இப்போது நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் பநீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண வாய்ப்பு இல்லை என கூறிய இயக்குனர் சங்கர்-க்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம்.இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறாராம் ஆனால் இப்படம் கடைசி வரை வருமா வராதா என ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.
The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.
]]>The post தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>நமக்கு பிடித்த மாதிரியான படங்களை செய்ய வேண்டும் என்றால் நாமே தயாரித்தால் தான் உண்டு என அவர் பேட்டி ஒன்றில் சொன்ன நிலையில், அவரை ரெடின் கிங்ஸ்லி தயாரிப்பாளராக கோர்த்து விட்டது போல இந்த புரமோ வெளியாகி இருக்கிறது.
நெல்சன் வழக்கம் போல தனது ஸ்டைல் புரமோவை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, சிவபாலன் மற்றும் கவின் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் இன்ட்ரோ வீடியோ செம காமெடியாக இருக்கிறது.
கவினின் புதிய கெட்டப் இந்த படத்தில் பார்க்கப் போறீங்க என நெல்சனுக்கு பில்டப் கொடுக்க கவினை பொம்பள கெட்டப்பிலேயே பார்த்துட்டேன். இன்னும் நான் அம்மணமாதான் பார்க்கல என நெல்சன் சொல்லி விட்டு ரெடின் கிங்ஸ்லி சர்ப்ரைஸ் என கண்களை எல்லாம் பொத்திக் கொண்டு அவரை அழைத்து வர பிச்சைக்கார கெட்டப்பில் கவின் இருப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கு என்றும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
The post தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்… appeared first on Touring Talkies.
]]>கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிலையில் இளையராஜா தான் மொரிஷியஸ் தீவில் உள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் மொரிஷியஸ் வந்துள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து மொரிசியசில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இளையராஜா.
ஒரு புகைப்படத்தை இளையராஜா பதிவிட்டுள்ளார் அதில் யுவன் சங்கர் ராஜாவிற்கு இளையராஜா சாப்பாடு ஊட்டி விடுவது போல காணப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவும் மிகவும் ஆர்வமுடன் தன்னுடைய தந்தையின் கைகளால் சாப்பாட்டை வாங்கி சுவைப்பதாக இந்த புகைப்படத்தில் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
The post தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்… appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்… appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் “பிளாக் ஷீப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.
அதே போல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக் ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் நடிக்கவுள்ளாரகக்ள்.இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் என சொல்லி தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல். எனவே இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்… appeared first on Touring Talkies.
]]>The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>ஆனால் இவருக்கு மேலாக கண்டிப்பான இயக்குநர் ஹரி என்கிறார்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால், அதில் வரும் நடிகர்கள் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பெரிய நடச்சத்திரங்கள் சின்ன நட்சத்திரங்கள் என அவரிடம் பாரபட்சம் எல்லாம் கிடையாது. அவர் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அதேபோன்று அந்த ப்ரொடக்ஷனில் எந்த மாதிரி சாப்பாடுகள் வழங்கப்படுகிறது அதைத்தான் சாப்பிட வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் சாப்பாடு தான் என பல நிபந்தனைகள் இவரிடம் இருக்கிறதாம்.
மேலும், நான் உங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறேன் எந்தக் கணக்கும் ஹரி கிட்ட செல்லுபடியாகாது. ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம், தனக்கு ஜிம் உள்ள ஹோட்டல் அறை வேண்டும் என்று கூறிகியிறார்.கிராமத்தில் சூட்டிங் எடுக்கிறோம் அது போன்ற வசதியான ஹோட்டல் எல்லாம் கிடைக்காது என்று சொல்லி அவர் புக் பண்ணிய ஹோட்டலில் தான் தங்க வைத்திருக்கிறார். மேலும், அவரது படத்தில் ஹீரோயினாக ஹரிக்கு நெருக்கமான நடிகரின் காதலி நடித்துள்ளார்.
அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ, அந்த நடிகரின் காதலியிடம் கொஞ்சம் நெருக்கமாக பழகி இருக்கிறாராம். இதை கவனித்த இயக்குனர் ஹரி படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் ஒன்றாக நடிக்கும் சீன் இல்லாதபடி படத்தையே எடுத்து முடித்தாராம். அந்த அளவுக்கு பயங்கரமான கண்டிப்பான இயக்குனர் பெரிய ஹீரோ என்பதெல்லாம் இவர் கிட்ட செல்லுபடி ஆகாதாம்.
The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>என்னதான் அரண்மனை 3 படம் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும் சற்றும் அசராத சுந்தர் சி. இந்த கோடை விடுமுறையை டார்கெட் செய்து அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். குஷ்பு தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகியுள்ளது அரண்மனை 4.
இந்த படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் சி ஒரு வழக்கறிஞர்.செய்துஅப்பா வழி அத்தையாக கோவை சரளா, சகோதரி கதாப்பாத்திரங்களில் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.தான் காதலித்தவரோடு வேறு ஊருக்கு ஓடிப்போய் குடும்பம் நடத்துகிறார் தமன்னா, 10 வருடங்கள் கழித்து திடீரென அவரது வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டு அத்தையோடு தங்கையின் ஊருக்கு போய் அவரது அரண்மனை மாதிரியான ஒரு வீட்டுக்குள் தங்குகிறார் சுந்தர் சி.
அந்த இடத்தில் அப்போது படிப்படியாக தங்கை வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய க்ளூ கிடைக்க ஆரம்பித்த நிலையில் அதை நூல்பிடித்துச் செல்லும்போது பல அதிர்ச்சி பின்னணிகளை கண்டுபிடிக்கிறார் சரவணன். பிரச்சினைகளை தீர்த்து தங்கை குடும்பத்தை சரவணன் எப்படி காத்தார் என்பதை, கொஞ்சம் காமெடி, அப்பப்போ த்ரில்லர் ஹாரர் என காட்டியுள்ளது இப்படம்.
இப்படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. இந்த முதல் பாதியில் பல மர்மங்களும் அதற்கான க்ளூவும் காட்டப்படுள்ளன். இதனால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தோடு கதையோடு நாம் பயணிக்க இயல்கிறது. இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்கியதுமே, சீக்கிரம் சீட்டுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தோன்றுவது இதனால்தான். சமீப காலத்தில் கோவை சரளா காமெடி என நினைத்து ஓவராக சத்தம் போட்டு பேசுவாரே, அப்படியெல்லாம் இதில் கடுப்பக்காமல் செய்யாமல், தனது ட்ரேட் மார்க் எதுகை மோனை பேச்சால் காமெடி செய்திருப்பது முதல் பாதிக்கு மற்றொரு பலம் என்றே சொல்லலாம்.
இப்படத்தின் முதல் பாதி பலமாக இருக்கும் போது இரண்டாம் பாதி சற்று பலவீனமாக தான் உள்ளது.தானே பலமுறை, அடித்து துவைத்த அதே டெம்ப்ளேட்டை சுந்தர் சி பயன்படுத்தியுள்ளார். கிளைமேக்ஸ் நெருங்கும்போது சுந்தர் சி காரில் பரபரப்பாக போவது, இன்னொரு பக்கம் அம்மன் பாடல் இசைக்கப்படுவது என முந்தைய படத்தின் ரீலை மாற்றி இதில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகத்தோடு, கண்ணை கசக்கி பார்க்க வைக்கிறது காட்சிகள். அம்மன் வந்து தீமையை அழிப்பது கிளைமேக்சாக இருப்பது சரியாக தான் உள்ளது.கண்டிபாக நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இது அமைந்திருக்கிறது.நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
The post அரண்மனை 4 எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>The post ஜோதிகாவின் க்யூட்டான கிளிக்ஸ்! ஃபிட்னஸாக இருக்கும் ஜோதிகாவின் ரகசியம் இதோ… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் உடல் பருமன் அதிகமாக இருந்த நிலையில் 45 வயதில் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது இளமையை மீண்டும் கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருக்கிறார் ஜோதிகா.சில வாரங்களுக்கு முன்பு ஜோதிகா மற்றும் சூர்யா ஒன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருந்தது.அவர் தனது ஃபிட்னஸ் மற்றும் இளமையாக இருக்க என்னென்ன விஷயங்களை பின்பற்றி இருக்கிறார் என்பதை சமீபத்தில் கூறியிருக்கிறார்.
காலை எழுந்த உடன் குறைந்தபட்சமா 30 நிமிடங்கள் வரை ஜோதிகா ரன்னிங் செய்வாராம். அதேபோல் அவர் அருந்தும் பானங்களும் ஜோதிகாவின் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.அதோபோல் குறிப்பாக கிரீன் டீ மற்றும் இளநீர் போன்றவற்றை தான் அருந்துவாராம். மேலும் தனது உடல் எடையை உடற்பயிற்சி வாயிலாக குறைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.சில பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்க்கையில் மாற்றினாலே உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் ஜோதிகாவின் இப்போது உள்ள க்யூட்டான புகைப்படங்கள் இணையதில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவா இது என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
The post ஜோதிகாவின் க்யூட்டான கிளிக்ஸ்! ஃபிட்னஸாக இருக்கும் ஜோதிகாவின் ரகசியம் இதோ… appeared first on Touring Talkies.
]]>