The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படவுள்ளன.
விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது, அவர் நடித்த 2012ஆம் ஆண்டு வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய 2 படங்களும் விரைவில் ‘மறுவெளியீடு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.
]]>The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாகவே கமல் டெல்லி ஷூட்டிங்கில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தாமதமாக அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், கமல் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கமல் ஷூட்டிங்கில் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லி ஷூட்டிங்கிலும் கமல் தாமதமாக வந்திதிருக்கிறாராம்.
அவர் ஷூட்டிங்கில் தாமதமாக கலந்துகொண்டதற்கு வேறொரு காரணம் இருப்பதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. முன்பு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதி பாடியது போலவே, இந்தப் படத்திலும் தற்போது அவரே ஒரு பாடலை எழுதி பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாடல் பணிகளுக்காகவே கடந்த மூன்று நாட்களாக அவர் பாடல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
அதோபோல் இரண்டு மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாடலை பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை என தகவல்களை கிளப்பி விட்டனர்.
The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.
]]>The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>கடந்த 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று KH 234 படத்தின் துவக்கம் குறித்த அப்டேட் வெளியானது.அதன்பிறகு கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டைட்டில் தக் லைஃப் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்தனர். இவர்களுள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி கால் ஷீட் பிரச்சினை காரணமாக விலகியதாக கூறப்பட்டது.மீண்டும் அவர்கள் மணிரத்தினத்தோடு இணைந்துள்ளனர்.இவர்கள் மட்டுமின்றி சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
நடிகர் கமல் தேர்தல் பிரச்சார பணிகளில் பிஸியாக இருந்ததால், மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் மணிரத்னம். ராஜஸ்தானின் ஜெய்ஸ்சல்மார் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில், சிம்புவும் த்ரிஷாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் ஃப்ரீயாக உள்ளதால் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார்.இதற்கிடையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடந்துள்ளது.இதைத்தொடர்ந்து டெல்லியில் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது.சிம்பு 2 வேடங்களிதும் கமல் 3 வேடங்களிலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிரத்தினம் கமல் மற்றும் சிம்பு ஆகியோரின் படப்பிடிப்பு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>The post சூரரைப்போற்று சூரியாவுக்கு அப்போ சிம்புவுக்கு? சிம்புவின் 50 படத்தை இயக்க போவது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சில காலங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தாமல் கால் ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு போகாமல் பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.அதன் பிறகு உடல் எடையை குறைத்து ஃபிட்டாக எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை இருந்தாலும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து அப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.மாநாடு படத்தின் ஹிட்டிற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க அப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் பத்து தல படத்தில் நடித்திருந்தார் அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.அதேசமயம் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேச்சுப் பொருள் ஆகியது.
இந்த சூழலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.இதன் பின்னர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர்.அஸ்வத் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் .அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிம்புவின் படத்தை தொடங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சிம்புவின் 50ஆவது படத்தின் இயக்குனர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தை இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களை கொடுத்து சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சுதா கொங்கரா சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருதை பெற்ற சுதா கொங்கரா சிம்புவின் 50வது படத்தை இயக்க போவதாக தகவல் பரவும் நிலையில் சிம்புவின் 50வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
The post சூரரைப்போற்று சூரியாவுக்கு அப்போ சிம்புவுக்கு? சிம்புவின் 50 படத்தை இயக்க போவது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.
]]>இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
இந்நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் வெகுவாக நடந்த நிலையில் எடுக்கப்பட்ட படத்தின் நீளத்தால் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டாக உருவாகியுள்ளது.
இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் இணையவுள்ளதாகவும் அதேசமயம் சிம்புவும் இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவுகின்றது.தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.
]]>The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினிகாந்த் படத்தின் ரெஃபரன்ஸை வைத்து இருப்பார் விஜய் தற்போது அதே போல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுவன் இசையில் பாட்டுப் பாடி அதிரடி ஆட்டம் போட்ட இப்பாடலில் நடிகர்கள் அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து சிறப்பித்துள்ளார்.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான லிரிக்ஸ்கள் இப்பாடலில் இடம்பெற்றாலும் அதனை தாண்டி நன்றாக உற்று கவனித்தால் இப்பாடலில் தரமான சம்பவத்தை செய்துள்ளார் வெங்கட் பிரபு.அஜித் சூர்யா மட்டுமின்றி கார்த்தி மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களின் ரெஃபரன்ஸ்களை சைலன்டாக உள்ளே கொண்டுவந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ல் வீடியோவில் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் மினியேச்சர்கள் ரெஃபரன்ஸ்களாக கொண்டு வந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பிரியாணி மற்றும் மாநாடு படங்களின் ரெஃபரன்ஸை தான் வெங்கட் பிரபு இந்த பாடலில் வைத்து இருக்கிறார். இவற்றையெல்லாம் பாடலில் இடம்பெறும் முன் கண்டிப்பாக விஜய் இவற்றை பார்த்து சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இப்பாடல் வெளியாகி இருக்கிறது.இவை அனைத்து ரசிகர்களையும் அரவணைக்க விஜய் செய்த முயற்சியின் தான் என இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பாதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>ஜனவரி மாதம் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த இயக்குநர் மணிரத்னம், இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செர்பியா நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், ஏற்கனவே ஒப்பந்தமான படத்தில் நடிக்க துல்கர் சல்மான் சென்றுவிட்டார். இந்தப் படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துவிட்டார். இதனால், துல்கர் சல்மான் நடிக்க இருந்த பாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். இதை அறிந்த ஜெயம் ரவி இந்தப் படத்திலிருந்து வெளியேறி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
சிம்பு அந்தப் படத்தில் கமிட்டாவார் என்று ஜெயம் ரவி எதிர்பார்க்கவில்லை. சிம்பு வந்ததால்தான் ஜெயம்ரவி வெளியேறிவிட்டார் என்றும் அவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது.
சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கக்கூடாது என்பதில் ஜெயம்ரவி உறுதியோடு இருக்கிறார். அதற்கு காரணம் நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்ற போது சிம்புவும் ஜெயம்ரவியும் நண்பர்களாக ஒரே குழுவாகதான் இருந்தார்கள். வெளிநாட்டில் அவர்களுக்குள் நடந்த விளையாட்டுக்கள் வினையானது. செல்போன் உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் அரங்கேறின.
கலை நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஒன்றாக சென்றவர்கள் திரும்பும் போது பிரிந்தே வந்தார்கள். அப்போது முதல் சிம்புவுடன் பழகுவதை ஜெயம்ரவி நிறுத்திவிட்டார். அதனால், சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
The post சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பாதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post கமல் ஹாசனை தொடர்ந்து ரஜினியும் பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>படம் வெளியான போது நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து முதல் ஆளாக பாராட்டி குணா படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை வீட்டுக்கு அழைத்து பாராட்டி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கடந்த வாரம் நடிகர் சிம்பு படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பில் நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் தனக்கு பிடித்திருந்தது என்றும், இந்தப் படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்ணோட்டமே மாறிவிட்டது என்றும் சிம்பு பதிவு செய்து படக்குழுவை வெகுவாக பாராட்டினார்.
The post கமல் ஹாசனை தொடர்ந்து ரஜினியும் பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.
]]>
இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர்,இயக்குனர் என பன்முகத் தன்மையுடன் சினிமாவில் வலம் வருபவர் மனோஜ். மாநாடு படத்தில் நான் சிம்புவுடன் நடிக்கும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்யக் கூடியவர். எந்த ஊரில் சூட்டிங் இருந்தாலும் அந்த ஊரில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு தவறாமல் சென்றுவிடுவார் சிம்பு.
அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம். கோயில் பிரசாதங்களை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் அவர் அறைக்கு போவார் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் மனோஜ்.
The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.
]]>அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலம்பரசன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அவர், ‘கொரோனா குமார் படத்துக்காக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 16-ம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், ஓராண்டிற்குள் படம் தொடங்கவில்லை என்றால் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சிம்பு மீது தவறு இல்லாத நிலையில் ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்த தேவையில்லை’ என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு, பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து அன்றைய தினம் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.
]]>