The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>சிற்பி இசை அமைத்தார். ‘கொட்ட பாக்கும்.., ‘மீனா பொண்ணு…’ உள்ளிட்ட ஆறு பாடல்கள் இடம் பெற்று இருந்தன.
படமும், பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இது குறித்து இசையமைப்பாளர் சிற்பி பேசும்போது ஆச்சரியமான தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது இந்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆறு பாடல்களுக்கும் ஒரே நாளில் மெட்டு அமைத்தார் என்பதுதான் அந்த விசயம்.
நாட்டாமை படம் பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர் என்பது கூடுதல் தகவல்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=XvXGa-GzTOI
The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>The post சுதந்திரத்தீயை வளர்த்த 2k கிட்ஸ் பாடல்கள்! appeared first on Touring Talkies.
]]>இந்த தலைமுறையில் அப்படி புகழ் பெற்ற பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
கப்பலேறி போயாச்சு – இந்தியன்:
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்தனர். அந்த படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட பிளாஷ்பேக் போர்ஷனில் நாயகன் சேனாபதி வெள்ளையர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் காட்சி காட்டப்படும். பிறகு அவர், சுதந்திரத்துக்குப் பின் தன் மனைவியை காணும் காட்சியில் இடம்பெற்ற “கப்பலேறிப் போயாச்சு.. சுத்தமான நாடாச்சு கண்ணம்மா” பாடல் இடம் பெறும்.
தாயின் மணிக்கொடி – ஜெய்ஹிந்த்:
1994ம் ஆண்டு வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெற்ற “தாயின் மணிக்கொடி.. தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்” பாடல் பல பள்ளிகளில் சுதந்திரத்தினத்தன்று ஒலிக்கும்.
அச்சம் அச்சமில்லை – இந்திரா: சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் அனுஹாசன், அரவிந்த்சாமி நடித்த இந்திரா படத்தில் இடம்பெற்ற “இனி அச்சம் அச்சமில்லை.. அடிமை எண்ணம் இல்லை.. காலம் இங்கே மாறிப்போச்சு.. கண்ணீர் மிச்சமில்லையே” பாடல் வரிகளும் இந்திய சுதந்திரத்தீயை மக்கள் மனதிலும் இளைஞர்கள் மத்தியிலும் இன்னமும் விதைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
கோலே – ஆர்ஆர்ஆர்:
ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக மீ வெள்ளையர்களை விரட்டி விரட்டி அடித்த படமாக ஆர்ஆர்ஆர் உருவாகி இருந்தது. அதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடித்திருந்தனர். படத்தின் கோலே பாடலில் “அச்சமில்லை சொல்லிச்சே எட்டயபுரத்து கோலே” என்ற பாடல் பிரபலமானது.
நாட்டுக்கூத்து: ஆர்ஆர்ஆர்
படத்தில் எங்களுடன் நடனமாடிக் கூட வெள்ளையர்களால் ஜெயிக்க முடியாது என மரகதமணி இசையில் ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் போட்ட நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதையே வென்றது.
The post சுதந்திரத்தீயை வளர்த்த 2k கிட்ஸ் பாடல்கள்! appeared first on Touring Talkies.
]]>The post மனோரமா வாழ்க்கையில் நடந்த பயங்கர சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>அழைப்பு வரும்.
அது போல, பள்ளத்தூருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து இறங்கியது. அதை நடத்தி வந்த தம்பதிகள் மனோரமாவின் பெருமைகளை அறிந்து தங்களுடைய சர்க்கஸ் கம்பெனியில் இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.
அதற்கு மனோரமாவின் தாயும் ஒப்புதல் வழங்கிவிட்டார்.
ஒரு நாள் மனோரமா அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று இருக்கிறார்.
அந்த சர்க்கஸ் நடக்கும் போது, ஒருவர் வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் சில மீன்களையும் விழுங்கி திரும்ப எடுக்கும் சாகசங்களை செய்யக்கூடியவர். அதேபோல தான் அன்றும் அந்த சர்க்கஸ்காரர் செய்தார். ஆனால் விழுங்கிய மீன்களை எடுக்க முற்படும்போது வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
உடனே அந்த சர்க்கஸ்காரர் யாரோ மந்திரவாதி என்னை மந்திர கட்டு போட்டு வைத்திருக்கிறார். தைரியம் இருந்தால் வெளியே வா என கூற, கூட்டத்தில் இருந்த மந்திரவாதி வெளியே வந்து முடிந்தால் இந்த கட்டை அவிழ்த்து உன்னை நீ காப்பாற்றிக் கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். ஆனால் சர்க்கஸ்காரர் மீன்களை எடுக்க முடியாமல் தவித்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனோரமாவுக்கு பயமாக போய்விட்டது. சர்கஸ் கம்பெனியில் சேரமாட்டேன் என தனது தாயாரிடம் பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடக்காவிட்டால் தமிழ் சினிமா அற்புதமான நடிகை மனோரமாவை இழந்திருக்கும். இந்த சம்பவத்தை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
The post மனோரமா வாழ்க்கையில் நடந்த பயங்கர சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>படத்துக்கு இசை அமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல் எழுதியிருக்கும் வைரமுத்து, இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு மூவரும் இணைந்து பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
4 மொழிகளில் 5 பாடலாசிரியர்கள் எழுத 16 பாடல்களை 21 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடல்களின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>The post வாலி பாடலை குறை கூறிய எம்.ஜி.ஆர்…! appeared first on Touring Talkies.
]]>அந்த கால தமிழ் சினிமாவில் 60 களில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் இந்த மூன்று நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
இயக்குனர்கள், டெக்னீசியன்கள் என்று ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனியாக குரூப்பாக இருந்த காலம்.ஆனால் பாடல் ஆசிரியர்கள் மட்டும் எல்லா நடிகருக்கும் பொதுவாக இருந்துள்ளனர் அதில் முக்கியமானவர் வாலி.
எம்.ஜி.ஆர். படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது வாலியை அழைத்த எம்.ஜி.ஆர். உங்கள் பாடலில் பொருள் இல்லை என கூறியிருக்கிறார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தமிழ் பண்டிதரை அழைத்து வாலி பாடலின் குறையை கூற சொல்லியிருக்கிறார். அவரும் எந்த குறையும் இல்லை. எம்.ஜி.ஆருக்காக சொன்னேன் என்றாராம்.
கோபப்பட்ட வாலி வீட்டுக்கு வந்து விட்டார். படத்தின் தயாரிப்பாளரான ஜி.என் வேலுமணி போன் செய்துள்ளார். என் பாட்டில் குறை கூறி விட்டார் சின்னவர் என்று போனை வைத்து விட்டார் வாலி.
ஒரு வாரம் கழித்து நீங்கள் பாட்டை மாற்ற வேண்டாம் அப்படியே கொடுங்கள். எம்.ஜி.ஆரை அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்று போன் செய்து கூறியிருக்கின்றனர். அதன் பிறகு ’நான் ஆணையிட்டால் பாடல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post வாலி பாடலை குறை கூறிய எம்.ஜி.ஆர்…! appeared first on Touring Talkies.
]]>The post பாடகி சித்ரா வை கலாய்த்த பாலசுப்பிரமணியம்… appeared first on Touring Talkies.
]]>திரைப்பட பின்னணி பாடகி மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் சின்ன குயில் சித்ரா. மலையாளம், தமிழ்,தெலுங்கு, இந்தி, ஒரியா, அசாமிய, வங்காளம்,போன்ற பல இந்திய மொழி படங்களில் பாடி இந்திய ரசிகர்களின் மனதில் பதிந்தவர் சித்ரா.
இன்னும் பலரது இதயத்தில் அவரது பாடல் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.இப்போது தொலைகாட்சிகளில் இசைப்போட்டி அதில் நீதிபதியாக கலந்து கொள்வார்.
சில வருடங்களுக்கு முன் மேடையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது.அப்போது பாடகர் பாலசுப்பிரமணியமும் கலந்து கொண்டார். சித்ரா கலந்து கொள்ளும் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை கண்ணா.. இந்த இடத்தில் கொஞ்சம் ஸ்ருதி விலகியது…கொஞ்சும் குரலில் நடித்தும் பேசியும் கலாய்த்தார் பாடகர் பாலசுப்பிரமணியம்.
அங்கிருந்த அனைவரும் சிரிக்க, அவர் பேசுவது,கலாய்ப்பதை ரசித்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் சின்ன குயில் சித்ரா.
The post பாடகி சித்ரா வை கலாய்த்த பாலசுப்பிரமணியம்… appeared first on Touring Talkies.
]]>