The post ‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்? appeared first on Touring Talkies.
]]>நடிகர் விக்ரமின் திரை பயணத்தில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு.அவற்றுள் சேது, தில், தூள், ஜெமினி, காசி போன்ற பல படங்களில் அவர் நடிப்பின் நாயகன் என்பதை காட்டியிருப்பார்.அவரது நடிப்பு ஒவ்வொரு படத்தில் தனித்துவமாக இருக்கும் பல பாராட்டுகளையும் பெறும் என்பதில் ஆச்சரியமில்லை.
இப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் இயக்குனர் சரண் இயக்கத்தில் அவர் நடித்த ஜெமினி திரைப்படம். இப்படம் இன்றுவரை மக்கள் விரும்பும் படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பிடித்து இருக்கும். இருந்தாலும் சமீப காலமாக விக்ரம் நடித்த படங்கள் எவையும் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கைக்கொடுவில்லை. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாக உள்ளது.
அதேசமயம் நேற்றைய தினம் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ மிக்க நன்றி.. என்று குறிப்பிட்டு for all the love pouring in today. Interesting updates..இன்னும் சில தினங்களில், Any guesses?? & don’t forget to ஓ போடு!! ‘ என்று பதிவிட்டிருந்தார்.சில தினங்களில் முக்கியமான அப்டேட்கள் வெளிவரும் என்று சொல்லியிருக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு செய்த தினம் நேற்று, இவர் போட்ட ‘ஓ போடு’ பதிவினால், ரசிகர்கள் ஜெமினி படத்தின் பாகம் 2 அப்டேடாக இருக்குமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்படி இல்லையெனில் கர்ணன், கருடா போன்ற படங்களின் முக்கிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.எப்படி இருந்தாலும் இன்னும் சில தினங்களில் அவர் சொன்ன அப்டேட்கள் என்ன என்பது தெரிந்துவிடும்.
The post ‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்? appeared first on Touring Talkies.
]]>The post அன்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர் இன்று தங்கலான் ஒதிப்பதிவாளர்! appeared first on Touring Talkies.
]]>கேமரா மேனா வரணும் அப்படின்ற ஆர்வம் எப்படி வந்துச்சு அப்படின்ற கேள்விக்கு, எங்க அண்ணா ஆர்டிஸ்ட் எங்களுடைய சொந்த ஊர் கும்பகோணம். நான் ஸ்கூல் படிக்கிறப்ப லைஃப்ல என்னவாக போறேன்ற ஐடியாவே எனக்கு இல்ல ஆனாலும் என் அண்ணனோட ஓவியங்கள் எல்லாம் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்துச்சு என்கிறார்.
காலா, கபாலி பட ஒளிப்பதிவாளர் முரளி அண்ணாவும், என்னுடைய அண்ணனும் கும்பகோணம் கவின்கல்லூரி கல்லூரி பேட்ச் மேட்ஸ். நானும் சில மாதங்கள் ஃபைன் ஆர்ட்ஸ் கோச்சிங் போனேன் அதுல லைட்டிங் கலர்ஸ் கலை வடிவத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சினிமா உள்ள வர ஆர்வம் முரளி அண்ணா கொடுத்த மோட்டிவேஷன்.முரளி அண்ணாவோட காலா, கபாலி, சார்ப்பட்டா பரம்பரைனு பல படங்களில் வேலை செஞ்சேன்.
குண்டு அப்டின்ற படம் தான் முதல் படம் இத நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிச்சது. அந்த படத்துல என்னோட வேலை நல்லா இருந்ததுனால பா.ரஞ்சித் அண்ணா அவரோட அடுத்த படத்துல ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரி நட்சத்திரம் நகர்கிறது அப்படி என்ற படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தை என்னதான் வராட்டி இருந்தாலும் ஒரு பக்கம் பெருசா எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்ல.
நம்ம வேலை ஒழுங்கா போய் மக்களை சேரலையோ அப்படின்ற மாதிரி நான் தயக்கத்தோடு இருந்தேன் அப்படி இருக்கும்போது தான் பா.ரஞ்சித் அண்ணா இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார் அதுதான் தங்கலான். இந்த படத்துல மறுபடியும் பா ரஞ்சித் அண்ணா கூட வேலை செய்றது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
ஒரு ஒளிப்பதிவாளருக்கும் இயக்குனருக்கும் இடையில சரியான புரிதல் இருந்தால் தான் ஒரு படத்தை நல்லா எடுத்து வெளி கொண்டு வர முடியும். அப்படி புரிதல் எங்க ரெண்டு பேரு கிட்டயும் இருந்தது. பா.ரஞ்சித் அண்ணா எனக்கு என்ன தேவை அப்படிங்கறதில அவர் தெளிவாக இருந்தாரு. அது மட்டும் இல்லாம ஒட்டு மொத்த டீமும் சரியா கையாண்டார்.
கும்பகோணத்தில சேது படத்தோட படப்பிடிப்பு நடக்கும் போது அங்க வேடிக்கை பாக்குற கூட்டத்துல இருந்த நான் அவருடைய படத்துக்கு இப்போ ஒளிப்பதிவு பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல நான் கூட பாக்கல. இத விக்ரம் சார் கிட்ட சொன்னப்ப அவர் ரொம்பவே நெகிழ்ந்து போனார்.
அதை தொடர்ந்து, படப்பிடிப்பு சமயத்துல பா. ரஞ்சித் அண்ணா கிட்ட சொல்லி விக்ரம் சார் கிட்ட வேலை வாங்கலாம் அப்படினு இருந்தேன். ஆனா பா ரஞ்சித் அண்ணா நீயே சொல்லு அது தான் கரெக்ட்டா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டாரு. விக்ரம் சார் நல்ல அனுபவசாலி டெக்னீசியனுக்கு உரிய மரியாதைய கொடுப்பாரு என பகிர்ந்து கொண்டார்.
The post அன்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர் இன்று தங்கலான் ஒதிப்பதிவாளர்! appeared first on Touring Talkies.
]]>The post ’தங்கலான்’ டப்பிங் பணி:எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட விக்ரம் appeared first on Touring Talkies.
]]>இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் அடுத்த மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளில் இருக்கி றார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இறுதிக்கட்ட டப்பிங் பணிகளில் இருப்பதாகவும், படத்தின் டீசரில் தனக்கு வசனம் இல்லைப்பா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The post ’தங்கலான்’ டப்பிங் பணி:எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட விக்ரம் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், மேக்கிங் வீடியோ புதிதாக வெளியாகி உள்ளது.
ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரும் விக்ரமின் கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.
The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>The post வேகமெடுக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘தங்கலான்’ திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post வேகமெடுக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரல்! appeared first on Touring Talkies.
]]>இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
The post விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரல்! appeared first on Touring Talkies.
]]>