The post சூர்யா – கார்த்திக்கு சாக்லேட் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>சினிமா வேண்டாம் என நடிகர் சிவகுமார் கூறிய அறிவுரையை சத்யராஜ் கேட்கவில்லை. ஆகவே, சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்த்துவிட்டார். அங்கு சிறிய வேடங்கள்தான்… ஆனால் நல்ல அனுபவம் கிடைத்தது.
அப்போது அவருக்கு சம்பளம் பத்து ரூபாய்தான். அதில் சிவகுமாரின் மகன்களான சிறுவர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பார் சத்யராஜ்.
இந்த நிலையில் சத்யராஜுக்கு பெண் பார்த்தார்கள். அவரோ மறுத்துவிட்டார்.
ஏன் மறுத்தார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..
The post சூர்யா – கார்த்திக்கு சாக்லேட் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி, விஜயை மறைமுகமாக விமர்சித்த சத்யராஜ்?! appeared first on Touring Talkies.
]]>ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்-8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (ஆக-19) மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன்” என்றார்.
மேலும், “மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் . மற்றபடி, கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல்” என தனது பேச்சை நிறைவு செய்தார் சத்யராஜ்.
தற்போது இவரது பேச்சு சோசியல் மீடியாவில் பலரும் பகிர்கின்றனர். அதோடு, “தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறிய ரஜினி, அது போன்று செய்திகளில் அடிபடும் விஜய் ஆகியோரைத்தான் ஓட்டு அரசியல் என மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் சத்யராஜ்”என கமெண்ட்டும் செய்து வருகின்றனர்.
The post ரஜினி, விஜயை மறைமுகமாக விமர்சித்த சத்யராஜ்?! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>நீண்ட காலத்துக்குப் பிறகு வில்லனாக நடிக்கிறார் சத்யராஜ். படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய இவர், “நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆக இருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழி சை மன்னன் என்பார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர் அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று அழைக்கவில்லை.
சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம். ஆனால் அவரை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லை.
பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவது. கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்.
விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது” என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சத்யராஜ்.
The post சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post சத்யராஜின் ‘வெப்பன்’ படத்துக்கு வடிவேலு பாராட்டு appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், இப்படத்துக்கு நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:“என் அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் இப்படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் முதன் முதலாக இப்படத்தில் ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. ‘வெப்பன்’ படத்தினை எல்லோரும் பார்த்து மகிழுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
The post சத்யராஜின் ‘வெப்பன்’ படத்துக்கு வடிவேலு பாராட்டு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான். அவருக்கு யாருடைய இன்ஸ்பிரேசன் இருந்தது என்பதை அறிய நடிகர் சத்யராஜூக்கு ஆசை ஏற்பட்டது.
இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை..
மெல்ல சத்யராஜ், இந்த விசயத்தை கேட்டார்.
அவரைப் பார்த்த சிவாஜி, “ ஏண்டா.. நான் யாரைப்பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரியணுமா..” என்று கேட்க.. சத்யராஜ் பதறிப்போய், “அய்யோ.. அப்படி இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னு..” என்று இழுத்திருக்கிறார்.
பிறகு சிவாஜி, “நான் எந்த ஹாலிவுட் நடிகனையும் காப்பி அடிக்கலை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்னா அது எம்.ஆர்.ராதாதான். உங்களுக்கெல்லாம் சினிமாவில இரட்டைக் குரல்ல பேசுற எம்.ஆர்.ராதாவைத்தான் தெரியும். நாடகத்தில அவர் ரேஞ்சே வேற. அப்படி ஒரு நடிப்பு. அவரை அணுஅணுவா ரசிச்சிருக்கேன்” என்றார் சிவாஜி.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU
The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சிகரெட் பிடித்தது தப்பில்லை!: நடிகர் சத்யராஜ் கருத்து appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நடிகர் சத்யராஜும் தனது கருத்தைத் தெரிவித்து உள்ளார். அவர், “மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் செய்தது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த நிலையில் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், ‘லியோ’ பட போஸ்டரின் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றது குறித்து, “நடிகர்கள் தாங்கள் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டியுள்ளது. நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ’மக்கள் என் பக்கம்’ என்ற படத்தில் நான் ஒரு கடத்தல்காரராக நடித்திருப்பேன். நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு” என்றார்.
The post விஜய் சிகரெட் பிடித்தது தப்பில்லை!: நடிகர் சத்யராஜ் கருத்து appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆரிடம் சத்யராஜ் பெற்ற அந்த பரிசு! appeared first on Touring Talkies.
]]>எம்ஜிஆர் பயன்படுத்திய கரலாக்கட்டை மீது சத்யராஜூக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை எம்ஜிஆர் எப்படியோ தெரிந்து கொண்டு, அந்த கரலாக்கட்டையை பரிசாக அளித்தார். அதை இன்று வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.
திரை பிரபலங்கள் பலரும் சத்யராஜின் வீட்டிற்கு சென்றால், அந்த கரலாக்கட்டையை பார்க்காமல் வர மாட்டார்கள்.
மேலும் தமிழக அரசு எம்ஜிஆர் வீடு மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்ப்பதற்காக காட்சி படுத்தி அரசுடைமையாக்கினர். ஆனால் அவர் பயன்படுத்திய கரலாக்கட்டையை மட்டும் சத்யராஜ் சத்யராஜ் வீட்டிலேயே இருக்கிறது.
இதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்து உள்ளார்.
The post எம்.ஜி.ஆரிடம் சத்யராஜ் பெற்ற அந்த பரிசு! appeared first on Touring Talkies.
]]>The post சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.
]]>சூப்பர் ஸ்டார் ரஜினி கூட, படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன், கவுண்டமணியிடம் ‘தயவு செய்து ஏதாவது சொல்லி மானத்தை வாங்கிறாதீங்க கவுண்டமணி’ என்று சொல்லிவிட்டு போவாராம்.
சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த ‘ நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை கவுண்டமணி பார்த்தாராம். பார்த்து விட்டு சத்யராஜுக்கு போன் செய்து சொன்னாராம். அதற்கு படம் எப்படி இருக்குனு சத்யராஜ் கேட்டாராம்.
அதற்கு கவுண்டமணி ‘ நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராஜ், உன் மகன விட நாய் நல்லா நடிச்சிருக்குப்பா’ என்று அவர் பாணியில் சொன்னாராம்.
இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது அவரால் அடக்கமுடியாத சிரிப்போடு கூறினார்.
The post சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.
]]>The post 36 வருடங்களுக்கு முன்பே யூனிவர்ஸ் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பாணியிலான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விக்ரம் படம் புதுவித அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த யூனிவர்ஸ் பாணி வந்துவிட்டது என ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் தெரிவித்து உள்ளார்.
சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து 1987ல் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு
இந்த படத்தில் சரத்யராஜ் மாறுவேடத்தில் சென்று வில்லன்களை கொலை செய்வார். இந்த மாறுவேடத்தில் அவர், இதற்கு முன்பு நடித்த படங்களின் கெட்டப்பில் தான் வருவார்.
இதைத்தான், “அப்போதே யுனிவர்ஸ் பாணியை செய்துவிட்டோம்” என சத்யராஜ் தெரிவித்தார்.
The post 36 வருடங்களுக்கு முன்பே யூனிவர்ஸ் கொடுத்த சத்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் 75-வது படம்: கேரக்டர் இதுதானாம்! appeared first on Touring Talkies.
]]>புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜா ராணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் நயன்தாராவுக்கு, கிளப்பில் நடனமாடும் கதாபாத்திரம் என செய்தி கசிந்துள்ளது. ஏற்கெனவே ஈ படத்தில் இதே போன்று கிளப் டான்சராக நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நயன்தாராவின் 75-வது படம்: கேரக்டர் இதுதானாம்! appeared first on Touring Talkies.
]]>