வில்லனாக அறிமுகமாக, நாயகனாக உயர்ந்து பல வருடம் பிரபல ஹீரோவாக உலா வந்தவர் சத்யராஜ். இவர் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அவரும் இவரது நடிப்பை பல முறை பாராட்டி இருக்கிறார்.
எம்ஜிஆர் பயன்படுத்திய கரலாக்கட்டை மீது சத்யராஜூக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை எம்ஜிஆர் எப்படியோ தெரிந்து கொண்டு, அந்த கரலாக்கட்டையை பரிசாக அளித்தார். அதை இன்று வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.
திரை பிரபலங்கள் பலரும் சத்யராஜின் வீட்டிற்கு சென்றால், அந்த கரலாக்கட்டையை பார்க்காமல் வர மாட்டார்கள்.
மேலும் தமிழக அரசு எம்ஜிஆர் வீடு மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்ப்பதற்காக காட்சி படுத்தி அரசுடைமையாக்கினர். ஆனால் அவர் பயன்படுத்திய கரலாக்கட்டையை மட்டும் சத்யராஜ் சத்யராஜ் வீட்டிலேயே இருக்கிறது.
இதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்து உள்ளார்.