The post மதில் மேல் நிற்கும் பூனையாக மாட்டி முழிக்கும் முருகதாஸ்… என்ன செய்ய போகிறார்? appeared first on Touring Talkies.
]]>இதற்கிடையில், சல்மான் கான் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட் ஆக்கியுள்ள முருகதாஸிற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.”இன்னும் ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்து வாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவேன், என சல்மான் கான் கூறியிருக்கிறார்.தமிழில் முருகதாஸ் எடுத்த கடைசி படம் தர்பார். இந்த படம் அவருக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் பெரிய பின்னடைவாக அமைந்தது.
ரஜினியின் கேரியரில் மிகவும் ஒரு தோல்விப்படமாக இந்த படமும் அமைந்தது.இப்போது, முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் படத்தை மட்டுமே நம்பி இருக்கிறார் எனவும் மீண்டும் எப்படியாவது கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி உயர முயற்சித்து கொண்டு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post மதில் மேல் நிற்கும் பூனையாக மாட்டி முழிக்கும் முருகதாஸ்… என்ன செய்ய போகிறார்? appeared first on Touring Talkies.
]]>The post தி கோட் அப்டேட்! அர்ச்சனா கல்பாத்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்… appeared first on Touring Talkies.
]]>அங்கு இரண்டு தினங்களுக்கு மேலாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாகவும், டீ-ஏஜிங் பணிகள் அங்கே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்து ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கி வரும் படமான “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அதேபோல் கேமியோ கதாபாத்திரங்களில் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். விஜயகாந்த் இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய பகுதியில் தோன்றுவார் எனவும் அவரது கேரக்டர் உண்மையான விஜயகாந்தின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் முதற்கட்டமாகவே படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி, சுமார் 50 சதவீத பணிகளை முடித்துவிட்டார். அவரது பங்கு முழுமையாக முடிந்ததும் மீதமுள்ள டப்பிங் பணிகளை நிறைவு செய்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
The post தி கோட் அப்டேட்! அர்ச்சனா கல்பாத்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்… appeared first on Touring Talkies.
]]>The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.
]]>தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டனின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அவரின் காட்சிகள் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் அவை கிளைமாக்ஸுக்கு முன்பான முக்கிய தருணங்களில் இடம்பெறும்.அந்தக் காட்சியும் கேரக்டரும் படத்திற்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியானது.
சுருக்கமாகச் சொல்வதானால், கேப்டன் இல்லாமல் கோட் கதையே இல்லை என்பதாக இருக்கும்.இந்தக் காட்சிகளை வெங்கட் பிரபு தற்போது பிரேமலதாவிடம் காண்பித்துள்ளார். அவர் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த அளவுக்கு கேப்டன் உண்மையாக நடித்தது போல் அந்த காட்சி இருந்தது என அவர் கூறியுள்ளார்.படம் வெளியான பிறகு அது மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.இதற்காகவே ரசிகர்கள் கோட் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.
]]>The post சாட்டிலைட் ஓடிடி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ள நடிகர் | CINEMA THIS WEEK appeared first on Touring Talkies.
]]>அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…
The post சாட்டிலைட் ஓடிடி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ள நடிகர் | CINEMA THIS WEEK appeared first on Touring Talkies.
]]>The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்க்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா புறப்பட சென்னை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் மட்டுமின்றி பிரபுதேவா, பிரசாந்த் போன்ற முக்கிய ஹீரோக்களை வெங்கட் பிரபு எவ்வாறான கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி பயன்படுத்திருப்பர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மறுபுறம், நடிகர் மோகன் 90 களில் மிகப்பெரிய வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர், அவர் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சிவகார்த்திகேயனின் காட்சிகள் சென்னையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் 50% முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>The post கோட் படத்துலயும் இவரே…ஸ்டார் படத்துலயும் இவரே… சர்ப்ரைஸ் வைத்திருக்கும் கவினின் ஸ்டார் படம்? appeared first on Touring Talkies.
]]>தற்போது கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த வார்த்தையை பலரும் ட்ரெண்ட் ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் எடிட் செய்து பதிவிட்ட நிலையில் கடைசியில் சென்சார் போர்டு அதனை மியூட் செய்து ஸ்டார் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதேசமயம் பிரபலமான விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டி யூடியூப் வீடியோவில் லுங்கிக் கட்டிக் கொண்டு பங்கேற்ற கவின் படுஜாலியாக அட்டகாசம் செய்து ஆட்டம் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.மேலும், ஸ்டார் படத்தின் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்டார் படத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகராகவே கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்றும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகிறார் என அடுக்கடுக்காக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
The post கோட் படத்துலயும் இவரே…ஸ்டார் படத்துலயும் இவரே… சர்ப்ரைஸ் வைத்திருக்கும் கவினின் ஸ்டார் படம்? appeared first on Touring Talkies.
]]>The post தி கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? தீயாய் பரவும் தகவல் ! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் 15 நிமிடங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் எந்தளவிற்கு இந்த தகவல் உண்மையானது என்று தெரியவில்லை.ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதோபோல் சிவகார்த்திகேயன் அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதியதொரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியன.
இந்நிலையில் தி கோட் படத்தை பற்றி இப்படியொரு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் சென்னை வீரர்கள் சிலர் இப்படத்தில் சிறு கதாபாத்திரத்திங்களில் தோன்றுவதாக தகவல்கள் உலாவுகின்றன.இப்படி சர்ப்ரைஸ்களுக்கு மேல் சர்ப்ரைஸ்கள் வைத்திருக்கும் வெங்கட் பிரபுவின் கோட் படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
The post தி கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? தீயாய் பரவும் தகவல் ! appeared first on Touring Talkies.
]]>The post எப்படி இருக்கு குரங்கு பெடல்? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், ராகவன் என பலர் நடித்திருக்கும் இப்படத்தினை குறித்த விமர்சனம் என்னவென்றால், கிராமத்தில் வாழும் காளி வெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.அதனால் எல்லா இடத்துக்கும் அவர் நடந்தே போகிறார். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் அவரை கேலி கிண்டல் செய்கின்றார்கள். இதைக் கண்டு வருத்தப்பட்டு அப்பாவை போல் இல்லாமல் சைக்கிள் ஓட்ட வேண்டும் என கர்வத்தோடு உறுதியெடுக்கிறார் அவரது மகன்.
அப்படியிருக்க வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு குரங்கு பெடல் போட்டு முயற்சி செய்கிறான். இதை பலரும் கிண்டல் செய்தாலும் தன் முயற்சியில் அந்த சிறுவன் கவனமாக இருக்கிறான்.
இதற்காக வீட்டில் திருடுவது அப்பாவிடம் அடி வாங்குவது என சைக்கிள் ஓட்ட பழகுகிறான். ஒருநாள் வாடகை சைக்கிள் எடுத்து சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. அவனை தேடிச்செல்லும் காளி வெங்கட் மகனை கண்டுபிடித்தாரா? வாடகை சைக்கிள் என்ன ஆனது? என்பதுதான் இந்த குரங்கு பெடலின் கதை.
கிராமப்புற வாழ்க்கை சூழலில் உள்ள பிள்ளைகளை சொல்லவா வேண்டும், கிணற்றில் நீச்சல் அடிப்பது, கோழி குண்டு விளையாடுவது, குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவது என அனைத்தையும் இப்படம் கண் முன் காட்டி இருக்கிறது.அதேபோல் கிராமத்து வாழ்க்கையையும் ஒளிப்பதிவாளர் அழகாக காட்டியுள்ளார்.
இதற்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் பலன் தரும் வகையில் சிறுவர்களின் நடிப்பும் உள்ளது. ஆனால் அங்கங்கு நீளமான காட்சிகள் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. அதையெல்லாம் சிறுவர்களின் துருதுறு நடிப்பும் கதையோட்டமும் மறக்கடிக்க செய்கிறது.
இப்படி மொத்தமாக சிவகார்த்திகேயனின் இந்த படைப்பு மிகவும் நல்ல ஃபேமிலி எண்டர்டெயின்மெண்டாக இந்த கோடையை கொண்டாடமாக்க வந்து இருக்கிறது.இந்த குரங்கு பெடல் நிச்சயம் ஒருமுறை பார்க்க வேண்டிய படம் தான்.
The post எப்படி இருக்கு குரங்கு பெடல்? – திரைவிமர்சனம்! appeared first on Touring Talkies.
]]>The post வெங்கட் பிரபுவிடம் இருந்து நழுவிக் கொண்ட சிவகார்த்திகேயன்? நட்புக்கே முன்னுரிமை… appeared first on Touring Talkies.
]]>இதைப்பற்றி மீண்டும் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் பேசிய போது, அந்தக் கதை வேண்டாம், வேறு ஏதாவது கதையைத் தயார் செய்து வாருங்கள் என்று சிவகார்த்திகேயன் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதைக் கேட்டதும் வெங்கட் பிரபுவுக்கு எதுவுமே புரியவில்லை.
இப்படி திட்டமிட்டபடி நடக்காமல் போனதால் வெங்கட் பிரபு கவலைப்பட்டு, எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் அவரது நண்பரான சிபி சக்கரவர்த்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.
காரணம் சிபி சக்கரவர்த்திக்கு தற்போது வேறு எந்த பட வாய்ப்பும் இல்லை. எனவே அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கலாம் என்பதால் தான் வெங்கட் பிரபுவை வேண்டாம் என்று சிவா கார்த்திகேயன் கூறியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post வெங்கட் பிரபுவிடம் இருந்து நழுவிக் கொண்ட சிவகார்த்திகேயன்? நட்புக்கே முன்னுரிமை… appeared first on Touring Talkies.
]]>The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.
]]>நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க, அமைச்சர் உதயநிதி நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார். அடுத்து, சங்கத்தின் நலச்செயல் அமைப்பின் உறுப்பினரான கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதேபோல, விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடையும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக நடிகர் சங்கம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், 2000-2006 காலப்பகுதியில் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய நெப்போலியன் சங்கக் கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்புநிதி வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.
]]>